என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இரண்டு கைக்கடிகாரங்களும், துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில் அவற்றிற்கான ரசீது எதுவும் பாண்டியாவிடம் இல்லை என்பது சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.

    இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில், அவற்றிற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால், ஹர்திக் பாண்டியா மீது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.


    டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷுக்கு வழங்கப்பட்டது.
    துபாய்:

    டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் நடந்த  இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

    ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான  அரையிறுதி போட்டியில் டேவிட் வார்னர் 30 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    நாக் அவுட் போட்டிகளில் அதிக அழுத்தத்தை கடந்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னருக்கு இந்த டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் விருது நியாயமற்றது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தத் தொடரின் நாயகனாக பாபர் அசாம்  வருவதைக் காண மிகவும் ஆவலுடன் இருந்தேன். நிச்சயமாக இது நியாயமற்ற முடிவு என பதிவிட்டுள்ளார்.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐ.சி.சி.யின் டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த முறை டி20 சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி மகுடம் சூடியது. நியூசிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில், மிகவும் மதிப்புமிக்க டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் மட்டுமே  இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்திய வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மேற்கு இந்தியத்தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணியின் வீரர்கள் விவரம் வருமாறு,

    1.டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா)
    2.ஜோஸ் பட்லர்-விக்கெட்கீப்பர்(இங்கிலாந்து)
    3.பாபர் ஆசம்-கேப்டன்(பாகிஸ்தான்)
    4.சரித் அசலங்கா(இலங்கை)
    5.ஏடன் மார்க்ரம்(தென் ஆப்பிரிக்கா)
    6.மொயின் அலி(இங்கிலாந்து)
    7.வணின்டு ஹசரங்கா(இலங்கை)
    8.ஆடம் ஸாம்பா(ஆஸ்திரேலியா)
    9.ஜோஸ் ஹாசில்வுட்(ஆஸ்திரேலியா)
    10.ட்ரெண்ட் பவுல்ட்(நியூசிலாந்து)
    11.ஆன்ரிச் நார்ட்ஜே(தென் ஆப்பிரிக்கா)
    12.சஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்)
    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

    நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்

    173 ரன்கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வார்னர் ஆட்டமிழந்தார்.

    மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

    வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்துள்ளனர்.

    மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்துள்ளனர்.

    இவர்கள் மூவரும் ஷூவில் மதுபானம் ஊற்றி குடித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
    துபாய்:

    ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 
    ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது. 

    2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

    நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தார்.
    துபாய்:

    டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 85 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 77 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் அரை சதமடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், தொடர் நாயகன் டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.
    டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
    துபாய்:

    ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதேசமயம் மற்றொரு துவக்க வீரர் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

    வார்னர்

    இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் ஆடினார். 

    இதனால், ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இதன்மூலம், முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது. 
    அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்தார்.
    துபாய்:

    ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களான டேரில் மிட்செல் 11 ரன்னிலும், மார்ட்டின் குப்தில் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். மறுமுனையில் பிலிப்ஸ் நிதானமாக ஆடினார்.

    மார்ட்டின் குப்திலை அவுட் ஆக்கிய ஆடம் ஜம்பா

    அணியின் ஸ்கோர் 144 ஆக இருந்தபோது, பிலிப்ஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

    ஜேம்ஸ் நீஷம் 13 ரன்கள் , டிம் செய்பர்ட் 8 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.  ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும்.
    துபாய்:

    ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

    கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்து அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டது. விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி சூப்பர்-12 சுற்றை கூட தாண்டவில்லை.

    இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. நியூசிலாந்து இறுதிச் சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர்- 12 சுற்றில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்கு வந்தது.  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர்-12 சுற்றின் லீக் சுற்றில் 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் ‘ரன்ரேட்’ அடிப்படையில் அரை இறுதியை எட்டியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட பாகிஸ்தானை அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாய்த்தது.

    உலக கோப்பையை வெல்வதில் இரு அணி வீரர்களும் புது உத்வேகத்துடன் களமிறங்கி உள்ளனர்.  இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும். மேலும் 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அதற்கு பழிதீர்க்க வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். 

    50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பை தான் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. அதை வெல்வதற்கு இப்போது அரிய சந்தர்ப்பம் கனிந்துள்ளது.
    கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்கு தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள்.
    கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஆதர்ஷ். இவருக்கு 5-வது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

    இந்த ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 ஆட்டங்களில் விளையாட முடியும். அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. 

    ஆனால் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை. எனவே, அவர் கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார். இதனைத் தொடர்ந்து, ஆதர்ஷின் நிலைமை மற்றவர்களும் தெரியவந்தது. பலர் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். 

    கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். மேலும்,  தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார். 

    அதுமட்டுமல்லாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு ஆதர்ஷுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆதர்ஷ் ஸ்பெயின் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதர்ஷ் விரைவில் மேட்ரிட் சென்று பயிற்சியில் பங்கேற்க வாழ்த்து தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
    நியூசிலாந்து சிறிய நாடு என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில்,  வெல்லப் போவது யார் என்று சமூக வலைதளங்ளில் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘சர்வதேச அரங்கில் நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவும் சிறந்த அணிதான். இருப்பினும், அவர்கள் தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளனர். 

    நியூசிலாந்து அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்திருப்பது ஆட்டத்தில் நன்றாக தெரிகிறது. நியூசிலாந்து அணிக்கு போராடும் குணமும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றனர். நியூசிலாந்து சிறிய நாடு தான் என்றாலும் கூட திறமையான பல வீரர்களைக் கொண்டுள்ளது. இது நியூசிலாந்திற்கான நேரம் என்பதே எனது கருத்து" என்று தெரிவித்தார்.
    இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.
    லண்டன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா - வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்து அணியா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.

    அவர் கூறுகையில், ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளே மோதின. அதில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போதும் அந்த இரு அணிகளே டி20 இறுதிப்போட்டியிலும் மோத உள்ளன. இன்று நடக்கும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியா 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இருந்தது. இப்போது கோப்பையை வெல்ல இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×