என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 189 ரன் இலக்கை டெல்லி எளிதாக எடுத்தது.

    இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை அணி பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, மொய்ன் அலி, சாம் கர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் டோனி, தொடக்க வீரர் டுபிளசிஸ் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். அதே போல் பந்துவீச்சிலும் முன்னேற்றம் காண வேண்டும்.

    டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினர். இதனை சரி செய்ய வேண்டும். பேட்டிங்கில் பலம் பொருந்திய பஞ்சாப்புக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்களை குவிக்க வேண்டியது அவசியமாகும்.

    பந்துவீச்சில் தீபக் சாகர், ஜடேஜா, பிராவோ ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன், தீபக் ஹூடா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் 221 ரன்கள் குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் அதிரடியை காட்ட முயற்சிக்கும். அந்த அணி பந்துவீச்சில் முகமது சமி, ஜய் ரிச்சர்ட்சன் ரிலி மெரிடித், முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட்கோலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
    லண்டன்:

    கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளது.

    இதன்படி 1970-களில் விவியன் ரிச்சர்ட்சும் (வெஸ்ட்இண்டீஸ்), 1980-களில் கபில்தேவும் (இந்தியா), 1990-களில் சச்சின் டெண்டுல்கரும் (இந்தியா), 2000-களில் முரளிதரனும் (இலங்கை), 2010-களில் விராட் கோலியும் (இந்தியா) சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இலங்கைக்கு எதிராக 2008ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 2010 முதல் 2019ல் விளையாடிய 227 ஒருநாள் போட்டிகளில் 42 சதம் உட்பட 11,125 ரன் எடுத்திருந்தார். தவிர இவர், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

    விராட் கோலி

    கடந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரருக்கான விருதை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றார். இவர், கடந்த ஆண்டு விளையாடிய 7 டெஸ்டில், 641 ரன், 19 விக்கெட் கைப்பற்றினார். சிறந்த முன்னணி வீராங்கனைக்கான விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனே கைப்பற்றினார். சிறந்த முன்னணி டுவென்டி20 வீரருக்கான விருதை விண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டு வென்றார்

    கடந்த ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாம் சிப்லே, ஜாக் கிராலே, டேரன் ஸ்டீவன்ஸ், விண்டீசின் ஜேசன் ஹோல்டர், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இடம் பிடித்துள்ளனர்
    பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இ்ந்திய அணி, லாத்வியாவை எதிர்கொள்கிறது.
    ஜுர்மலா:

    பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான (முன்பு பெட் கோப்பை பெயரில் நடந்தது) டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இ்ந்திய அணி, லாத்வியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லாத்வியாவின் ஜுர்மலா நகரில் உள்ள உள்ளரங்க கடினதரை மைதானத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் நடக்கிறது.

    கேப்டன் விஷால் உப்பாலுடன் இந்திய டென்னிஸ் வீராங்கனைகள்.


    இந்தியா, பிளே-ஆப் சுற்றுக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்திய அணியில் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி, ருதுராஜ் போசேல், ஜீல் தேசாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலக தரவரிசையில் 174-வது இடம் வகிக்கும் இ்ந்தியாவின் அங்கிதா ரெய்னா ஒற்றையர் பிரிவில் 2017-ம் ஆண்டில் பிரெஞ்ச் ஓபனை வென்ற சாதனையாளரான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவாவுடன் இன்று மோதுகிறார். மற்றொரு ஒற்றையரில் தரவரிசையில் 621-வது இடம் வகிக்கும் கர்மன் கவுர் தண்டி 47-ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்தோவாவை எதிர்கொள்கிறார். மறுநாள் இருவரும் மாற்று ஒற்றையரில் ஆடுவார்கள். தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள லாத்வியாவுக்கு எதிரான ஆட்டம் இந்திய வீராங்கனைகளுக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரட்டையர் பிரிவில் களம் இறங்கும் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னாவுடன் கைகோர்த்து ஆட உள்ளார். இதில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடக்கும் உலக குரூப் தகுதி சுற்றுக்கு இந்தியா முதல் முறையாக தகுதி பெறும்.

