என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 149 ரன்கள் எடுத்துள்ளது.
    சென்னை:

    14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

    இதில் தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் 11 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விராட் கோலி 4 பவுண்டரிகளை விரட்டி 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது(14), டி வில்லியர்ஸ்(1), வாஷிங்டன் சுந்தர்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    மறுமுனையில் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதத்தை கடந்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல்(59) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது. 
    விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு சென்னையில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

    இந்நிலையில் இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

    1. விராட் கோலி, 2. படிகல், 3. ஏபிடி, 4. மேக்ஸ்வெல், 5. டேனில் கிறிஸ்டியன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கைல் ஜேமிசன், 8. ஹர்ஷல் பட்டேல், 9. முகமது சிராஜ், 10, ஷாபாஸ் அகமது. 11. சாஹல்.

    சன் ரைசர்ஸ் ஐதராபாத்:

    டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. சகா, 4. மணிஷ் பாண்டே, 5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 7. ஹொல்டர், 8. ரஷித் கான், 9. புவி, 10. டி நடராஜன், 11. நதீம்



    ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
    துபாய்:

    ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக புகழப்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டபோது, ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக, லஞ்சம் பெறுதல், மேட்ச் பிக்ஸிங்  தகவல்கள் பரிமாறுதல் போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது.

    இதில் 5 விதமான குற்றச்சாட்டுகளைத் தான் செய்ததாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டதை அடுத்து, 8 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

    ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 விதமான குற்றச்சாட்டுகளை ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக் கொண்டதையடுத்து, இந்தத் தடையை ஐசிசி பிறப்பித்துள்ளது. 2029-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதிதான் சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ ஹீத் ஸ்ட்ரீக் இனிமேல் பங்கேற்க முடியும்.
    சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சூர்யகுமார் யாதவ் 56 ரன்னும், ரோகித் சர்மா 43 ரன்னும் எடுத்தனர்.

    கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரசல் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தாவுக்கு தொடக்கம் நன்றாக இருந்தது. சுப்மன்கில் 33 ரன்னும், திரிபாதி 5 ரன்னும், மார்கன் 7 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.

    தொடக்க வீரர் நிதிஷ் ரானா 52 ரன்னில் அவுட் ஆன பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. இந்த 4 விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாகர் கைப்பற்றி அசத்தினார்.

    கொல்கத்தா அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய போல்ட், 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆந்த்ரே ரசல் (9 ரன்) கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் மும்பை 10 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    கொல்கத்தா முதல் தோல்வியை சந்தித்தது வெற்றி குறுத்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    பல்வேறு கட்டங்களில் பந்துவீச வந்த ஒவ்வொரு வரும் அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினர். இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய நம்பிக்கையை எடுத்து கொள்ள முடியும்.

    நிறைய நேர்மறையான வி‌ஷயங்கள் இருந்தன. கொல்கத்தா அணி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியது அவர்கள் பவர்-பிளேயில் அற்புதமாக பேட்டிங் செய்தனர். ஆனால். பவர்-பிளே முடிந்த பிறகு ராகுல் சாகர் பந்துவீச வந்ததால், அவர் விக்கெட் எடுத்த விதம் மிக முக்கியமானது.

    இறுதியில் குர்ணல் பாண்ட்யாவும் சிறப்பாக செயல்பட்டார். உண்மையில் நான் எல்லா பந்து வீச்சாளர்களையும் பாராட்டுவேன். அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல நல்ல அறிகுறி தெரிகிறது.

    சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது.

    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் தொடங்கிய விதத்தில் சிறப்பாக பேட்டிங்கை செய்திருக்க வேண்டும். இதுபோன்று இரண்டு முறை நடந்துள்ளது. இதில் எப்படி முன்னேறுவது என்பதை பார்க்க வேண்டும்.

    சூர்யகுமார் யாதவ் அச்சமின்றி விளையாடுகிறார். அவர் அடிக்கும் ஷாட்டுகளை பார்க்கும் போது ரிஸ்க் எடுத்து ஆடியதுபோல் தெரியவில்லை.

    கடைசி 5 ஓவரில் இன்னிங்சை எவ்வாறு முடிப்பது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதை நாங்கள் கடந்த காலத்தில் செய்துள்ளோம் என்றார்.

    கொல்கத்தா கேப்டன் மார்கன் கூறும் போது, இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நிறைய நேரம் நன்றாக விளையாடி இருக்கிறோம்.

    முதல் பாதி மற்றும் சேசிங்கில் பெரும்பாலும் நன்றாக விளையாடினோம். அதன்பின் தவறுகளை செய்தோம். அதில் இருந்து வெளியே வருவோம் என்று நம்புகிறேன் என்றார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் மும்பையிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.
    கொல்கத்தா:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

    டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மும்பை அணியில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் அரைசதம் அடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கொல்கத்தா சார்பில் அந்த்ரே ரஸல் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசித், ஷகிப், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களமிறங்கியது. நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஷுப்மான் கில் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதத்தை பதிவு செய்த நிதிஷ் ராணா 57 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக தினேஷ் கார்த்திக்கும், அந்த்ரே ரஸலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஸல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    5 விக்கெட் வீழ்த்திய ரஸல்

    இறுதியில் தினேஷ் கார்த்திக் 8 (11) ரன்களும், ஹர்பஜன் சிங் 2 (2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது

    இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. குறிப்பாக, 153 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அந்த கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற 30 பந்துகளில் 31 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற எளிமையான இலக்காகவே இருந்தது. 

