என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

    கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஒலிம்பிக் போட்டிக்கணக்கான ஏற்பாடுகளை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி குழு செய்து வருகிறது. இதற்கான சுடர் ஓட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்படி ஒலிம்பிக் சுடர்ஓட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கிடையே ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதை போட்டி அமைப்பு குழு மறுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படமாட்டாது என்று போட்டி அமைப்புக்குழுவின் தலைவர் ஷிகோ ஹசி மோட்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு கவலை அளிக்கும் வி‌ஷயங்கள் நடைபெற்றாலும் போட்டியை ரத்து செய்வதை பற்றி சிந்திக்கவே இல்லை என்றார்.

    மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் ஐதராபாத் 8-ல், மும்பை 7-ல் வெற்றி பெற்று உள்ளன.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் 9-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-வார்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. 2-வது போட்டியில் அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐதராபாத்தை வீழ்த்தி அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவி இருந்தது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன்னிலும், 2-வது போட்டியில் பெங்களூருவிடம் 6 ரன்னிலும் தோற்றது.

    இதனால் ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் ஐதராபாத் 8-ல், மும்பை 7-ல் வெற்றி பெற்று உள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்வதாக எம்எஸ் டோனி கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.

    மும்பையில் நடந்த 8 வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்னே எடுக்க முடிந்தது.

    தமிழக வீரர் ஷாருக்கான் அதிகபட்சமாக 36 பந்தில் 47 ரன் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் வேகப்பந்து வீரர் தீபக்சாஹர் அபாரமாக பந்து வீசினார். அவர் 13 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். சாம் கர்ரண், மொய்ன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 26 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 107 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மொய்ன் அலி 31 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), டுபிளசிஸ் 33 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். முகமது ‌ஷமி 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. தீபக் சாஹர் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த பவுலராக திகழ்ந்துள்ளார்.

    அவரது பந்தில் டி.ஆர்.எஸ். கேட்குமாறு வலியுறுத்தினார். ஆனால் பந்து மேலே செல்வது தெளிவாக தெரிந்ததால் டி.ஆர்.எஸ்.கேட்கவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இது ஒரு நீண்ட பயணம். 2008-ல் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, துபாய் என பயணம் நீண்டது.

    தற்போது மும்பை எங்களது சொந்த மைதானமாக இருக்கிறது. மும்பை எங்களது ஆடுகளமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்சின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 19-ந் தேதி மும்பையில் எதிர்கொள்கிறது.

    பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 18-ந் தேதி (நாளை) எதிர்கொள்கிறது. 

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடியது.
    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும், 3-வது போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி, தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். மார்க்ரம் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய வான் டர் டுசன் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது. மாலன் 33 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய மாலன், வான் டர் டுசன் ஜோடி

    அடுத்து ஆடிய கேப்டன் கிளாசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று அதிரடி காட்டிய வான் டர் டுசன் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். அதற்கு பிறகு வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். 

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 19.3 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி, பஹீம் அஷ்ரப் தலா 3 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் 
    ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுடன் பகர் சமான் ஜோடி சேர்ந்தார்.

    பகர் சமான் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 34 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 24 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஹபீஸ் 10 ரன்னும், ஹைதர் அலி 3 ரன்னும், ஆசிப் அலி 5 ரன்னும், பஹீம், அஷ்ரப் 7 ரன்னும் எடுத்து விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் மொகமது நவாஸ் 25 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகனாக பஹீம் அஷ்ரபும், தொடர் நாயகனாக பாபர் அசாமும் தேர்வு செய்யப்பட்டனர்.
    குறைந்த டார்க்கெட் என்பதாலும், மொயீன் அலி மற்றும் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக பேட்டிங் செய்யவும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தது.

    மயங்க் அகர்வால் (0), கேஎல் ராகுல் (5), கிறிஸ் கெய்ல் (10), நிக்கோலஸ் பூரன் (0), தீபக் ஹூடா (10) ஆகியோர் தீபக் சாஹர் ஓவரில் வீழ்ந்தனர். இதனால் பங்சாப் அணி 6.2 ஓவரில் 26 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 
    தீபக் சாஹர் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெடுகள் சாய்த்து, பஞ்சாப் அணியின் பேட்டிங்கை சீர்குலைத்தார். அதில் இருந்து பஞ்சாப் அணியால் மீண்டு வரமுடியவில்லை. ஷாருக் கான் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 106 ரன்களே எடுத்தது.

    பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சிஎஸ்கே களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் தொடக்கத்தில் மெதுவாக விளையாடினர்.

    ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் வேகமாக உயர்ந்தது.

    டு பிளிஸ்சிஸ்

    சிஎஸ்கே-யின் ஸ்கோர் 12.3 ஓவரில் 90 ரன்னாக இருக்கும்போது மொயீன் அலி 31 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 8 ரன்னிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    புதுப்பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை தீபக் சாஹர் வெளியேற்ற, ஷாருக் கான் சிறப்பாக விளையாடி 47 அடிக்க சிஎஸ்கே-வுக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். கடந்த ஐந்து போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் வீழ்த்த முடியாம திணறிய தீபக் சாஹர் பந்து வீச்சு இன்று தீப்பொறியாக இருந்தது.

    முதல் ஓவரின் 4-வது பந்தில் மயங்க் அகர்வால் (0), அவரின் 2-வது ஓவரின் 5-வது பந்தில் கேஎல் ராகுல் (5) ரன்அவுட், 3-வது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் (10), 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரன் (0), 4-வது ஓவரின் 2-வது பந்தில் தீபக் ஹூடா (10) ஆகியோரை வீழ்த்தினார்.

    ஷாருக்கான்

    இதனால் பங்சாப் அணி 6.2 ஓவரில் 26 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சாஹர் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெடுகள் சாய்த்து, பஞ்சாப் அணியின் சீர்குலைத்தார்.

    அதில் இருந்து பஞ்சாப் அணியால் மீண்டு வரமுடியவில்லை. ஷாருக் கான் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 106 ரன்களே எடுத்தது.
    பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்-பிளேயில் முன்னணி பேட்ஸ்மேன்களை இழந்து திணறி வருகிறது.
    மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ரன்கள் குவித்ததுபோல் குவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் தீபக் சாஹர் அவர்கள் எண்ணத்திற்கு முற்றிலுமாக தடைபோட்டார்.

    முதல் ஓவரின் 4-வது பந்திலேயே மயங்க் அகர்வாலை ரன்ஏதும் எடுக்க விடாமல் க்ளீன் போல்டாக்கினார். 6-வது பந்தில் கிறிஸ் கெய்ல் கேட்ச் கொடுத்ததை ருத்துராஜ் பிடிக்க தவறினார்.

    3-வது ஓவரின் 5-வது பந்தில் கேஎல் ராகுல் ரன்அவுட் ஆனார். 5-வது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்லை 10 ரன்னிலும், 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரனை டக்அவுட்டிலும் வெளியேற்றினார். இதனால் பஞ்சாப் அணி பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களே எடுத்தது.

    மயங்க் அகர்வால் போல்டு

    தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீச தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் வீசி வைத்தார் எம்எஸ் டோனி. 7-வது ஓவரை தீபக் சாஹர்தான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹூடாவை 10 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் அணியின் பேட்டிங்கை சீர்குலைத்தார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் எந்தவித மாற்றமின்றி அதே ஆடும் லெவன் அணியுடன் களம் இறங்குகின்றன.
    பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 நடக்கிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி

    பஞ்சாப் கிங்ஸ் அணி:

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. தீபக் ஹூடா, 5. நிக்கோலஸ் பூரன், 6. ஷாருக் கான், 7. ஜை ரிச்சர்ட்சன், 8. முருகன் அஷ்வின், 9. ரிலே மெரிடித், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.

    சிஎஸ்கே அணி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. ரெய்னா, 4, மொயீன் அலி, 5. அம்பதி ராயுடு, 6. எம்எஸ் டோனி, 7. ஜடேஜா, 8. சாம் கர்ரன், 9. பிராவோ, 10. ஷர்துல் தாகூர், 11. தீபக் சாஹர்.
    கிரிக்கெட்டை ரசிகர்களிடம் எளிதான கொண்டு சென்று, பிரபலம் அடைய வைத்த பெருமை எம்எஸ் டோனிக்கும் உண்டு என்றால் மிகையாகாது.
    ஆஸ்கார் விருது வென்று சாதனைப் படைத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான் ‘‘லக்கான் படத்தில் உள்ள ‘சாலே சாலோ (Chale Chalo) பாடலை எம்எஸ் டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அது கிரிக்கெட் விளையாட்டை இணைந்து விளையாட மக்களுக்கு உத்வேகமாக இருக்கக் கூடியது.