    அங்கிதா ரெய்னா கூறுகையில், ‘நாங்கள் பெரும்பாலும் கடின தரைபோட்டிகளில் தான் விளையாடி உள்ளோம். அதனால் களம் இறங்க மிகுந்த உற்சாகத்துடன் தயாராக உள்ளேன். தேசத்துக்காக ஆடும் போது எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்றார். முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும், 2-வது நாள் ஆட்டம் மாலை 4.30 மணிக்கும் தொடங்குகிறது. போட்டியை யூரோ ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஆண்டு ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா தொடர்ந்து ‘ஏ’ பிளஸ் பிரிவில் நீடிக்கின்றனர்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இந்த காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரையாகும். இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யா 2019-2020-ல் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். தற்போது ‘ஏ’ பிரிவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். புவனேஷ்வர் குமார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். தற்போது ‘பி’ பிரிவிற்கு பின்னடைந்துள்ளார்.

    சாஹர் ‘சி’ பிரிவிற்கு தள்ளப்பட்ட நிலையில், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

    முகமத சிராஜ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் 2020-2021 ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.

    ‘ஏ’ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு முறையே 3 மற்றும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

    புவி

    அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பண்ட், ஹர்திக் பாண்ட்யா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

    சகா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

    குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.
    மில்லர் அரை சதமடிக்க, கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 36 ரன்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்பிடி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை  இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

    அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    கேப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.

    லலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

    3 விக்கெட் வீழ்த்திய உனத்கட்

    ராஜஸ்தான் அணி சார்பில் உனத்கட் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இறங்கினர். டெல்லி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இதனால் பட்லர் பட்லர் 2, வோரா 9, சஞ்சு சாம்சன் 4, ஷிவம் டூபே 2, ரியான் பராக் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் அரை சதமடித்து 47 பந்தில் 62 ரன் அடித்து அவுட்டானார்.

    அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் திவாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கிறிஸ் மோரிசும், உனத்கட்டும் போராடினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் 2 சிக்சருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் 18 பந்தில் 4 சிக்சர்களுடன் 36 ரன்களுடனும், உனத்கட் 11 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    டெல்லி அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பிரித்வி ஷா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 9 ரன்னிலும், ரகானே 8 ரன்னிலும் வெளியேற டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகினற்ன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்பின் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    கேப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினர். அவர் 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார். அப்போது டெல்லி 12.4 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்தது.

    ரிஷப் பண்ட்

    லலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உனத்கட் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஹெட்மையர் நீக்கப்பட்டு, ரபடா சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டேவிட் மில்லர் இணைந்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி அணியில் ஹெட்மையர் நீக்கப்பட்டு, ரபடா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் லலித் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். உனத்கட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:-

    1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ரிஷப் பண்ட், 4. ரகானே, 5. மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், 6. கிறிஸ் வோக்ஸ், 7. அஷ்வின். 8. லலித் யாதவ், 9. ரபடா, 10. டாம் கர்ரன், 11. அவேஷ் கான்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

    1. மனன் வோரா, 2 சஞ்சு சாம்சன், 3. டேவிட் மில்லர், 4. பட்லர், 5. ஷிவம் டுபே, 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. கிறிஸ் மோரிஸ், 9. சேத்தன்  சகாரியா, 10. உனத்கட், 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிஎஸ்கே-யின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடாத நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சிஎஸ்கே 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 24 முறை நேருக்குநேர் மோதியதில் சிஎஸ்கே 15 முறை வென்று அதிக்கம் செலுத்தியுள்ளது.

    கடந்த சீசனில் பிளேஆஃப் சுற்றோடு வெளியேறியதால், இந்த முறை சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்லிக்கு எதிராக முதல் போட்டியில் களம் இறங்கியது. சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் அணியை பார்க்கும்போது, 11 பேரும் பேட்டிங் திறமை பெற்றவர்களாக இருந்தனர். இதனால் இந்த முறை பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்தனர்.

    ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஓபனின் போனியாகவில்லை. டு பிளிஸ்சிஸ் ரன் கணக்கை தொடக்காமலும், கடந்த சீசனில் கடைசி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த ருத்து ராஜ் 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

    ஓபனிங் சொதப்பினால் என்ன? 7 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நான் ஜோடை போகமாட்டேன் என்பதுபோல் மொயீன் அலி 24 பந்தில் 36 ரன்கள் விளாசினார்.