    ஆனால், இறுதி 4 ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கொல்கத்தா அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அந்த அணியின் ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தின் தன்மை மாறியதால் 153 ரன்கள் என்ற இலக்கே மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்தது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக ஷாருக்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மிகவும் ஏமாற்றமளிக்கூடிய செயல்பாடு. குறைந்தபட்சமாக சொல்ல வேண்டுமென்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். 
    மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.
    புதுடெல்லி:

    மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுகளில் ஒன்றான இந்திய ஓபனில் பங்கேற்க சீனா உள்பட 33 நாடுகளை சேர்ந்த 228 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். விலகலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 19-ந்தேதியாகும். மறுநாள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

    ஒலிம்பிக் சாம்பியனும், 3 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரின் (ஸ்பெயின்), நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), அன் சி யங் (தென்கொரியா), போர்ன்பவீ சோச்சுவாங் (தாய்லாந்து) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும், 2 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான கென்டோ மோமோட்டா (ஜப்பான்), நடப்பு சாம்பியன் விக்டர் ஆக்சல்சென், ஆண்டர்ஸ் அன்டோன்சென் (இருவரும் டென்மார்க்), ஆல்-இங்கிலாந்து சாம்பியன் லீ ஜியா ஸி (மலேசியா), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் , சாய் பிரனீத், பிரனாய், காஷ்யப் (இந்தியா) உள்பட முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்தியா மட்டும் மொத்தம் 48 பேரை களம் இறக்குகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறும் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வீரர் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். மற்ற நாட்டு வீரர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மே 3, 6, 9, 14-ந்தேதிகளில் டெல்லி அரசு சார்பில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் கூறியுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (மார்ச்) சிறந்த வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி. வாக்கு அகாடமியின் அதிக ஆதரவை பெற்றதன் அடிப்படையில் புவனேஷ்வர்குமார் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    31 வயதான புவனேஷ்வர்குமார் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடரில் அசத்தியதன் மூலம் இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த விருதை தொடர்ச்சியாக பெறும் 3-வது இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் ஆவார். ஏற்கனவே ஜனவரி மாதத்தில் ரிஷாப் பண்டும், பிப்ரவரி மாதத்தில் ஆர்.அஸ்வினும் இந்த கவுரவத்தை பெற்றனர். இதே போல் சிறந்த வீராங்கனை பட்டியலில் இடம் பெற்று இருந்த தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசல் லீ, இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ரவுத் ஆகியோரில் இருந்து லிசல் லீ் விருதை தட்டிச்சென்றார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார்.

    நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான பென் ஸ்டோக்ஸிற்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. 

    இந்நிலையில், கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 
    ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி அசத்த மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
    சென்னை:
       
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    குயின்டன் டி காக் 2 ரன்னில் வெளியேறினார். ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
    சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் விளாசினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேறினார். ரோகித் சர்மா 43 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் அந்த்ரே ரஸல் பந்துவீச்சில் மும்பை அணி திணறியது. ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னிலும், குருணால் பாண்ட்யா 15 ரன்னிலும், மார்கோ ஜென்சன் 0 ரன்னிலும், ராகுல் சாஹர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 152 ரன்னில் ஆட்டமிழந்தது. 

    கொல்கத்தா அணியின் அந்த்ரே ரஸல் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் இறங்கினர்.

    இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். கில் 33 ரன்னில் அவுட்டானார். ராகுல் திரிபாதி 5 ரன்னிலும், மார்கன் 7 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். 

    அரை சதமடித்த நிதிஷ் ராணா

    கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல் ஆடினர். 17வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. 18வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 19வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    மும்பை அணியின் ராகுல் சாஹர் 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்கள் விளாச, அந்த்ரே ரஸல் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குயின்டன் டி காக் 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

    ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவர் 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் விளாசினர்.

    அதன்பின் வந்த இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் ரோகித் சர்மா 43 ரன்னில் வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.

    5 விக்கெட் வீழ்த்திய அந்த்ரே ரஸல்

    அதன்பின் அந்த்ரே ரஸல் தொடர்ந்து விக்கெட் வீழ்த்த மும்ப இந்தியன்ஸ் சரியாக 20 ஓவரில் 152 ரன்னில் ஆட்டமிழந்தது.  அந்த்ரே ரஸல் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னிலும், குருணால் பாண்ட்யா 15 ரன்னிலும், மார்கோ ஜென்சன் 0 ரன்னிலும், ராகுல் சாஹர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். கடந்த போட்டியில் சற்று பனிப்பொழிவு இருந்தது. என்றாலும் பந்து டர்னிங் ஆனது என்று டாஸ் தோற்ற ரோகித் சர்மா தெரிவித்தார்.
    ஐபிஎல் 2021 சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கும் நிலையில் 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    1. ரோகித் சர்மா, 2. குயின்டன் டி காக், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. மார்கோ ஜான்சன், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. அந்த்ரே ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. ஷாகிக் அல் ஹசன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஹர்பஜன் சிங், 10. பிரசிதத் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.
    நியூசிலாந்து கிரிக்கெட்டின் உயரிய விருதான சர் ரிச்சர்ட் ஹேட்லியை கேன் வில்லியம்சன் ஆறு ஆண்டுகளில் நான்கு முறை வென்றுள்ளார்.
    நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2020-2021-ம் ஆண்டுக்கான விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர் ரிச்சர்ட் ஹேட்லி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார். தேவன் கான்வே ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 251 ரன்கள் விளாசினார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் டபுள் செஞ்சுரி விளாசினார்.

    கான்வே டி20 கிரிக்கெட்டில் 473 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 59. ஸ்டிரைக் ரேட் 151. நான்கு அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் 225 ரன்கள் விளாசினார்.
    ×