search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சுடுதல் போட்டி"

    • சீனா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது.
    • இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளது.

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 20 புள்ளிகள் மட்டுமே எடுத்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 6-வது பதக்கம் இதுவாகும். உலக போட்டியில் பலமுறை தங்கப்பதக்கம் வென்று இருக்கும் அரியானாவை சேர்ந்த 21 வயதான மானு பாகெரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.

    இந்த போட்டியில் ஜெர்மனி வீராங்கனை டோரீன் 30 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், சீன வீராங்கனை ஜியு டு 29 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

    நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் சீனா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்திலும், இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    • சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    • சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள தவறினார்.

    262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்ற 52 பேரில் இருந்து தகுதி சுற்று மூலம் டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    • நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • ருத்ரங்க்ஷ் பாட்டில் அவருடன் போட்டியிட்ட மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.

    எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்து உள்ளது.

    10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    • 7 மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஓபன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன்.
    • துப்பாக்கிச் சுடும் போட்டியில் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    திருச்சி:

    செங்கல்பட்டு மாவட்டம் ஓதிவாக்கத்தில் 23-வது அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் வருகிற 13 வரை நடைபெறுகிறது. இதில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பல்வேறு தரவரிசையில் உள்ளவர்கள் பங்கேற்கின்றனர்.

    நிகழ்ச்சியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். 2011-ம் ஆண்டுக்கு பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. அவர்களில் 8 பேர் மத்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இதில் தமிழ்நாடு போலீஸ் கமாண்டோ பிரிவில் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சோபியாலாரன் என்ற 42 வயது பெண் தலைமைக் காவலர் இடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அணியில் இருந்து வந்துள்ள ஒரே பெண்மணி இவர் மட்டும்தான்.

    திருச்சி அருகே உள்ள கல்லணை தோகூர் பகுதியைச் சேர்ந்த சோபியா கூறும்போது, நான் 2004-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தேன். நான் மாநில மற்றும் தேசிய போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மாநில அளவில் மற்றும் சிவிலியன் நிகழ்வுகளில் நான் பல பதக்கங்களை வென்றுள்ளேன். என்னுடைய போட்டி இன்று நடைபெறுகிறது.

    நான் ஏற்கனவே தேசிய அளவிலான துறை ரீதியிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். 7 மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஓபன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். இந்தப் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். பிளஸ்-2 வகுப்புக்குப் பிறகு நான் சீருடை அணிந்த சர்வீஸ்களில் சேர விரும்பினேன்.

    எனது முதல் துப்பாக்கி சுடுதல் போட்டி 303 வகை ரைபிளுடன் இருந்தது. அதுமுதல் நான் எந்த துப்பாக்கி சுடும் போட்டியையும் தவறவிட்டதில்லை. இதில் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். 

    தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
    ரோக்லா: 

    போலந்து நாட்டின் ரோக்லா நகரில் ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி இணைந்து  தங்கம் வென்று சாதனை படைத்தனர். தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் இந்த ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    இந்த பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா-உக்ரைன் வீராங்கனை ஒலேனாவுடன் இணைந்து பங்கேற்றார். இந்த ஜோடி 6வது இடத்தைப் பிடித்தது. சவுரப் சவுத்ரி-ஹெய்டி ஜோடி 7வது இடத்தை பிடித்தது. யாஷாஸ்வினி தேஸ்வால் ஜோடி 10வது இடத்திற்கு பின்தங்கியது.
    ×