search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்த்ரே ரஸல்"

    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷாய் ஹோப் சதம் அடிக்க லிவிஸ் மற்றும் அந்த்ரே ரஸல் அரைசதம் அடிக்க வெஸ்ட் இணடீஸ் 421 ரன்கள் குவித்தது.
    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.


    அந்த்ரே ரஸல்

    கிறிஸ் கெய்ல் 22 பந்தில் 36 ரன்களும், லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 32 பந்தில் 47 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.


    ஹோல்டர்

    பின்னர் 422 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றும், எனது அழகான மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் அதிரடியாக ஆட விரும்புவேன் என ரஸ்செல் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆந்த்ரே ரஸ்செல் நள்ளிரவில் தனது 31-வது பிறந்த நாளை மனைவி ஜாசிம் லோராவுடன் கொண்டாடினார். அவரிடம் ஜாசிம் லோரா ஜாலியாக பேட்டி கண்டார்.

    அப்போது ரஸ்செல் கூறுகையில், ‘இன்றைய இரவு எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த வெற்றி எனக்கு பிறந்த நாள் பரிசு. ஒவ்வொரு ஆட்டத்திலும் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றும், எனது அழகான மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் என்றும் அதிரடியாக ஆட விரும்புவேன். அதனால் எனக்கு எப்பொழுதும் நெருக்கடி இருப்பதாக உணர்வேன்’ என்றார். ரஸ்செலின் மனைவி ஜாசிம் கூறுகையில், ரஸ்செலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து இந்த மாதிரியான பேட்டிங்கை எதிர்பார்த்தேன். ஏனெனில் இந்த சீசனில் உள்ளூரில் (கொல்கத்தா) நடந்த கடைசி ஆட்டம் இதுவாகும். அவர் பந்தை சிக்சருக்கு விரட்டியபோதெல்லாம் என்னை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டு உற்சாகத்தில் திளைத்தேன்’ என்றார்.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக தனது பிறந்த நாள் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு சிக்சர்கள் மூலம் விருந்து படைத்தார் அந்த்ரே ரஸல் #IPL2019 #KKR #AndreRussell
    ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் (76), கிறிஸ் லின் (54) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வழக்கமாக 15-வது ஓவருக்குப்பிறகு களம் இறங்கும் அந்த்ரே ரஸல், நேற்று 3-வது வீரராக 10-வது ஓவரிலேயே களம் இறக்கப்பட்டார்.



    நேற்று அவருக்கு பிறந்த நாள். பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சிக்சர்கள் மூலம் விருந்து படைக்க விரும்பினார். அவரது விருப்பம் வீணாகவில்லை. மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். 40 பந்துகளை சந்தித்த ரஸல் 8 சிக்ஸ், 6 பவுண்டரி விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அத்துடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இவரது அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 232 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 198 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கொல்த்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஸல் பிறந்த நாள் போட்டியில் ஜொலித்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
    ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஸல் தட்டி சென்றார். #AndreRussell
    கொல்கத்தா:

    களம் இறங்கி விட்டால் ருத்ரதாண்டவமாடும் கொல்கத்தா வீரர் ந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) நொறுக்கி இருக்கிறார்.



    ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருக்கிறார். #AndreRussell
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. #IPL2019 #KKRvMI

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.




    அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

    20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.





    அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.

    ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.




    தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.

    கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார்.  #IPL2019 #KKRvsMI

    கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’-தான் என கவுதம் காம்பிர், மீண்டும் அவரது திறமை குறித்து சாடியுள்ளார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்சிபி-யில் தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோலியை ஒப்பிட இயலாது. இன்னும் கேப்டன் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இதுவரை அவரை ஆர்சிபி கேப்டனாக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கவுதம் காம்பிர் கூறியிருந்தார். இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, ‘‘வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்’’ என்றார்.

    இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘பேட்டிஸ்மேன் என்பதில் விராட் மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேப்டன் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பது நான் எடுத்துக் கூறகிறேன். தொடர் தொடங்கும்போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

    பிளாட் ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோலி அழைத்தார்.

    அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் கிரிப்பிங் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை’’ என்றார்.
    சிக்சர் மழை பொழிந்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸலை கட்டுப்படுத்த முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வார்னர், பேர்ஸ்டோவ் ரன்கள் குவித்து வரும் வரும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல் சிக்சர் மழை பொழிந்து வருகிறார்.

    அவர் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ளார். நான்கிலும் பேட்டிங் செய்ய களம் இறங்கி 77 பந்துகளில் 207 ரன்கள் அடித்துள்ளார். இதில் 22 சிக்சர்கள் அடங்கும். 12 பவுண்டரிகள் அடங்கும். இரண்டு முறை நாட்அவுட். அவரது சராசரி 103.5 ஆகும். ஸ்டிரைக் ரேட் 268.83 ஆகும். சிக்சர் மட்டும் பவுண்டரி மூலமாகவே 180 ரன்கள் குவித்துள்ளார்.

    அவருக்கு அடித்தபடியாக அதே அணியின் நிதிஷ் ராணா 12 சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 11 சிக்சர்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல், பேர்ஸ்டோவ், வார்னர் தலா 10 சிக்சர்கள் அடித்துள்ளனர்.

    ஐதராபாத் அணிக்கெதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 44 பந்தில் 87 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. சித்தார்த் கவுல் வீசிய 18-வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியும் அடித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் தலா இரண்டு சிக்சர், பண்டரிகள் விளாசினார். 19 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் கொல்கத்தா வெற்றி பெற்றது.



    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். இதனால் கேகேஆர் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    டெல்லிக்கு எதிராக 9.1 ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களம் இறங்கினார். 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 185 ரன்னாக உயர முக்கிய காரணமாக இருந்தார்.



    ஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 ரன்னை சேஸிங் செய்தது. கேகேஆர் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரில் மூன்று சிக்சர்களும், 19-வது ஓவரில் நான்கு சிக்சர்களுடன் விளாசினார். 13 பந்தில் 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து கேகேஆர் வெற்றி பெற்றது.
    பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல் 17 பந்தில் 48 ரன்கள் குவித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். #Ashwin #KKR
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி நேற்றிரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    நிதிஷ் ராணா 34 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். அப்போது கொல்கத்தா 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. ராணா ஆட்டமிழந்ததும் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 17-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அபாயகரமான வகையில் சூப்பர் யார்க்கராக வீசினார். இதில் ரஸல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    இதனால் ஐந்து பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ரஸில் வெளியேற முயன்றார். அப்போது கொல்கத்தா வீரர்கள் 30 யார்டு வட்டம் என அழைக்கப்படும் உள்வட்டத்திற்குள் மூன்று வீரர்கள் மட்டுமே நின்றிருந்ததை கவனித்தனர். இதுகுறித்து நடுவரிடம் கூற, அவர் ‘நோ-பால்’ என அறிவித்தார். இதனால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பினார். உள்வட்டத்திற்குள் கட்டாயமாக நான்கு பீல்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பேர் மட்டுமே நின்றிருந்ததை அஸ்வின் கவனிக்கவில்லை.

    அதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு துவம்சம் செய்தார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். ஷமியின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களுடன் 22 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து விட்டது.



    அஸ்வின் தனது கேப்டன் பொறுப்பில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த சின்ன விஷயத்தில் உண்மையிலேயே கவனம் செலுத்தவில்லை. சின்ன விஷயம் டி20 கிரிக்கெட்டில் பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியில் இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நோ-பால் சம்பவத்திற்கான விமர்சனங்களை எனக்குள்ளதாக எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன.

    இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கால் காயம் காரணமாக பந்து வீசமாட்டார். பேட்டிங் மட்டுமே செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடைசி இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ஹோல்டர், 2. ஃபேபியன் ஆலன், 3. தேவேந்த்ர பிஷூ, 4. டேரன் பிராவோ, 5. கிறிஸ் கெய்ல், 6. ஷிம்ரோன் ஹெட்மையர், 7. ஷாய் ஹோப், 8. எவின் லெவிஸ், 9. அஷ்லே நர்ஸ், 10. கீமோ பால், 11. நிக்கோலஸ் பூரன், 12. ரோவ்மன் பொவேல், 13. அந்த்ரே ரஸல், 14. ஒஷானே தாமஸ்.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 11-வது ஆட்டம் பிளோரிடாவில் நடைபெற்றது. இதில் சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் - அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் 3-வது வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் 49 பந்தில் 100 ரன்னும், கேப்டன் சோயிப் மாலிக் 33 பந்தில் 50 ரன்னும் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

    பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் கென்னர் லெவிஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப்ஸ் 43 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.



    ராஸ் டெய்லர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மில்லர், ரோவ்மேன் பொவேல் அந்த்ரே ரஸல் சொற்ப ரன்களில் வெளியேற, ஜமைக்கா தல்லாவாஸ் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 138 ரன்களில் சுருண்டது. அந்த்ரே ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் 71 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
    வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அந்த்ரே ரஸல், சாமுவேல்ஸ் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் உள்ளூர் நேரப்படி செயின்ட் கிட்ஸில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி வங்காள தேச அணியின் தமிம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே வங்காள தேச அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த லித்தோன் தாஸ் 21 பந்தில் 24 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 10 பந்தில் 19 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 11 பந்தில் 15 ரன்களும், மெஹ்முதுல்லா 27 பந்தில் 35 ரன்களும் எடுக்க வங்காள தேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்தது.

    பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய இருந்தது. அப்போது கனமழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. மழைநின்ற பின் ஆட்டம் தொடங்கியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 11 ஓவரில் 91 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ரன்ஏதும் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.



    அதன்பின் வந்த அந்த்ரே ரஸில் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 35 ரன்கள் அடிக்க, சாமுவேல்ஸ் 13 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரஸல் உடன் இணைந்து ரோவ்மேன் பொவேல் 9 பந்தில் 15 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 9.1 ஓவரிலேயே 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி வரும் 4-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கிறது.
    துபாயில் நடத்தப்பட இருக்கும் 10 ஓவர் லீக் தொடரில் ரஷித் கான், அந்த்ரே ரஸல், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். #RashidKhan
    சர்வதேச அளவில் பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக துபாயில் கடந்த ஆண்டு 10 ஓவர் லீக் தொடர் (டி20) நடைபெற்றது. இதில் நான்கு அணிகள் கலந்து கொண்டது. இந்த ஆண்டும் 10 ஓவர் லீக் தொடர் வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது.

    இதில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான ரஷித் கான், அந்த்ரே ரஸில் பங்கேற்கிறார்கள்.



    ரஷித்கான் மாரத்தா அரேபியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். முஜீப் உர் ரஹ்மானை பெங்கால் டைகர்ஸ் அணி எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷேசாத்தை புதிய அணியான கிறிஸ்டெனட் ராஜ்புத்ஸ் அணியும், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்கை கேரளா கிங்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது.

    பஞ்சாபி லிஜெண்ட்ஸ் சோயிப் மாலிக்கை தக்கவைத்துள்ளது. ஷாகித் அப்ரிடியை பாக்த்டூன்ஸ் எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் மோர்கனை கேரளா கிங்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீசின் டேரன் சமியை நார்தன் வாரியர்ஸ் அணியும் எடுத்துள்ளது. ஷேன் வாட்சனை கராச்சியன்ஸ் அணி எடுத்துள்ளது. மற்ற வீரர்களுக்கான ஏலம் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    ×