என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ், தேசிய சாதனையும் படைத்தார்.
    உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடிகளில் கடந்து 2-வது தங்கப்பதக்கம் வென்றார்.

    ஏற்கனவே 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் 54.07 வினாடிகளில் கடந்து முந்தைய தேசிய சாதனையான 54.10 வினாடியை முறியடித்தார்.

    உஸ்பெகிஸ்தான் ஓபன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 18 தங்கம், 7 சில்வர், நான்கு வெண்கல பதக்கம் என 29 பதக்கங்கள் வென்றது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான வெற்றிக்கு பும்ரா மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோரின் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது முக்கிய காரணமாகும்.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 150 ரன்கள் அடித்தது.

    பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. முதலில் பேர்ஸ்டோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐதராபாத் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டெத் ஓவர்களில் ட்ரென்ட் போல்ட், பும்ரா சிறப்பாக பந்து வீச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 137 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா நான்கு ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். போல்ட் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

    பும்ரா குறித்து ட்ரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘பும்ரா போன்ற பந்து வீச்சாளர் ஒருவர் செயல்படுவதை பார்க்க சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த ஸ்பெல் முழுவதும் என்ன செய்ய வேண்டும் என்பதில், மிகவும் தெளிவாக உள்ளார்.

    ஆனால், டெத் ஓவர்களில் என்னுடைய தனிப்பட்ட முறையில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவர் என்னுடைய வேலையை மிகவும் எளிதாக்கி விடுகிறார். சரியான அணியுடன் இந்தத் தொடர் முழுவதும் இந்த உத்வேகத்தை அப்படியே கொண்டு செல்வோம் என்று நம்புகிறோம்’’ என்றார்.
    சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் நேரம் செல்லசெல்ல மிகமிக ஸ்லோவாகிறது. இதனால் பேட்டிங் தேர்வு செய்தேன் என்றார் விராட் கோலி.

    ராயல் சேலங்சர்ஸ் பெங்களூர்

    ஆர்சிபி அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. ராஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வாஷிங்டன் சுந்தர், 7. ஷபாஸ் அகமது,  8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி:

    1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. ஷாகிப் அல் ஹசன், 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. ஹர்பஜன் சிங், 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

    சென்னையில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகாக் 39 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி), போல்லார்ட் 22 பந்தில் 35 ரன்னும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முஜிபூர் ரகுமான், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 151 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. அந்த அணி 19.4 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் 13 ரன்னில் தோல்வியை தழுவியது.

    தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 22 பந்தில் 43 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் வார்னர் 34 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், ராகுல் சாகர் தலா 3 விக்கெட்டும், பும்ரா, குர்னால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஐதராபாத் அணியின் சோகம் தொடர்கிறது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ரன்னிலும், பெங்களூரிடம் 6 ரன்னிலும், தோற்று இருந்தது.

    ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான ஜானி பேர்ஸ்டோவ் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.

    ஐ.பி.எல். போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்த 13-வது வீரர் பேர்ஸ்டோவ் ஆவார். இந்த சீசனில் முதல் வீரராக அவர் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறி இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்த வீரர்கள் வருமாறு:-

    1.முசாவிர் கோட்டே (மும்பை)-2008.

    2.மிஸ்பா-உல்-ஹக் (பெங்களூர்)-2008.

    3.அசுதோகர் (ராஜஸ்தான்)-2009.

    4.ஜடேஜா (சென்னை) -2012.

    5.சவுரப் திவாரி (பெங்களூர்) -2012.

    6.யுவராஜ் சிங் (ஐதராபாத்)- 2016.

    7.தீபக் ஹூடா (ஐதராபாத்) -2016.

    8. வார்னர் (ஐதராபாத்) -2016.

    9.ஜேக்சன் (கொல்கத்தா) -2017.

    10.ரியான் பரங் (ராஜஸ்தான்) -2019.

    11.ஹர்த்திக் பாண்ட்யா (மும்பை) -2020.

    12. ரஷீத்கான் (ஐதராபாத்) -2020.

    13.பேர்ஸ்டோவ் (ஐதராபாத்) -2021.

    விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐதராபாத்தை 6 ரன்னிலும் தோற்கடித்தது.

    இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி உள்ளது.

    கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை விழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் மும்பையிடம் 10 ரன்னில் தோற்றது. அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்களில் கொல்கத்தா 14-ல் பெங்களூர் 12-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் தோற்றுள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது டெல்லியா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல், பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார்.
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 2 சிக்சர் விரட்டினார். இதையடுத்து ஐ.பி.எல்.-ல் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 217 ஆக (203 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்திய வீரர் என்ற சாதனையை சென்னை கேப்டன் டோனியிடம் (216 சிக்சர்) இருந்து தட்டிப்பறித்தார். 

    ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் (351 சிக்சர்), பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் (237 சிக்சர்) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார். மும்பை வீரர் பொல்லார்ட் நேற்று 200 சிக்சர்களை (167 ஆட்டத்தில் 201 சிக்சர்) கடந்தார்.

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    அல்மாதி:

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா 9-2 என்ற புள்ளி கணக்கில் அலிரிஜா நோஸ்ராடோலாவை (ஈரான்) தோற்கடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    மற்றொரு இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் கால்இறுதியில் யாங்சியோக்கையும் (தென்கொரியா), அரைஇறுதியில் பில்குனையும் (மங்கோலியா) சாய்த்து இறுதிப்போட்டியில் தகுட்டோ ஓட்டோகுரோவை (ஜப்பான்) எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் முந்தைய ஆட்டங்களின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் வலியால் அவதிப்பட்ட பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் விலகினார். ஒலிம்பிக் நெருங்கும் நேரத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியதால் ஒதுங்கிய பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கத்துடன திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

    எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் அடித்திருந்த ரன்கள் சவாலானவை என்றே நினைக்கிறேன். 

