search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carolina marin"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் செட்டை பிவி சிந்து இழந்த நிலையில், 2-வது செட்டை கைப்பற்றினார்
    • பிவி சிந்து செட்டை இழந்ததும் கரோலினா நீண்ட நேரம் சந்தோசத்தை கொண்டாடினார்

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் மோதினர்.

    முதல் செட்டை கரோலினா வென்றார். 2-வது செட்டை பிவி சிந்து கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.

    இந்த போட்டியின்போது பிவி சிந்துவும், கரோலினாவும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இருவரும் இதற்கு முன் பல போட்டிகளில் மோதியுள்ளனர். அப்போது தோழமையாகவே இருந்துள்ளனர். இந்த போட்டியில் மோதிக்கண்டது அரியதாக பார்க்கப்படுகிறது.

    இருவருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரித்தார்.

    கரோலினா ஒரு சர்வீஸை வென்றதும் நீண்ட நேரம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக பிவி சிந்து கோபம் கொண்டார். சர்வீஸ் செய்ய பிவி சிந்து நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக கரோலினா குற்றம்சாட்டியதால் வார்த்தைப்போர் ஏற்பட்டது.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனதாக்கி கொண்டார். #PVSindhu
    சீனாவின் நான்ஜிங் நகரில்  24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் மற்றும் இந்தியாவின் பி வி சிந்து ஆகியோர் மோதினர்.

    இதில் கரோலினா மரின்  21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து.

    பிவி சிந்து கடந்த ஆண்டும் (2017) இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பிவி சிந்து பதிவு செய்துள்ளார். 
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் வீழ்ந்தார் பிவி சிந்து. #PVSindhu #CarolinaMarin
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொண்டார்.

    இதில் கரோலினா மரின் 21 -19 என முதல் செட்டில் சிந்துவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் 21- 10 என்ற கணக்கில் சிந்துவை அவர் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் பிவி சிந்துவை வெற்றி பெற்றார்.
    ×