என் மலர்
விளையாட்டு



சான்ஜூயான்:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை கத்தாரில் நடக்கிறது.
இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டுமே நேரடியாக விளையாடும். மீதியுள்ள 31 நாடுகளும் தகுதி சுற்று மூலமே முன்னேற முடியும்.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
4 முறை சாம்பியனான ஜெர்மனி, டென்மார்க், 5 முறை கோப்பையை வென்ற பிரேசில், 2 தடவை சாம்பியனான பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின், செர்பியா, 1966- ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே வரிசைப்படி தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்து ஆகிய அணிகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
சான்ஜூயான் நகரில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினா- பிரேசில் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுமின்றி டிரா ஆனது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியால் கோல் போட முடியவில்லை.
இந்த போட்டி டிராவில் முடிந்தாலும், அர்ஜெண்டினா அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. தென் அமெரிக்க கண்டத்தில் தகுதி சுற்றில் முதல் 4 இடங்களில் அந்த அணி உள்ளது.
அர்ஜெண்டினா உலக கோப்பை போட்டிக்கு 18-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. இதில் 2 முறை (1978, 1986) சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இதேபோல ஐரோப்பிய கண்டத்தில் நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் நார்வேயை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐரோப்பிய கண்டத்தில் வலுவான அணிகளில் ஒன்றான நெதர்லாந்து கடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. தற்போது அந்த அணி வீரர்கள் தகுதி சுற்றில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
நெதர்லாந்து அணி 10-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 3 முறை 2-வது இடத்தை பிடித்துள்ளது.
உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 12 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 19 நாடுகள் தகுதிபெற வேண்டியுள்ளது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த செய்தி பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி எங்களது திறமையை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர், நவ. 17-
நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.
வீராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய தால் இந்திய அணிக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி இடத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா- ராகுல் டிராவிட்டின் புதிய கூட்டணி இன்றைய 20 ஓவர் போட்டியில் வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.
வீராட் கோலி நியூசிலாந் துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாட வில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல முதல் டெஸ்டிலும் ஆடவில்லை.
வீராட் கோலி குறித்து செய்தியாளர்கள் சந்திப் பில் புதிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வீராட் கோலியின் பங்களிப்பு அப்படியே இருக்கும். இதற்கு முன்பு அவர் அணியில் எப்படி இருந்தாரோ அதே பணியை தொடர்ந்து செய்வார். அவர் மிக முக்கியமான வீரர். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அடையாளத்தை விட்டு செல்கிறார்.
வீராட் கோலி திரும்பும் போது அணிக்கு பலம் மட்டுமே கிடைக்கும். பேட்ஸ்மேனாக அவரது அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமானது.
அணியில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கிறது. அதை சரி செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அனைத்து அணிகளிலும் இதேபோல் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். எந்த அணியையும் பின் பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தனி அடை யாளத்தை உருவாக்கவே விரும்புகிறோம்.
முதலில் பேட்டிங் செய்யும்போதும், 2-வது பேட்டிங் செய்யும்போதும் உள்ள ஒப்பீடு மாறுபட்டது. ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை அச்சமின்றி விளையாடுவது அவசிய மாகும். அதற்கு தன்னம் பிக்கை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. நாம் எப்போதுமே வெற்றிபெற முடியாது. தோல்வியும் ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் நமது பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும்.
சையது முஸ்தாக் அலி மற்றும் ஐ.பி.எல். ஆகிய இரண்டு 20 ஓவர் தொடரில் வீரர்கள் விளையாடி உள்ளனர். இதிலிருந்து அவர்கள் அனுபவங்களை பெற்றிருப்பார்கள். அதே மாதிரி பங்களிப்பில் விளை யாடுவது அவசியமாகும்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணி கேப் டன் வில்லியம்சன் 20 ஓவர் தொடரில் விளையாட வில்லை. அதனால் அவருக்கு பதிலாக சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். * * * பிரதமர் மோடியை உலக பொருளாதார அமைப்பின் தலைவர் போர்ஜ் பிரெண்டே சந்தித்து பேசினார். * * * அம்மா நவமி பூஜையையொட்டி பாட்னாவில் பெண்கள் அம்மா மரத்தை வழிபட்ட காட்சி.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி அங்கிருந்து நேரடியாக ஜெய்ப்பூர் வந்துள்ளது. இதேபோல் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணி ஜெய்ப்பூர் சென்று பயிற்சியில் ஈடுபட்டது.
20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியியின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி லீக் சுற்று ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும். ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி நேரத்தில் 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும். அவர் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வரும் பெர்குசன் ஆடுவது சந்தேகம் தான்.
நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளைன் பிலிப்ஸ் ஆகியோரும், பந்து வீச்சில் டிம் சவுதி, கைல் ஜாமிசன், சோதி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
உலக கோப்பையில் வெளிப்படுத்திய உத்வேகத்தை தொடர நியூசிலாந்து அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் உலக கோப்பையில் தங்களது அரையிறுதி வாய்ப்புக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து அணிக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 6 முறையும், நியூசிலாந்து அணி 9 தடவையும் வென்று இருக்கிறது. ‘டை’யில் முடிந்த 2 ஆட்டங்களில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றியை ருசித்ததும் இதில் அடங்கும்.
இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய்ப்பூரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான இரு அணியின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், மார்க் சாப்மன், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே அல்லது பெர்குசன், சோதி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.






