என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியை ஒருநாள் கிரிக்கெட்டுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளது பிசிசிஐ.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்.எஸ். டோனியிடம் இருந்து மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியையும் பெற்றுக் கொண்டவர் விராட் கோலி.

    டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பேட்டிங் திறமையுடன் அணியையும் சிறப்பான வழி நடத்திச் சென்றார். ஆனால், ஐ.சி.சி. நடத்திய உலகத் தொடர்களில் இவரது தலைமையில் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

    பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியடைந்தது. ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது.

    ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டனாக உள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில இந்திய அணி இவரது தலைமையில் 95 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டு போட்டிகளில் முடிவுகள் கிடைக்கவில்லை. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 27 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் 65 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.

    ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தபோது, விராட் கோலி 21 சதங்கள் விளாசியுள்ளார். சராசரி 72 ஆகும்.
    டேவிட் வார்னர் சதத்தை தவறவிட, டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 152 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில 425 ரன்கள் குவித்தது.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து பேட் கம்மின்ஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்னில் சுருண்டது. கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 94 ரன்னில் வெளியேறினார். மார்னஸ் லாபஸ்சேன் 74 ரன்கள் சேர்த்தார்.

    ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்னில் ஏமாற்றம் அளித்தாலும், டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 112 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஸ்மித் அவுட்

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடி டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசினார். ஸ்டார்க் 35 ரன்கள் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104.3 ஓவர்களில் விளையாடி 425 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஓலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 278 ரன்களை கடந்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால், 2-வது இன்னிங்சில் மிகப்பெரிய ஸ்கோரை எதிர்பார்த்து விளையாடி வருகிறது.

    ஒருநாள் போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். 

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ரோகித் சர்மா ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தனது பணியை தொடர்வார்.

    இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியதாவது:

    விராட் கோலியிடம் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து, இரண்டு வெள்ளை பந்து வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர். எனவே ஒருநாள் தொடரிலும் ரோகித்தை ஒருநாள் தொடரின் கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது. ரோகித் சர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    மேலும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார். இந்திய கிரிக்கெட் சிறந்த வீரர்களின் கைகளில் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். வெள்ளைப் பந்து வடிவத்தில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என் தெரிவித்தார்.

    விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக ஆடிய தமிழக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    திருவனந்தபுரம்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் உள்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது .

    இறுதியில், கர்நாடக அணி 36.3 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    தமிழக அணி சார்பில் சித்தார்த் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 18 ரன்னும், ஜெகதீசன் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் ஜோடி தமிழக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், தமிழக அணி 28 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 51 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது தமிழக அணி பெற்ற 2வது வெற்றி.
    ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில்  ஆஸ்திரேலியா-இங்கிலாந்து  அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 


    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும், ஹசீப் ஹமீது 25 ரன்களும் எடுத்தனர். 

    ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்க இருந்த நிலையில்  மழை குறுக்கிட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது . இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தனது ஆதிக்கத்தை செலுத்தி சிறப்பாக விளையாடியது .

    இரண்டாம் நாள்  ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலியா அணி  7விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளது.  ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்  அதிரடியாக  விளையாடி சதம் அடித்தார்.டேவிட் வார்னர் 94 ரன்களுடனும் மார்னஸ் லேபஸ்சேகன் 74 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 

    ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்  112 ரன்களும். மிட்சேல் ஸ்டார்க் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணியில் ஒல்லி  ராபின்சன் 3 விக்கெட்டும் ,கிறிஸ் வோக்ஸ் , ஜோ ரூட் ,மார்க் வுட் ,ஜேக் லீச் ஆகியோர் தலா  1 விக்கெட் வீழ்த்தினர்.
    கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றபோது டிவில்லியர்ஸ், டுபெலிசிஸ் போன்ற வீரர்கள் தொடரை வெல்ல தடையாக இருந்தார்கள் என ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் சுழற்பந்துவீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றபோது டிவில்லியர்ஸ், டுபெலிசிஸ் போன்ற வீரர்கள் தொடரை வெல்ல தடையாக இருந்தார்கள்.