    பவர் பிளேயை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இரு அணிகளுமே முயற்சித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடு ஓவர்களில் நாங்கள் சற்று சிறப்பாக பேட் செய்தோம் என நான் நினைக்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் அனைத்து வீரர்களும் பல போட்டிகள் விளையாடியுள்ளனர். 

    பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது ஃபீல்டிங் இன்றைய போட்டியில் அசத்தலாக இருந்தது. இன்றைய போட்டியில் நடந்த ரன் அவுட்கள் மற்றும் கேட்ச்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார். 
    சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியது, தனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக டோனி கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப், தீபக் சாஹரின் அபார பந்துவீச்சுக்கு (4 விக்கெட்) ஈடுகொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை அணி 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடிய 200-வது ஆட்டம் இதுவாகும். அதாவது ஐ.பி.எல்.-ல் 176 ஆட்டம், சாம்பியன்ஸ் லீக்கில் 24 ஆட்டம் என்று மொத்தம் 200 ஆட்டங்களில் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று 39 வயதான டோனியிடம் கேட்ட போது, ‘மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்’ என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். மேலும் டோனி, ‘இது ஒரு நீண்ட பயணம். வித்தியாசமான சூழல், வெவ்வேறு நாடுகள் என்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு பயணம். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து எனது ஐ.பி.எல். பயணம் தொடங்கியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, துபாயில் எல்லாம் விளையாடி விட்டு மீண்டும் தற்போது சொந்த நாட்டில் விளையாடுகிறேன். ஆனால் எங்களுக்கு மும்பை, சொந்த ஊர் மைதானமாக அமையும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

    பஞ்சாப் அணிக்காக ஆடும் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானுடன் டோனி பேசிக்கொண்டிருந்த காட்சி.


    சென்னை சேப்பாக்கத்தை எடுத்துக் கொண்டால் 2011-ம் ஆண்டு வரை எங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆடுகளமாக அது இருந்தது. அப்போது சுழலுக்கு ஒத்துழைக்கும். வேகப்பந்து வீச்சுக்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் ஆடுகளத்தை மறுசீரமைப்பு செய்த பிறகு அதன் தன்மை மாறி விட்டது. அதன் பிறகு அங்குள்ள சூழலுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

    அதே சமயம் தற்போதைய மும்பை வான்கடே ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எல்லாமே போட்டிக்குரிய தினத்தில் சீதோஷ்ண நிலையை பொறுத்தது. இன்றைய ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் பந்தின் நகர்வு தன்மை நன்றாக இருந்தது. ஆனால் அதிக அளவில் ‘ஸ்விங்’ ஆகவில்லை. பனிப்பொழிவு இல்லாததால் பந்து வீச்சு எடுபட்டது’ என்றார்.

    சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கேப்டன் டோனிக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘டோனியின் நீண்ட பயணத்தை பாராட்டியாக வேண்டும். 200 ஆட்டங்களில் ஆடியுள்ள போதிலும், இன்னும் போட்டியிலும், அணிக்காகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பதில் ஆர்வமுடன் உள்ளார். சென்னை அணி வளர்ந்து நிற்கிறது. அதோடு சேர்ந்து டோனியும் வளர்ந்துள்ளார். அவருக்கும் அணிக்கும் இடையிலான உறவு அருமையானது. கன கச்சிதமானது. சென்னை சூப்பர் கிங்சின் இதயதுடிப்பாக டோனி இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்றார்.
    டி காக் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
     
    ரோகித் சர்மா 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் வெளியேறினார். குவிண்டன் டிகாக் 40 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் பொல்லார்ட் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.

    ஐதராபாத் சார்பில் முஜீப், விஜயசங்கர் தலா 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ்  தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 43 ரன்னில் அவுட்டானார். 

    43 ரன் எடுத்த பேர்ஸ்டோவ்

    அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே 2 ரன்னிலும், வார்னர் 36 ரன்னிலும், விராட் சிங் 11 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 2 விக்கெட் வீழ்ந்தது. 6 ரன்கள் மடடுமே கிடைத்தது. 19வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக ஆடிய விஜயசங்கர் 28 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.

    மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
    ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 150 ரன்கள் எடுத்துள்ளது.
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

    இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. இந்நிலையில் ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். குவிண்டன் டிகாக்(40) முஜீப் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 
    சூர்யகுமார் யாதவை அவுட் ஆக்கிய விஜய் சங்கர்
    கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய பொல்லார்ட், அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். 3 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்த பொல்லார்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக குவிண்டன் டிகாக் 40 ரன்கள் அடித்தார். ஐதராபாத்தை பொறுத்தவரை முஜீப் 2 விக்கெட், விஜய் சங்கர் 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது. 
    கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 6 முறை 20ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 தடவையும் (2012, 2016), இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை வென்று உள்ளன.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி நடைபெறும் இடங்களும், தேதி விவரங்களும் அறிவிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறும் இடங்களின் விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.ஐ.) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    9 இடங்களில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திலும் 20 ஒவர் உலக கோப்பை போட்டி நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, தர்மசாலா ஆகிய இடங்களிலும் போட்டி நடைபெற உள்ளது.

    உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில்தான் 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்கிறது. இதற்கான விசா அனுமதியை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கேட்டு இருந்தது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    “பாகிஸ்தான் வீரருக்கான விசா பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. அதேநேரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எல்லை தாண்டி அனுமதி கிடைக்குமா? என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை” என்றார்.

    ×