என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார்
Byமாலை மலர்18 April 2021 1:03 AM GMT (Updated: 18 April 2021 1:03 AM GMT)
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
அல்மாதி:
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா 9-2 என்ற புள்ளி கணக்கில் அலிரிஜா நோஸ்ராடோலாவை (ஈரான்) தோற்கடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் கால்இறுதியில் யாங்சியோக்கையும் (தென்கொரியா), அரைஇறுதியில் பில்குனையும் (மங்கோலியா) சாய்த்து இறுதிப்போட்டியில் தகுட்டோ ஓட்டோகுரோவை (ஜப்பான்) எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் முந்தைய ஆட்டங்களின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் வலியால் அவதிப்பட்ட பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் விலகினார். ஒலிம்பிக் நெருங்கும் நேரத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியதால் ஒதுங்கிய பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கத்துடன திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா 9-2 என்ற புள்ளி கணக்கில் அலிரிஜா நோஸ்ராடோலாவை (ஈரான்) தோற்கடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் கால்இறுதியில் யாங்சியோக்கையும் (தென்கொரியா), அரைஇறுதியில் பில்குனையும் (மங்கோலியா) சாய்த்து இறுதிப்போட்டியில் தகுட்டோ ஓட்டோகுரோவை (ஜப்பான்) எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால் முந்தைய ஆட்டங்களின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் வலியால் அவதிப்பட்ட பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் விலகினார். ஒலிம்பிக் நெருங்கும் நேரத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியதால் ஒதுங்கிய பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கத்துடன திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X