என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்- முதல் தடையை கடந்த இந்திய வீரர்கள்
Byமாலை மலர்17 Nov 2021 7:49 AM GMT (Updated: 17 Nov 2021 11:36 AM GMT)
இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ பாபோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாலி:
பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் முன்னணி வீரர், வீராங்கனைகள் முதல் தடையை கடந்துள்ளனர்.
முன்னாள் நம்பர்-1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது துவக்க ஆட்டத்தில் (ஒற்றையர் முதல் சுற்று) பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ பாபோவை 21-18 15-21 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஸ்ரீகாந்த் அநேகமாக இந்தோனேசிய வீரர் ஜோனாதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா-சிக்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் பிரவீன் ஜோர்டான்-மெலாட்டி தேவா ஜோடியை 21-11 22-20 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு முன்னணி இந்திய வீரரான பருபள்ளி காஷ்யப், தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹன்ஸ் கிறிஸ்டியனிடம் 10-21 19-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பி.வி.சிந்து, லக்சயா சென் ஆகியோர் ஏற்கனவே 2ம் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X