search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Hockey League"

    • இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது.
    • இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    புவனேஸ்வர்:

    9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.

    இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை பெற்றது. 4-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

    • 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார்.
    • 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

    சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார். இதற்கு 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

    கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தீபிகா குமாரி, லால்ரெம்சியாமி கைகொடுக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்திய பெண்கள் அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது....

    • இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
    • இந்திய தரப்பில் தீப் கிரேஸ், நவ்னீத் கவுர், சோனிகா, வந்தனா ஆகியோர் கோல் அடித்தனர்.

    ரோட்டர்டாம்:

    9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த போட்டியில் ஏற்கனவே அர்ஜென்டினா அணி (42 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டது.

    இந்திய அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் நேற்று நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. இந்திய தரப்பில் தீப் கிரேஸ், நவ்னீத் கவுர், சோனிகா, வந்தனா ஆகியோர் கோல் அடித்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 27 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. அமெரிக்கா 5 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் அமெரிக்காவை இன்று (இரவு 8 மணி) மீண்டும் இதே மைதானத்தில் சந்திக்கிறது.

    ×