    குட்டி தல சுரேஷ் ரெய்னாவுக்கு ‘மங்க்டா ஹாய் கியா (Mangta Hai Kya)’ பாடலை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனென்றால், நான் எப்போதெல்லாம் பெங்களூரு செல்கிறனோ, அப்போதெல்லால் ரங்கீலாவில் இருந்து ஏராளமான பாடல்களை கேட்பார்கள்’’ என்றார்.

    லகான் படத்தில் அமீர்கான் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆங்கிலேயர்கள் அந்த கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என போட்டி வைப்பார்கள். அப்போது அமீர்கான் கிராமத்தில் உள்ள திறமையானவர்களை ஒன்றிணைத்து போட்டியில் வெற்றி பெறுவார்.
    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை பிடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரின் பென் ஸ்டோக்ஸ் கைவிரலில் முறிவு ஏற்பட்டது.
    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் ஆட்டம் ஏப்ரல் 12-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அப்போது பென் ஸ்டோக்ஸின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் இத்தொடர் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார். ஆனால் அணியுடன் இருந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்திருந்தது. இதனால் நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் களம் இறங்கவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், இடது கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெளிவானது. இதனால் பென் ஸ்டோக்ஸ் 12 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த நாடு திரும்புகிறார். நாளை இங்கிலாந்து புறப்படும் பென் ஸ்டோக்ஸ், பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.
    ராஜஸ்தானுக்கு எதிராக 2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தால் மட்டுமே தோல்வி என்ற நிலையில், டெல்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.
    டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 147 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    அந்த அணிக்கு 150 ரன்களுக்கு கீழ் முதலில் பேட்டிங் செய்து எடுத்தால், எதிரணியை அதற்குள் கட்டுப்படுத்தியதே கிடையாது என்ற மோசமான சாதனை உள்ளது.

    இந்த போட்டியிலும் அது நிகழக்கூடாது என டெல்லி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதால், அந்த மோசமான சாதனை டெல்லி டேர்வில்ஸ் அணியை பின்தொடர்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 26 முறை முதலில் பேட்டிங் செய்து 150 ரன்களுக்கு கீழ் அடித்துள்ளது. அதில் ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது.

    டெல்லி அணி வீரர்கள்

    நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது, கடைசி 2 ஓவரில் 27 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருந்தது. இதனால் டெல்லி அணிக்கு வாய்ப்பு இருந்தது.

    19-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் மோரிஸ் 2 சிக்சருடன் 15 ரன்கள் அடித்துவிட்டார். இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த ஓவரிலும் கிறிஸ் மோரிஸ் இரண்டு சிக்சர் விளாச டெல்லி அணி 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் தோல்வியைத் தழுவியது.
    தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. கேப்டன் ரி‌ஷப்பண்ட் 51 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டும், முஸ்தபா பிஜூர் ரகுமான் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 42 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. பின்னர் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 43 பந்தில் 62 ரன் எடுத்து அவுட் ஆனார்.

    கடைசியாக கிறிஸ் மோரிஸ் அதிரடியாக ஆடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் இரண்டு சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

    ராஜஸ்தான் 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. வெற்றி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    40 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்ததால் வெற்றி பெறுவதே கடினமானது என்று நினைத்தேன். எங்களிடம் மில்லர் மற்றும் மோரிஸ் இருந்தனர். ஆனாலும் கடினமானது என்றே நினைத்தேன். அது சூழ்நிலைகளை பொறுத்தது.

    வேகத்தை எடுத்துக்கொள்வது எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் வலிமையாகும். கிறிஸ் மோரிஸ், தயவு செய்து ஒரு சிக்சரை அடிக்க முடியுமா? என்று நான் மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியதாவது:-

    தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இறுதி கட்டத்தில் அவர்கள் (ராஜஸ்தான்) எங்களை மீறி செல்ல அனுமதித்து விட்டோம்.

    நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்க முடியும். பனி எங்களுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன்.

    ஆனால் இந்த போட்டியில் இருந்து நல்ல வி‌ஷயங்களை எடுத்து கொள்ளலாம். எதிர்காலத்தில் அதை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

    ராஜஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. டெல்லி அணி முதல் தோல்வியை (2 ஆட்டம்) சந்தித்தது.

    ×