search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேன் வில்லியம்சன்"

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • கேன் வில்லியம்சன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • வில் யங் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு உதவினார்.

    நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.

    முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்னும், நியூசிலாந்து 211 ரன்னும் எடுத்தன. 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 235 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர். அவர்கள் நிதானமாக ஆடினர். ஆனால் டாம் லாதம் 30 ரன்னிலும், அடுத்து களம் வந்த ரவீந்திரா 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்தார். அவர் 98-வது டெஸ்டில் தனது 32-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றியை நோக்கி சென்றது. அவருக்கு துணையாக விளையாடிய வில் யங் அரைசதம் அடித்தார்.

    இருவரின் சிறப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 94.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்களுடனும், வில் யங் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    • கேன் வில்லியம்சன் 118 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் சதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கேன் வில்லியம்சன் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால், ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 340 பந்தில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 4-வது டெஸ்ட் போட்டிதான். 4-வது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 240 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிளிப்ஸ் 39 ரன்களும், டேரில் மிட்செல் 34 ரன்களும், மேட் ஹென்ரி 9 பந்தில் 27 ரன்களும் அடிக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 511 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நீல் பிராண்ட் 6 விக்கெட் சாய்த்தார்.

    • முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
    • வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    மவுண்ட் மாங்கனு:

    தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. டேவன் கான்வெ ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாம் லாதம் 20 ரன்னில் வெளியேறினார். 39 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது.


    அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடியை தென் ஆப்பிரிக்கா வீரர்களால் பிரிக்க முடியவில்லை

    இறுதியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 112 ரன்னும், ரவீந்திரா 118 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 219 ரன்கள் சேர்த்துள்ளது.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்லாந்து:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

    கடைசியாக 2022, நவம்பர் 20-ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணி கேப்டனாக இடம்பெற்றுள்ளார்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 12-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

    இந்தாண்டு ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் திரும்பி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இலங்கைக்கு எதிராக 172 ரன் இலக்கை 23.2 ஓவரில் சேஸிங் செய்ததால் நல்ல ரன்ரேட்.
    • பாகிஸ்தான் இங்கிலாந்தை 273 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.

    15-ந்தேதி நடைபெறும் முதல் அரைஇறுதியில் இந்தியாவுடன் மோதுவது நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ள நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-

    அரைஇறுதியில் விளையாடுவது சிறப்பானது. ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவது கடும் சவாலானதாக இருக்கும். அதை எதிர்நோக்கி இருக்கிறோம்.

    இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆடுகளத்தில் பந்து மெதுவாக சென்றது. ரன் சேஸிங்கில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதிக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினம் என்பதால், நியூசிலாந்து ஏறக்குறைய அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-

    நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

    • பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    இப்போட்டியின் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சிக்சருக்கு சென்ற பந்தை கேட்க் பிடிக்க முயன்றபோது பலத்த காயமடைந்தார். பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வலியால் துடித்த அவருக்கு மருத்துவக் குழுவினர் வந்து உதவி செய்தனர். பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். 

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார்.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை நியூசிலாந்து விளையாடியது.

    வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 162.3 ஓவரில் 483 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 258 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் கைப்பற்றினார். தனது 26-வது சதத்தை (92 டெஸ்ட்) பூர்த்தி செய்தார். அவர் 132 ரன் எடுத்து (282 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆனார்.

    2-வது இன்னிங்சில் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்களில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். அவர் டெஸ்டில் 7,787 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ரோஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
    • நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.

    இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.

    இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
    • ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.

    நேப்பியர்

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

    எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது.
    • டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோற்று வெளியேறின. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்ல உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் செயல்படுவார். இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வில்லியம்சன் தொடர்கிறார். டிரண்ட் போல்ட் மற்றும் கப்திலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இயற்கையானது. டிரெண்ட் போல்ட் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக இருந்துள்ளார். அவரை மீண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம் என நம்புகிறேன்.

    இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

    ×