search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சருடன் சி.எஸ்.கே. அணி நிர்வாகிகள்
    X
    முதலமைச்சருடன் சி.எஸ்.கே. அணி நிர்வாகிகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2021 சீசன் இந்தியாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில், வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×