என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 13 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டி மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என 2 பிரிவிலும் நடைபெறுகிறது.
    • இந்திய வீரர்களான அரிகிருஷ்ணா, எரிகேசி ஆகியோர் 'டிரா' செய்தனர்.

    ஆம்ஸ்டார்டா:

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ் ஆன் ஜீயில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டி மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என 2 பிரிவிலும் நடைபெறுகிறது.

    மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, நெதர்லாந்தை சேர்ந்த மேத்ஸ் வார்மர் டாமை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.

    பிரக்ஞானந்தா முதல் சுற்றில் 'டிரா' செய்தார். அதை தொடர்ந்து அவர் 3 சுற்றுகளில் வெற்றி பெற்றார். தற்போது 'டிரா' செய்துள்ளார்.


    உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் 5-வது சுற்றில் ஜெர்மனி வீரர்வின் சென்ட் கெய்மரை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான அரிகிருஷ்ணா, எரிகேசி ஆகியோர் 'டிரா' செய்தனர்.

    5 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடன் இணைந்து தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    குகேஷ் 3.5 புள்ளியுடனும், அரிகிருஷ்ணா 3 புள்ளியுட னும் 3 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர்.

    • இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
    • சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று (ஜனவரி 23) கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஒருபக்கம் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்திய அணி 12.5 ஓவர்களில் 133 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.

    இதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

    முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் இடம்பெற்றுள்ளார். இவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    • முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 114 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடந்த நாக் அவுட் சுற்று போட்டியில் சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மின்னல் காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. ஆலிவர் டேவிஸ் 36 ரன்னும், மேத்யூ கைக்ஸ் 28 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி சேலஞ்சர்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் வென்றார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீராங்கனையும், போலந்தைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்விடோலினா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மேடிசன் கீஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், மேடிசன் கீசுடன் மோதுகிறார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து வென்றது.

    கொல்கத்தா:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் சிறப்பாக ஆடி 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    தொடர்ந்து இறங்கிய திலக் வர்மா அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றது.

    3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 79 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன் குவித்தார்.

    இறுதியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • நடந்து முடிந்த ஐபிஎல் 2025 ஏலத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை பஞ்சாப் அணி கைப்பற்றியது.
    • தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு அணியிலிருந்து உறுதியான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை

    பிரபல வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஆகாஷ் சோப்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வெளியேறுவது குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பொய் கூறுவதாக என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் 2025 ஏலத்தில் ஷ்ரேயாஸ் அய்யரை பஞ்சாப் அணி கைப்பற்றியது. கேகேஆர் கேப்டனாக வெற்றிகளை பெற்றுத்தந்த ஷ்ரேயாஸ் ஏன் இந்த முறை அவ்வணியில் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு சமீபத்திய நேர்காணலில் பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர், அவரைத் தக்கவைத்துக்கொள்வது தொடர்பாக கேகேஆர் முயற்சி எடுக்காததால் குழப்பம் மற்றும் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.

     

    தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு அணியிலிருந்து உறுதியான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இது இறுதியில் பரஸ்பர பிரிவிற்கு வழிவகுத்தது என்று கூறினார்.

    தற்போது இதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, கேகேஆர் மற்றும் ஷ்ரேயாஸ் இடையே தக்கவைப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் யார் உண்மை கூறுவது, யார் பொய் கூறுவது என்ற குழப்பம் எழுந்துள்ளது. 

    • இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இப்போட்டியில் பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கியது

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்தார்.

    61 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 80 போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 68 ரன்கள் விளாசினார்.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பில் சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் அட்டமிழந்தார்.

    அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டக்கெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இவரை வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார்.

    ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டன் ரன்ஏதும் எடுக்காமலும் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி பந்தில் மார்க் வுட் ரன்அவுட் ஆக இங்கிலாந்து 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

    • பஞ்சாப் அரசு லாகூர் மற்றும் ராவல்பிண்டி போட்டிகளுக்காக 12,500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கிறது.
    • கராச்சியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது.

    பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. லாகூர் மற்றும் ராவல் பிண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் இடங்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான பணிகளை பஞ்சாப் மாகாண அரசு தொடங்கியுள்ளது.

    போட்டிகள் மற்றும் பங்கேற்கும் அணிகளுக்காக பஞ்சாப் அரசு 12,500 காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருக்கிறது. சிறப்பு கமாண்டர்கள் உள்பட 7,600 போலீஸ்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் லாகூரில் நடைபெறும் போட்டிகளுக்காக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    411 சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட 4,500 போலீசார் ராவல்பிண்டியில் பாதுகாப்பை மேற்பார்வையிட இருக்கிறார்கள். தேவைப்பட்டால் ராணுவ உதவியுடன் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு மூலம் போட்டிகள் கண்காணிக்கப்படும். போலீஸ் உடன் துணை ராணுவ ரேங்கில் உள்ள அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கராச்சியில் நடைபெறும் போட்டிகளுக்காக குறைந்தபட்சம் 5 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்கள் என சிந்து காவல்துறைக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் முன்னதாக 2023-ல் ஆசிய கோப்பை தொடரை நடத்தியது. ஆனால் நான்கு போடடிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற்றது. மற்ற போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் 11 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். இந்தியா தகுதி பெறுவது பொறுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவது முடிவு செய்யப்படும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுடன் லாகூர் மற்றும் கராச்சியில் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

    கராச்சியில் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க போட்டி நடைபெறுகிறது. முத்தரப்பு தொடரில் பிப்ரவரி 12 மற்றும் 14-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் போட்டி நடைபெற இருக்கிறது.

    லாகூர் மற்றும் ராவல்பிண்டி பஞ்சாப் மாகாண எல்லையிலும், கராச்சி சிந்து மாகாண எல்லையிலும் உள்ளன. இந்த பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.

    • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் ஆவல்

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கவுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்

    இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைத்தளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.

    • காலிறுதியில் சின்னர் 6-3, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் மினாரை எளிதாக தோற்கடித்தார்.
    • அமெிரிக்க வீரர் ஷெல்டன் இத்தாலி வீரரை 6-4, 7-58, 4-6, 7(7)-6(4) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையருக்கான இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவிவன் ஷெல்டன், இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை ஷெல்டன் 6-4 எனவும், 2-வது செட்டை 7-5 எனவும் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 4-6 என இழந்தார். 4-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 4-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(4) என ஷெல்டன் கைப்பற்றினார். இதனால் 6-4, 7-58, 4-6, 7(7)-6(4) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரரான இத்தாலியின் சின்னர் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். மினார் சொந்த மண்ணில் விளையாடினாலும் முதல் நிலை வீரரான சின்னரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    இதனால் சின்னர் 6-3, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளைதமறுதினம் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் சின்னர்- ஷெல்டர், ஜோகோவிச்- ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ஷெல்டனை எளிதாக வீழ்த்தி சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் ஜோகோவிச்- ஸ்வெரேவ் இடையிலான ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×