என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் 48 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    சவுத்தம்ப்டன்:

    இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் மலன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

    மலன் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த வீரர்களை இலங்கை அணியினர் விரைவில் வெளியேற்றினர்.

    3 விக்கெட் வீழ்த்திய டேவிட் வில்லே

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை 91 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டும், சாம் கர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கையுடனான டி 20 தொடரை 3- 0 என கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் விருது டேவிட் மலானுக்கும், தொடர் நாயகன் விருது சாம் கர்ரனுக்கும் அளிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
    டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைக்கிறார்.
    பிரிஸ்டல்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது. அறிமுக வீராங்கனையாக களம் இறங்கி இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய (96 மற்றும் 63 ரன்) இந்திய இளம் புயல் ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

    அடுத்து இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைக்கிறார்.

    ஷபாலி வர்மா


    இதற்கு முன்பு 22 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள ஷபாலி வர்மாவை கடந்த மார்ச் மாதம் உள்ளூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்காதது விமர்சனத்திற்குள்ளானது. அந்த தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அதிரடியால் கவர்ந்திழுக்கும் ஷபாலி ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பிரமிக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் ஸ்மிர்தி மந்தனாவுடன் இணைந்து தொடக்க வீராங்கனையாக விளையாடுவார். கேப்டன் மிதாலிராஜ், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் இந்திய அணியால் இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுக்க முடியும்.

    ஹீதர் நைட் தலைமையிலான உலக சாம்பியனான இங்கிலாந்து வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டாமி பீமோன்ட், நாட் சிவெர், அமே ேஜான்ஸ், அன்யா ஸ்ருப்சோலே, சோபி எக்லெஸ்டோன், கேத்தரின் புருன்ட் என்று திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் அந்த அணியில் உள்ளனர். அதுவும் உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 69 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 30-ல் இந்தியாவும், 37-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    போலந்தில் கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றிருந்தார்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ரஷ்யாவின் ஆன்டன் புலேவ் மோதினர். அபாரமாக ஆடிய அபிஷேக் 146–138 என வெற்றி பெற்றார். 

    தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபிஷேக் வர்மா அமெரிக்காவின் கிரிஸ் ஸ்ஷாப் மோதினர்.


    விறுவிறுப்பாக நடந்த இப்போட்டி  148–148 என சமநிலை அடைந்தது. அதன்பின், ‘டை பிரேக்கர்’ முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் அபிஷேக் 10–9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    உலக கோப்பை தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா கைப்பற்றிய 2-வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    குரோஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.
    ஓசிஜெக்:

    குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கலப்பு அணிகளுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

    இறுதிச்சுற்றில் ரஷியாவும் இந்தியாவும் மோதின. இதில், இந்தியாவின் மனு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 12-16 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்ததால், அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

    மனு பாகெர், சவுரப் சவுத்ரி

    இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது. 

    பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 
    ஹர்மன்பிரீத் சிங், வந்தனா கட்டாரியா மற்றும் நவ்ஜோத் கவுர் ஆகியோரின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.

    தீபிகா

    அவ்வகையில், இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இதேபோல், ஹர்மன்பிரீத் சிங், வந்தனா கட்டாரியா மற்றும் நவ்ஜோத் கவுர் ஆகியோரின் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    முன்னாள் வீரர்கள் டாக்டர் ஆர்.பி.சிங், எம்.சிஎச்.சங்காய் இபெம்ஹல் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான  தயான் சந்ந் விருதுக்கும், பயிற்சியாளர்கள் பி.ஜே.கரியப்பா, சி.ஆர்.குமார் ஆகியோர் துரோணாச்சாரியா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பட்லர் முதல் போட்டியில் காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் அவர் ஆடவில்லை.
    இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஒவர் போட்டி இன்று நடக்கிறது.

    இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பட்லர் முதல் போட்டியில் காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் அவர் ஆடவில்லை. இந்த நிலையில் அவர் எஞ்சிய 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இருந்து விலகி உள்ளார். ஒருநாள் போட்டிகள் வருகிற 29, ஜூலை 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    பட்லர் விளையாடாததால் டேவிட் மலன் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 158 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடக்கூடியது. இதனால் அந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    கூடுதல் பேட்ஸ்மேனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 2 சுழற்பந்து வீரர்களை தேர்வு செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீரர் முகமது சிராஜூக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் இறுதி போட்டியில் ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடியுள்ளார்.

