என் மலர்
விளையாட்டு
- பிரக்ஞானந்தா 8-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
- குகேஷ் 10 புள்ளி அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டுள்ளார்.
புதுடெல்லி:
உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,833 புள்ளி), ஜப்பானின் ஹிகாரு நகமுரா (2,802) முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் (2,787) 10 புள்ளிகள் அதிகரித்து 2 இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா (2,758) 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டாப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடி மோதியது.
இதில் இந்திய ஜோடி 23-25, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- முதலில் ஆடிய பெங்களூரு 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய எல்லீஸ் பெர்ரி அரை சதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராக்வி பிஸ்ட் 33 ரன் எடுத்தார்.
டெல்லி சார்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ஜெஸ் ஜான்சேன், ஷபாலி வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
இறுதியில், டெல்லி அணி 15.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்பொட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, பின்லாந்தின்ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 7-6 (14-12), 10-8 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்கள் விளாசினார்.
- ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடியவர் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியுள்ளார். இவர் தற்போது உள்நாட்டு போட்டிகளில் விதர்பா அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜய் ஹசாரே (50 ஓவர் போட்டி) தொடரில் 9 போட்டிகளில் ஐந்து சதம், ஒரு அரைசதத்துடன் 779 ரன்கள் விளாசினர். இதனால் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடம் கிடைக்கவில்லை.
தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேரளாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார். இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மொத்தம் 860 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 சதம் அடங்கும். மொத்தம் இந்த சீசனில் 9 சதங்கள் அடித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்திற்குப் பிறகு சிறப்பாக விளையாடும் உங்களுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கருண் நாயர் பதல் அளித்து கூறியதாவது:-
இந்த கேள்வியை கேட்பதற்கு நான் சரியான நபர் கிடையாது. இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது. நான் சொல்வது எல்லாம், ஒவ்வொரு போட்டியிலும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என பார்க்கிறேன். அது நடைபெற்றால் (இந்திய அணியில் தேர்வு செய்தால்) அது நடக்கும். என்னுடைய வேலையை நான் சிறப்பாக செய்ய வேண்டும். அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு கருண் நாயர் தெரிவித்தார்.
- 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து இங்கிலாந்து 179 ரன்னில் சுருண்டது.
- தென்ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் "பி" பிரிவு கடைசி லீக் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பில் சால்ட், டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் டக்-அவுடடில் வெளியேறினார்.
அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. டக்கெட் 24 ரன்னிலும், ஜோ ரூட் 37 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 19 ரன்னிலும், பட்லர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 38.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மகாராஜ் 2 விக்கெட்டும் லுங்கி நிகிடி, ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டப்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிக்கெல்டன் 27 ரன்னில் வெளியேறினார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டுஸ்சன் உடன் ஹென்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரும் அரைசதம் விளாசினர்.
வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளாசன் 56 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுஸ்சன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.
29.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுஸ்சன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா "பி" பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடம் பிடித்துள்ளது.
ஏ பிரிவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் தோல்வியடையும் அணியடன் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் மோதும்.
- இரண்டு போட்டிகள் டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.
- பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட்டின் முழுத் தொகையும் ரசிகர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி ஆகியவற்றிற்கான டிக்கெட் பணம் திருமப் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
மார்ச் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துளளது.
மார்ச் 25-ந்தேதி ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மழைக் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.
27-ந்தேதி பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டியும் மழைக்காரணமாக டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 28-ந்தேதி) ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கீட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டது.
- தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
- இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அனி திணறியது. இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் 2-வது அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.
- இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோரூட் 37 ரன்கள் எடுத்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், டக்கெட் களமிறங்கினர். தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சால்ட் 8 ரன்னிலும் ஸ்மித் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டக்கெட் 24 ரன்னிலும் ஹரி ப்ரூக் 19 ரன்னிலும் ரூட் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 9, ஓவர்டேன் 11, ஆர்ச்சர் 25, பட்லர் 21 என வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இறுதிபோட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
- நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் எந்த இரண்டு அணிகள் இறுதிபோட்டியில் மோதும் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் எனவும் இதில் 1 ரன்னில் இந்தியா வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். நான் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்தியா தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி வெல்லும்.
இந்தியா தான் இப்போது உலகின் சிறந்த ஒருநாள் அணியாக உள்ளது. நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் உள்ளது. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் மோதும். அதில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மேலும் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இருக்கிறார்.
- ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது.
- நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நாளை நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது.
முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
\இந்நிலையில் துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிரேஸ்வெல் பேசியது பின்வருமாறு.
அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது சுவாரசியமாகும்.
எனவே இந்த ஆவலான சூழ்நிலைகளில் கற்றுக்கொண்டு நன்றாக முயற்சித்து விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனவே துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம். மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.
ஐசிசி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரியப் போட்டி. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்பாக நாங்கள் நிறைய வேகத்தை எடுத்துச் செல்ல முடியும்.
என்று பிரேஸ்வெல் கூறினார்.






