என் மலர்
விளையாட்டு
- சட்டரீதியிலான நடைமுறைகள் நிறைவுபெறுவதாக தகவல்.
- பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சாஹல் மற்றும் தனஸ்ரீ இடையிலான விவகாரத்து தொடர்பாக சட்டரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுபெறுவதாக புதிய தகவல் வெளியானது. முன்னதாக சாஹல் மற்றும் தனஸ்ரீ ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.

மேலும், சாஹல் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மனைவி தனஸ்ரீயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுப்பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "நான் கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு பலமுறை கடவுள் என்னை பாதுகாத்துள்ளார். இதனால் நான் எத்தனை முறை காப்பாற்றப்பட்டேன் என்று எனக்கே தெரியாததை தான் நினைத்துப் பார்க்க வேண்டும். எனக்கே தெரியாத அளவுக்கு என்னுடன் இருந்ததற்கு கடவுளுக்கு மிக்க நன்றி. ஆமென்," என குறிப்பிட்டுள்ளார்.
- வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
- முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேலும், 49.4 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்தப் போட்டியில் விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை முகமது சமி படைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய போது, முகமது சமி 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தனது 104-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முகமது சமி அஜித் அகார்கர் சாதனையை முறியடித்துள்ளார். அஜித் அகார்கர் 133 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
68 ரன்களை எடுத்திருந்த வங்காளதேசம் அணியின் ஜேகர் அலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முகமது சமியின் 200-வது விக்கெட்டாக மாறினார். சர்வேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முகமது சமி இரண்டாவது இடத்தில் உள்ளார். 102 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார்.
பந்துகள் அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முகமது சமி உருவெடுத்துள்ளார். இவர் தனது 5,126-வது பந்தில் 200 விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 5240 பந்துகளை வீசி இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
- 228 ரன்களை சேர்த்த வங்காளதேசம் அணி ஆல் அவுட் ஆனது.
- இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து 49.4 ஓவர்களில் 228 ரன்களை சேர்த்த வங்காளதேசம் அணி ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ரிடோய் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.
இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 229 ரன்களை துரத்தும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 261-வது போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை ரோகித் சர்மா தற்போது முந்தியுள்ளார்.
276வது போட்டியில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் 222 இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.
இன்றைய போட்டியை பொருத்தவரை கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். தஸ்கின் அகமது வீசிய பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா ரிஷத் பிடித்த கேட்ச்-இல் விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைத்தது.
- டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த எம்.எஸ். டோனி அப்போது முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக எம்.எஸ். டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெறும் வரை எம்.எஸ். டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைப்பதாக அறிவித்த பிறகே, எம்.எஸ். டோனி ஓய்வு குறித்த பேச்சுகள் ஓரளவுக்கு ஓய்ந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ். டோனி தனது ஓய்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது, "நான் 2019-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அதன் பிறகு தற்போது வரை நான் செய்து கொண்டிருப்பது எல்லாமே, கடைசிவரை கிரிக்கெட்டை கொண்டாட வேண்டும் என்பது தான். கடந்த சில ஆண்டுகளில், உங்களுக்கே தெரியும், என்னால் விளையாட முடியும் என்று. நான் பள்ளி சமயத்தில் இருந்ததை போல், அவற்றை கொண்டாடி மகிழ வேண்டும்."
"பள்ளி காலங்களில் தினமும் மாலை 4 மணி எனக்கு விளையாட்டு நேரம், நான் மகிழ்ச்சியாக வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவேன். சமயங்களில் வானிலை காரணமாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை எனில், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். அதே போன்ற அப்பாவித்தனமாக இப்போதும் விளையாட வேண்டும்," என்று தெரிவித்தார்.
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பிறகு, களமிறங்கிய அந்த அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. ஜேகர் அலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆக இருந்த நிலையில், ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டதால் 114 பந்துகளை ஆடி 68 ரன்களை சேர்த்தார்.

மறுப்பக்கம் ரிடோய் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இவர் 100 ரன்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 228 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டார்.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த வகையில், போட்டியின் 8-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வங்காளதேசம் அணியின் தன்சித் ஹாசன் (25) தனது விக்கெட்டை பறிக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து இதே ஓவரின் மூன்றாவது பந்தை முஷ்ஃபிகுர் ரஹிம் எதிர்கொள்ள அவரும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுக்கும் சூழல் உருவானது. அதன்படி 8-வது ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட் எடுத்தால் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருக்கலாம்.
இந்த பந்தை எதிர்கொண்ட ஜேகர் அலி தடுப்பாட்டம் ஆட முயற்சித்தார். எனினும், இந்த பந்து அவரது பேட்-இல் பட்டதும் ஸ்லிப்-இல் நின்றிருந்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆக மாறியது. பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக அந்த கேட்ச்-ஐ தவறவிட்டார்.
கேட்ச்-ஐ தவறவிட்டது, அக்சர் படேலுக்கு ஹாட் ட்ரிக் விக்கெட் பறிபோனது என களத்தில் கோபமுற்ற ரோகித் சர்மா தனது கைகளால் மைதானத்தின் தரையை வேகமாக குத்தினார். மேலும் அக்சர் படேலிடம் கேட்ச்-ஐ தவற விட்டதற்கு மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சௌமியா சர்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்தடுத்த களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 50 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணி சார்பில் முகமது சமி மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வங்காளதேசம் சார்பில் துவக்க வீரரான தன்சித் ஹாசன் மட்டும் 25 ரன்களை எடுத்தார்.
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால், வெற்றியுடன் தொடரை தொடங்க இரு அணிகளும் மும்முரம் காட்டுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் பட்டேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது சமி, குல்தீப் யாதவ்.
- ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 3-வது இடத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் 10-வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-ம் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது.
- இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கின்றனர்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 320 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் ஷமான் காயமடைந்தார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகே அவர் களத்திற்கு வந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கிறது. இந்த அணியுடன் காயமடைந்த பகர் ஷமான் செல்லவில்லை. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக இமாம் உல் ஹக் அணியில் இணைந்துள்ளார். பகர் ஷமான் விலகியது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- சாம்பியன் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது.
- போட்டி தொடங்குவதற்கு முன் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது. இதில் விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேடிங்க் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 320 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
முன்னதாக போட்டி தொடங்கும் முன்பு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இது அனைவருக்கும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது போல இருந்தது. போர் விமானங்கள் வந்ததும் ரசிகர்கள் மட்டுமின்றி நியூசிலாந்து வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக நியூசிலாந்து பேட்டர் இந்த சத்தத்தை கேட்டதும் குணிந்து கொள்வார். இதனை பார்த்த சக வீரர் 'நீ நினைப்பது போல இல்லை' என்பது போல சிரித்து கொள்வார். மேலும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் காதுகளை மூடிக்கொண்டு பயத்துடன் இருந்தார். பின்னர் சாதாரண நிலைக்கு சென்று விடுவார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- இந்திய ஆடவர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
- பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.
புவனேஸ்வர்:
6-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி முந்தைய நாள் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் குர்ஜத் சிங் கோல் அடித்தார். நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை சந்திக்கிறது.
புரோ ஹாக்கி லீக் தொடரில் பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.