    வானிலை மாற்றம் காரணமாக 2 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்தது விவாதத்துக்குரிய முடிவாகும். ஜடேஜாவை சுழற்பந்து வீச்சுக்காக அல்லாமல் பேட்டிங்குக்காக தேர்வு செய்துள்ளார்கள். பேட்டிங்குக்காக ஜடேஜாவை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாகும். இதை நான் எப்போதுமே எதிர்த்து வருகிறேன்.

    சிறப்பு தகுதி கொண்ட வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால், அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்தது சரியாக இருந்திருக்கும்.

    ஆனால் ஜடேஜாவை அவருடைய பேட்டிங் திறமைக்காக தேர்வு செய்துள்ளார்கள். இது பெரும்பாலும் விளைவுகளையே உண்டாக்கும். விகாரியை தேர்வு செய்திருந்தால், இந்திய அணிக்கு கூடுதலாக ரன் கிடைத்திருக்கும். 170 ரன்கள் என்பது 220 அல்லது 230 ரன்களாக மாறி இருக்கலாம்.

    கூடுதல் திறமை உள்ளதற்காக ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதை இனிமேலும் இந்தியா செய்யாது என்று நினைக்கிறேன். முக்கியமான ஆட்டங்களில் திறமை எப்போதாவதுதான் பயன் தரும்.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

    இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான வெற்றியாளரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்தி தீர்மானிப்பது சரியல்ல என கூறியிருந்தார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க இனி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இறுதி ஆட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கோலி கூறும்போது, அடிப்படையில் யார் சிறந்த டெஸ்ட் அணி என்பதை ஒரே ஒரு போட்டியை வைத்து தீர்மானிப்பதை நான் முழுமையாக ஏற்கவில்லை என்றார்.

    உலக டெஸ்ட் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான வெற்றியாளரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்தி தீர்மானிப்பது சரியல்ல. 3 போட்டிகளாவது ஆட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் 3 இறுதிப்போட்டி என்ற விராட் கோலியின் யோசனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஏற்க மறுத்துள்ளார்.

    அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வாகன் கூறியதாவது:-

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து திட்டமிட எங்கே இடமிருக்கிறது. 3 டெஸ்ட் போட்டிகளுக்காக ஐ.பி.எல். தொடரை 2 வாரங்கள் குறைத்து கொள்வார்களா? என்பது சந்தேகமே.

    இறுதி போட்டி என்றாலே ஒரே ஒரு ஆட்டம்தான். அந்த ஒரு போட்டியில் அணிகள் திறமையாக விளையாட வேண்டும். இது வீரர்களுக்கு தெரியும். அதுதான் அவர்களுக்கு சிறந்த வீரர்கள் என்பதை காட்டுகிறது.

    இவ்வாறு வாகன் கூறியுள்ளார்.

    விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
    சென்னை:

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    * விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை.

    * ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி.

    டோக்கியோ ஒலிம்பிக்

    * ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும்.

    * வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று கூறினார்.
    கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.

    இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்குரிய முதற்கட்ட பணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடங்கிவிட்டது.

    கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை அமீரகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாகவும், இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பார்கள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும் என விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    தோல்விக்குப்பின் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து மீண்டும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். அணியை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்போம். ஒரே மாதிரியான அணியைத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடர மாட்டோம்.

    அடுத்த திட்டத்துக்காக ஒரு வருடம் வரை காத்திருக்கமாட்டோம். எங்கள் ஒயிட் பால் அணியில் ஏராளமான வீரர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகவும், நம்பிக்கையுடனும் உள்ளார்கள். அதேபோல் டெஸ்ட் அணியையும் தயார் செய்ய வேண்டும்.

    அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் சரியாக இருப்பாரக்ள், துணிச்சலுடன் சவாலை எதிர்கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். சரியான மனநிலையுடன் உள்ள வீரர்களை அணிக்குக் கொண்டு வர வேண்டும்’’ என விமர்சனம் செய்திருந்தார்.

    இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் டுவிட்டரில் ‘‘இது வெறும் அணியல்ல. இது ஒரு குடும்பம். ஒன்றாக இணைந்து நாங்கள் முன்னோக்கி பயணிக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    மேட்ச் முடிந்த உடன் கடுமையான வகையில் விமர்சனம் செய்துவிட்டு, டுவிட்டரில் கூலாக ஒன்றாக பயணிக்கிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ள நிலையில், அவர் என்ன சொல்ல வருகிறார்? என்பதை தெளிவாக புரிய முடியாமல் ரசிகர்கள் உள்ளனர்.
    ×