என் மலர்
விளையாட்டு


A fan just caused a MASSIVE crash at the very beginning of the Tour De France 😬 pic.twitter.com/6q5TwQRBdU
— Blake Harms (@wxblakeharms) June 26, 2021


லண்டன்:
உலகின் மிகவும் பழமையான கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் போட்டி கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான 3-வது கிராண்ட்சிலாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நாளை தொடங்குகிறது. ஜூலை 11-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
முன்னணி வீரர்களான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். வீராங்கனைகளில் நடப்பு சாம்பியனான ஷிமோனா ஹலேப் காயம் காரணமாக ஆடவில்லை.
நடப்பு சாம்பியனான ஜோகோவிச் (செக் குடியரசு) இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக அவர் 19 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றுள்ளார்.
ஜோகோவிச் 20-வது பட்டம் வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது. இருவரும் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவர்களில் முதல் இடத்தில் உள்ளனர்.
கிராண்ட் சிலாம் வென்றதில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் தற்போது உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். விம்பிள்டன் போட்டியும் அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.
பெடரர், சிட்சிபாஸ், மெட்வதேவ் ஆகியோர் ஜோகோவிச்சுக்கு சவால் கொடுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்லிபார்டி, சபலென்கோ, சோபியா கெனின் ஆகியோர் பட்டம் பெறுவதற்கு கடுமையாக போராடுவார்கள்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, ஆக்கி, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இருந்து 58 வீரர்களும், 48 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 106 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் நீச்சல் போட்டியில் இருந்து ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஒரு நிமிடம் 56.38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஒலிம்பிக்குக்கு நுழைய ஒரு நிமிடம் 56.48 வினாடிகளில் கடக்க வேண்டும். சாஜன் பிரகாஷ் அந்த இலக்குக்கு முன்பே தொட்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் ஆவார். 27 வயதான அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயினின் செவில்லி நகரில் நடக்கும் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியும், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியமும் மல்லுகட்டுகின்றன.
பெல்ஜியம் லீக் சுற்றில் ரஷியா, டென்மார்க், பின்லாந்து ஆகிய அணிகளை துவம்சம் செய்து 3 வெற்றிகளுடன் 2-வது சுற்றுக்கு வந்துள்ளது. பலமான அணியாக உருவெடுத்துள்ள பெல்ஜியம் இதுவரை உலக கோப்பை மற்றும் யூரோ கோப்பை எதையும் வென்றதில்லை. இந்த முறை அந்த சோகத்துக்கு விடைகொடுக்கும் முனைப்புடன் உள்ளது. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை கோலாக்கும் சாமர்த்தியசாலியான ரோம்லு லுகாகு (3 கோல்), ஈடன் ஹசார்ட், கெவின் டி புருன், ஆக்சல் விட்செல் ஆகியோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள்.
உலக தரவரிசையில் 5-து இடம் வகிக்கும் போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் ‘குரூப் ஆப் டெத்’ எனப்படும் கடின பிரிவில் (எப் பிரிவு) இடம் பிடித்திருந்தது. ஹங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த போர்ச்சுகல் அதன் பிறகு ஜெர்மனியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் அடிவாங்கியது. உலக சாம்பியன் பிரான்சுக்கு எதிரான கடைசி லீக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்து தனது பிரிவில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ள ரொனால்டோவுக்கு கோல் வேட்கை மட்டும் இன்னும் தணியவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஒரு கோல் திணித்தால் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவரான ஈரானின் அலி டாயின் (109 கோல்) சாதனையை முறியடித்து விடுவார். அவருக்கு பெப்பே, ரபெல் குயரீரோ, பெர்னர்டோ சில்வா உள்ளிட்டோர் பக்கபலமாக இருக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசம பலத்துடன் இவ்விரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு சந்தித்துள்ளன. இதில் 6-ல் போர்ச்சுகலும், 5-ல் பெல்ஜியமும் வெற்றி பெற்றன. எஞ்சிய 7 ஆட்டம் டிராவில் முடிந்தது. 1989-ம் ஆண்டுக்கு பிறகு பெல்ஜியம் அணி போர்ச்சுகலை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 32 ஆண்டுகளில் போர்ச்சுகலுடன் 5 முறை மோதியுள்ள பெல்ஜியம் அதில் 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
முன்னதாக புடாபெஸ்ட் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-செக்குடியரசு அணிகள் சந்திக்கின்றன. போட்டிகளை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.







