என் மலர்
விளையாட்டு
- வெஸ்ட் இண்டீஸ் உடன் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் சி பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய 11 வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளத.
வெஸ்ட் இண்டீஸே் அணி:-
ஷாய் ஹோப் (கேப்டன் அண்டு விக்கெட் கீப்பர்), ஜான்சன் சார்லஸ் (வி.கீப்பர்), ராஸ்டன் சேஸ் மேத்யூ போர்ட், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோதி, ரோவ்மன் பவல், ரூதர்போர்டு, குயின்டின் சாம்ப்சன், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியா ஷெப்பர்டு.
வெஸ்ட் இண்டீஸ் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 1-2 எனத் தோல்வியடைந்தது. உலகக் கோப்பைக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 27 முதல் 31-ந்தேதி வரை 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஷாய் ஹோப் SA20 தொடரில் விளையாடியதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடிய 11 பேர் தற்போது மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
- வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளது.
- வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் நிலைப்பாடு எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோஹ்சின் நக்வி, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவியில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் ஷெரீப் உடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐசிசி விசயம் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் களத்தில் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை அனுப்ப வேண்டுமா? அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் தவிர்க்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதான் வங்கதேசத்திற்கு ஆதரவான முடிவாக இருக்கக்கூடும் எனவும் பாகிஸ்தான் நினைக்கிறது.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர் மற்றும் லூசியானோ டார்டேரி மோதினர்.
- முதல் 2 செட்டை சின்னர் எளிதாக வென்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் அர்ஜெண்டினா வீரர் லூசியானோ டார்டேரி மோதினர்.
முதல் 2 செட்டை சின்னர் எளிதாக வென்றார். 3-வது செட் பரபரப்பாக சென்றது இறுதியில் அந்த செட்டையும் சின்னர் கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு சின்னர் முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் ஆஸ்திரேலியா வீராங்கனை மேடிசன் இங்கிலிஸ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.
- களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டம் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மாவைப் பார்த்து அதே வேகத்தில் ஆட முயற்சிக்கக் கூடாது என்றும் மூத்த வீரர் ரகானே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிர்முனையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதைப் பார்த்து, சஞ்சு சாம்சன் தானும் அவரைப் போலவே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார். தயவு செய்து அபிஷேக் சர்மா செய்வதை நீங்களும் செய்ய முயற்சிக்காதீர்கள். சஞ்சு சாம்சனுக்கு என்று தனித்திறமை உள்ளது.
அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அவர் தனது பாணியில் விளையாடி ரன்களைக் குவித்தார். அதைத் தான் இங்கேயும் செய்ய வேண்டும். அபிஷேக் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும்.
இந்த நேரத்தில் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்தத் தொடர் முழுவதும் மற்றும் உலகக்கோப்பையிலும் நீங்கள்தான் துவக்க வீரர், உங்கள் இடத்திற்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.
இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், சஞ்சு சாம்சனுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரது பாணியில் விளையாட அனுமதித்தால் அவர் நிச்சயம் ஒரு மேட்ச் வின்னராக மாறுவார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் எப்படி ஆடுவார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எடுத்த உடனே அதிரடியாக ஆடாமல், முதல் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் களத்தில் நிலைத்து நிற்க வேண்டும். களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.
என்று ரகானே கூறினார்.
- சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார்.
- இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அவர் இரண்டு முறை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
தோனி பிறகு அணியின் கீப்பராக சஞ்சு செயல்படுவார் என சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்நிலையில் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் 3 போட்டிகள் முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி 28-ந் தேதி நடக்கவுள்ளது.
காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்து வரும் 2 போட்டிகளில் திலக் வர்மா இடம் பெற மாட்டார் எனவும் அடுத்த இரு போட்டிகளுக்கும் இந்திய அணியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் பயணிப்பார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபியின் போது ஏற்பட்ட வயிற்றுத் தசைப்பிடிப்பு காரணமாக திலக் வர்மா இந்த மாத தொடக்கத்தில் ராஜ்கோட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருக்கும் அவர், காயத்தில் இருந்து மீள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கு முன்பு அவர் முழு உடற்தகுதியை எட்டுவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு, தற்போதைய தொடரில் இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023 டிசம்பருக்குப் பிறகு ஐயர் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
- எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணி எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்து வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. அவர்கள் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய அணி தற்போது போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறது. இந்தத் தொடர் ஒரு ஆரம்பம்'மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இன்னும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே இந்தியா எளிதாக வெல்வது அணியின் திறமையைக் காட்டுகிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என கவாஸ்கர் கூறினார்.
