என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதன்முறையாக சூப்பர் ஓவரில் தோற்றுப்போன பும்ரா
Byமாலை மலர்29 Sep 2020 10:15 AM GMT (Updated: 29 Sep 2020 10:15 AM GMT)
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய யார்க்கர் புகழ் பும்ரா, முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 201 ரன்கள் சேர்த்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியனஸ் களம் இங்கியது.
ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்திக்கும் நிலையில் இருந்தது. இஷான் கிஷன் 99 ரன்களும், கீரன் பொல்லார்டு 60 ரன்களும் விளாச மும்பை வெற்றியை நோக்கி சென்றது. இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் 201 ரன்களே அடித்ததால் போட்டி டையில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 7 ரன்கள் அடித்தது, பின்னர் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. பும்ரா அந்த ஓவரை வீசினார். முதல் மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3-வது பந்தை டி வில்லியர்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் ஆர்சிபி அணி வெற்றியை உறுதி செய்தது. கடைசி பந்தில் ஒரு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் விராட் கோலி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆன பும்ரா இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவரில் பந்து வீசி உள்ளார். இதில் நேற்று மற்றுமே தோல்வியை சந்தித்துள்ளார்.
2017-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராக மும்பை சூப்பர் ஓவரை சந்தித்தது. 11 ரன்னுக்குள் கட்டுப்பத்தினால் வெற்றி என்ற நிலையில் 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் இருந்தும் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை.
2019-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக முதலில் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் மும்பை 3 பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தற்போது 7 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியாத நிலை பும்ராவிற்கு ஏற்பட்டு விட்டது,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X