    ‘குட்டி தல’ ரெய்னா அரைசதம் அடித்து ரன் ஸ்கோரை உயர்த்த, சுட்டிப் பையன் சாம் கர்ரன் 15 பந்தில் 34 ரன் விளாசி சிஎஸ்கே 188 ரன்கள் எட்ட உதவினார். இதனால் டோனியின் டக் அவுட் பெரிதாக தெரியவில்லை.

    ஆனால் பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடேயில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் சென்னை பந்து வீச்சை பஞ்சாக பறக்க விட்டனர்.

    தீபக் சாஹர், கர்ரன், ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ என ஆறு பேர் பந்து வீசியும் பலனில்லை. பந்து வீச்சில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தனர். சிஎஸ்கே-வின் தடுமாற்றத்திற்கு குயிக் பவுன்சர், அதிவேகமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இல்லாததே காரணம் என்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

    சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி, பெரேண்டர்ஃப் உள்ளனர். இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடமாட்டார்கள் என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    இதனால் சிஎஸ்கே இதே பந்து வீச்சு யுனிட் உடன்தான் களம் இறங்கும். ஒருவேளை டாஸ் தோற்று, 2-வதாக பந்து வீசும் நிலை ஏற்பட்டால், முதல் போட்டியில் திணறியது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் பந்தில் வேகத்தை கூட்டுவது அவசியம்.

    போட்டி முடிந்தபின் எம்எஸ் டோனி, ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குவதால் பனிப்பொழிவின்போது முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு முதல் அரைமணி நேரம் மிகமிக முக்கியமானது என்றார். அந்த நேரத்தில் 8 ஓவரில்களில் 60 ரன்களுக்கு மேல் அடித்தால், எளிதாக 200 ரன்கள் குவித்து விடலாம். இதுதான் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு மந்திரமாக இருக்கும்.

    பஞ்சாப் என்றாலே, ரசிகர்களின் நினைவுக்கு வருவது அதிரடிதான். அதற்கு காரணம் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர்தான். தற்போது இவர்களுடன் தீபக் ஹூடா இணைந்துள்ளார்.

    தீபக் ஹூடா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் 28 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். சில சிக்சர்கள் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் ஷாட்களை கண் முன் கொண்டு வந்தது. இதனால் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

    கேஎல் ராகுல் (91), கிறிஸ் கெய்ல் (40) ஆகியோரின் அதிரடி வழக்கம்போல் தொடர்கிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை கடந்து பிரமிக்க வைத்துள்ளது. சென்னை அணியின் பந்து வீச்சு இவர்களை கட்டுப்படுத்துமா? என்பதே கேள்வி.

    சிஎஸ்கே அணி

    பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் குறை உள்ளதை மறுக்க இயலாது. அந்த அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது மிகப்பெரிய பலவீனம். ராஜஸ்தானுக்கு எதிராக 222 இலக்கில் 217 ரன்கள் விட்டுக்கொடுத்தது.

    ஒரு சுழற்பந்து வீச்சாளர், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறார்கள். ஒரு பவுலரை டார்கெட் செய்தால் கூட 4 ஓவரில் 50 ரன்கள் வரை அடித்து விடலாம். இதை பஞ்சாப் சரி செய்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் பஞ்சாப் பேட்டிங்கை சிஎஸ்கே பந்து வீச்சு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை பொறுத்துதான் போட்டியில் வெற்றித் தோல்வி அமையும்.
    ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் சீமா மற்றும் பூஜா ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர்.
    ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டின் அல்மாத்தி நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சரிதா அரையிறுதிப் போட்டியில் கிர்கிஸ்தானின் நுரைடா அனார்குலோவாவை எதிர்கொண்டார். இதில் சரிதா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த ஷூவ்தோரை எதிர்கொள்கிறார்.

    50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஜேஸ்மினாவிடம் 2-3 எனத் தோல்வியடைந்தார். வெண்கல பதக்கத்திற்காக தைபே வீராங்கனை யங் சுன் லின்-ஐ எதிர்கொள்கிறார்.

