என் மலர்
விளையாட்டு
அபுதாபி:
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்னில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அபுதாபியில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.
பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வார்னர் 33 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வில்லியம்சன் 26 பந்தில் 41 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ரபடா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது
தவான் அதிகபட்சமாக 31 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி), ரிஷப் பண்ட் 28 ரன்னும் எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட்டும். புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும், கலீல் அகமது, டி. நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஐதராபாத் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-
பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.
ரஷித்கானும், புவனேஸ்வர்குமாரும் அபாரமாக பந்து வீசினார்கள். மிச்சேல்மாஸ் காயமடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இளம் வீரர் அபிஷேக் சிறப்பாக பந்து வீசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
163 ரன். எடுக்கக்கூடிய இலக்குதான். ஆனால் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஐதராபாத் அணி எங்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3-ந் தேதி எதிர்கொள்கிறது.
தனது முதல் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்ற கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது. சுப்மான் கில், மோர்கன், ரஸ்செல், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் 2 ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அவரும் பார்முக்கு திரும்பினால், கொல்கத்தா மேலும் வலுவடையும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம திறமையுடன் மல்லுக்கட்டுவதால் ரசிகர்களுக்கு குதூகலமான விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரர் பெரேட்டினி (இத்தாலி) 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வாசெக் போஸ்பிசிலை (கனடா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிகைல் மிர்ரை (சுவீடன்) வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார். முன்னதாக 12 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜெராசிமோவை (பெலாரஸ்) வெளியேற்றி வெற்றியோடு தொடங்கினார். பிரெஞ்ச் ஓபனில் தனது 94-வது வெற்றியை பதிவு செய்த நடால் அடுத்து அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டுவை சந்திக்கிறார்.
பெண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் தடையை கடப்பதற்கு 2 மணி 15 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அவர், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய மயார் ஷெரிப்பை (எகிப்து) 6-7 (9-11), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 62 நிமிடங்களில் மேடிசன் பிரிங்கிலை (அமெரிக்கா) துவம்சம் செய்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெனிபர் பிராட்டி 4-6, 6-3, 7-9 என்ற செட் கணக்கில் 17 வயதான கிளாரா டாசனிடம் (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 45 நிமிடங்கள் நீடித்தது. சோபியா கெனின் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.
டிவில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) படிக்கல் 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன்பிஞ்ச் 35 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம்துபே 10 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்சும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது.
இஷான் கிஷன் 58 பந்தில் 99 ரன்னும் (2பவுண்டரி , 9சிக்சர்), போலார்ட் 24 பந்தில் 60 ரன்னும் (3பவுண்டரி, 5சிக்சர்) எடுத்தனர். உதனா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், சாஹல், ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
ஆட்டம் டை ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்னே எடுத்தது. பெங்களூர் அணி 8 ரன் இலக்கை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்னை எடுத்தது.
இந்த தொடரில் முடிந்த 2-வது சூப்பர் ஓவர் ஆகும். ஏற்கனவே டெல்லி அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். மும்பை 2-வது தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
இந்த போட்டியின் இரு அணியிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இதில் டிவில்லியர்சின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. வெற்றி இரு அணிகளின் பக்கம் மாறிமாறி இருந்தது. கடைசியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதே நேரத்தில் இஷான் கிஷனும், போலார்ட்டும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தார். அவர் நல்ல நிலையில் இல்லாததால் சூப்பர் ஓவரில் களம் இறக்கவில்லை.
சூப்பர் ஓவரில் போதுமான ரன்னை எடுக்காததால் தோல்வியை தழுவினோம். இது ஒரு சிறந்த ஆட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி 4 -வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 3-ந்தேதி துபாயில் சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்பை 1-ந்தேதி எதிர் கொள்கிறது.