மேலும் போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா நினைத்தால் இரண்டு அணிகளைக் களமிறக்கலாம். அப்படி இரண்டு அணிகள் விளையாடினாலும், அந்த இரண்டு அணிகளுமே நிச்சயம் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அளவிற்கு அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று புகழ்ந்தார்.
அதற்குச் சிரித்துக்கொண்டே சுனில் கவாஸ்கர், "உண்மையில் என்னைக் கேட்டால், அரையிறுதி மட்டுமல்ல, அந்த இரண்டு இந்திய அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கோப்பைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் என்று சொல்வேன்" என்று அதிரடியாகக் கூறினார். அதாவது இந்திய அணியின் முதல் தர அணியும், இரண்டாம் தர அணியும் மோதினாலே அது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போலத் தான் இருக்கும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதினர்.
மெல்போர்ன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ரைபகினா (கஜகஸ்தான்) 6-1, 6-3 என்ற கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டார்.
- பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகித்து வருகிறது. இதனிடையே, 1993ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திரஜித் சிங் பந்த்ரா (வயது 84) செயல்பட்டார். அவர் பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ முன்னாள் தலைவர் இந்திரஜித் சிங் பந்த்ரா நேற்று மாலை 6.30 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்திரஜித் சிங் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமண்டா அனிசிமோவா மற்றும் வாங் சின்யு ஆகியோ மோதினர்.
- இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக சென்றது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் செக் ஜக்குப் மென்சிக் ஆகியோர் மோத இருந்தனர். ஆனால் செக் வீரர் காயம் காரணமாக விலகியதால் விளையாடமலே ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, அமெரிக்க வீரரான டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா மற்றும் சீன வீராங்கனை வாங் சின்யு ஆகியோ மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட் பரபரப்பாக சென்றது. முதல் செட்டை அமெரிக்க வீராங்கனை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டும் பரபரப்பாக சென்றது. ஆனாலும் இதிலும் அமெரிக்க வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு அமண்டா அனிசிமோவா தகுதி பெற்றார்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
- இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
அந்த வகையில் இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். இந்த வகையில் பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது.
இரு நாட்டு தொடருடன், 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையையும் சேர்த்தால் இந்திய அணி தொடர்ச்சியாக தனதாக்கிய 11-வது தொடராக இது அமையும்.
154 ரன் இலக்கை இந்திய அணி 60 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்துள்ளது. முழு உறுப்பினர் நாடுகள் இடையே நடந்த டி20 கிரிக்கெட்டில் 150 ரன்னுக்கு மேலான இலக்கை 10 ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்த முதல் அணி இந்தியா தான்.
- இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
- மும்பை அணியுடனான போட்டியில் சென்னை கேப்டன் விக்ராந்த் சதம் அடித்தார்.
ஒவ்வொரு வருடமும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சிசிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் வேல்ஸ் சென்னை கிங்ஸ், கர்நாடகா புல்டோசர்கள், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பஞ்சாப் தே ஷெர், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் சென்னை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது. அரையிறுதிக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்ற சொல்லப்பட்டது.
சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மும்பை அணியுடனான போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க வேண்டும். இது நடந்தால் தான் சென்னை அணி அரையிறுதிக்கு போக முடியும் என்ற சூழல் உருவானது.
கர்நாடகா அணி போஜ்புரி அணியை தோற்கடிக்க மறுபக்கம் சென்னை அணி மும்பைக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் விக்ராந்த் நேற்றைய முக்கியமான போட்டியில் சதம் விளாசி தன் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும் ஆதவ் கண்ணதாசன் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்
விக்ராந்த் சதம் அடித்த பிறகு மெர்சல் விஜய் ஸ்டைலில் அந்த சதத்தை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தவெக தொண்டர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.