    76 கிலோ எடைப்பிரிவில் பூஜா தோல்வியடைந்தார். வெண்கல பதக்கத்திற்காக போட்டியிட இருக்கிறார். 68 கிலோ எடைப்பிரிவில் நிஷா அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா கடந்த 6-ந் தேதி மும்பை வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து பாதியில் விலகிய அவர் சக வீரர் காஜிசோ ரபடாவுடன் இணைந்து இங்கு வந்தார். இந்த நிலையில் தனிமைப்படுத்தலின் போது அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரிய கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையின் படி அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். அப்போது அவரிடம் கடைசி 2 நாட்கள் உள்பட 5 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு தான் களம் இறங்க முடியும். நோர்டியா கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 22 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், அதிவேகமாகவும் பந்துவீசி அசத்தினார். அவர் ஆடமுடியாமல் போய் இருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவாகும். ஏற்கனவே டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் கொரோனா பாதிப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
    பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (865 புள்ளி) விராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
    துபாய்:

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (865 புள்ளி) விராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த வாரம் செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 94 ரன்கள் குவித்ததால் 13 தரவரிசை புள்ளிகளை அறுவடை செய்த பாபர் அசாம் 2-வது இடத்தில் இருந்து நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அத்துடன் 41 மாதங்கள் நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

    கேப்டன் விராட்கோலி


    மேலும் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். ஏற்கனவே அந்த நாட்டை சேர்ந்த ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியாண்டட் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் முதலிடம் வகித்துள்ளனர். இந்திய கேப்டன் விராட்கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (825 புள்ளி) 3-வது இடத்தில் தொடருகிறார்.
    14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின
    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் ஒரு மாற்றமாக ரஜத் படிதர் நீக்கப்பட்டு, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் சந்தீப் ஷர்மா, முகமது நபிக்கு பதிலாக ஷபாஸ் நதீம், ஜாசன் ஹோல்டர் இடம் பிடித்தனர்.

    ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ‘பேட்’ செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களாக கேப்டன் விராட்கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களம் கண்டனர். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் 2-வது பந்தை விராட்கோலி பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய தேவ்தத் படிக்கல் (11 ரன்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ‘கேட்ச்’ கொடுத்து விரைவில் நடையை கட்டி ஏமாற்றம் அளித்தார்.


    ஐபிஎல் கிரிக்கெட்


    அடுத்து வந்த ஷபாஸ் அகமது அதிரடியாக ஒரு சிக்சர் தூக்கினார். பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தது. அடித்து ஆடிய ஷபாஸ் அகமது (14 ரன்) ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்ததால் அந்த அணியின் ‘ரன்-ரேட்’ மெதுவாகவே நகர்ந்தது.

    முதலில் நிதானத்தை கடைப்பிடித்த மேக்ஸ்வெல் 11-வது ஓவரில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 33 ரன்னில் (29 பந்து, 4 பவுண்டரி) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் விஜய் சங்கர் அருமையாக கேட்ச் செய்தார். சுழற்பந்து வீச்சில் கலக்கிய ரஷித் கான் தனது அடுத்தடுத்த ஓவர்களில் டிவில்லியர்ஸ் (1 ரன்), வாஷிங்டன் சுந்தர் (8 ரன்) விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த டேன் கிறிஸ்டியன் (1 ரன்) நடராஜன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் ‘கேட்ச்’ கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

    இறுதி கட்டத்தில் மேக்ஸ்வெல் அடித்த பவுண்டரி, சிக்சரால் அந்த அணி சற்று சவாலான ஸ்கோரை எட்டியது. கடைசி ஓவரில் ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் பந்தில் கைல் ஜாமிசன் (12 ரன்) வீழ்ந்தார். ஐ.பி.எல். தொடரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் (59 ரன்கள், 41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், புவனேஷர்குமார், ஷபாஸ் நதீம், நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா (1 ரன்) முகமது சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து விரைவில் ‘அவுட்’ ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான டேவிட் வார்னருடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய வண்ணம் இருந்தனர். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருந்த போது (13.2 ஓவர்) டேவிட் வார்னர் 54 ரன்னில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கைல் ஜாமிசன் பந்து வீச்சில் டேன் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    17-வது ஓவரில் ஷபாஸ் அகமது தனது மாயாஜால சூழலில் ஜானி பேர்ஸ்டோ (12 ரன்), மனிஷ் பாண்டே (38 ரன், 39 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் சமாத் (0) ஆகிய 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 3 ரன்னிலும், ஜாசன் ஹோல்டர் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
    ×