    தற்போதுள்ள தென் ஆப்பிரிக்கா அணி வலுவாக இல்லை. இதனால் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் பாகிஸ்தான் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    துபாய்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்தது.

    இந்தநிலையில் டாக்காவில் நடந்த 2-வது டெஸ்டிலும் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    ஏற்கனவே 20 ஓவர் தொடரை அந்த அணி முழுமையாக 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் பாகிஸ்தான் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    66.66 சதவீத புள்ளிகளில் இருந்த அந்த அணி தற்போது 75 சதவீத புள்ளிகளை பெற்று உள்ளது. அந்த அணி அடுத்து இலங்கையுடன் விளையாட இருக்கிறது.

    புள்ளி பட்டியல்

    இலங்கை முதல் இடத்திலும் (100 சதவீத புள்ளிகள்), இந்தியா 3-வது இடத்திலும் (58.33 சதவீத புள்ளிகள்) உள்ளன. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 8-வது இடங்களில் உள்ளன.

    இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.

    டோனிக்கு பிறகு அவர் 3 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பேட்டிங் திறன் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டது.

    இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கருத்து எழுந்தது. விமர்சனங்கள் காரணமாக 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

    சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியை துறப்பதாக அவர் போட்டிக்கு முன்பே தெரிவித்தார். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.

    ஆனால் கோலியோ கேப்டன் பதவியைவிட்டு செல்ல விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் கெடுவை நிராகரித்தார்.

    இதைத்தொடர்ந்து 49-வது மணி நேரத்தில் ரோகித்சர்மாவை கேப்டனாக நியமித்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்தது. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தது.

    மேலும் கேப்டன் பதவியில் விராட் கோலியின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன. தொடக்கத்தில் நன்றாக இருந்த அவர் போகப்போக தனது அதிகார போக்கை கடைபிடித்ததாக தெரிகிறது. அவரால் குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    குல்தீப் யாதவ் - விராட் கோலி

    மேலும் இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    டெஸ்ட் அணிக்கு மட்டுமே 33 வயதான கோலி கேப்டனாக இருப்பார். “ஒயிட் பால்” போட்டிகளுக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித்சர்மா கேப்டனாக பணியாற்றுவார்.

    விராட் கோலி 95 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 65-ல் வெற்றி கிடைத்தது. 27 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 2 போட்டி முடிவு இல்லை.

    ஐம்பது 20 ஓவரில் கேப்டனாக இருந்து 30-ல் வெற்றி பெற்றார். 16-ல் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 2 போட்டி முடிவு இல்லை. 

    இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளர் ஆகிறார் ஹர்பஜன் சிங்

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 147 ரன்னில் சுருண்ட நிலையில், ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து 147 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜோஸ் பட்லர் 39 ரன்களும், ஓலி போப் 35 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதும் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. லாபஸ்சேன் 71 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மார்னஸ் லாபஸ்சேன்

    மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 31 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  113 ரன்கள் எடுத்திருந்து. உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. டேவிட் வார்னர் 102 பந்தில் அரைசதம் அடித்தார்.

    தற்போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. வார்னர் 74 ரன்களுடனும், லாபஸ்சேன் 68 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
    காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்ளாத கே.எல்.ராகுல், காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். சமீபத்தில் விராட் கோலி டி20 பதவியிலிருந்து விலகிய நிலையில், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். 

    இந்நிலையில் ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய ஒருநாள் போட்டி கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது பிசிசிஐ. இதேபோல் டெஸ்ட் போட்டிக்கான அணியின் துணை கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டிருக்கிறார். கேப்டனாக விராட் கோலி நீடிக்கிறார்.

    அத்துடன், தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் போட்டி அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்ளாத கே.எல்.ராகுல், காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். இதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இந்த தொடரில் இணைந்துள்ளனர்.

    ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடருக்கு தேர்வு  செய்யப்படவில்லை. அஸ்வினுடன் சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் தனது நிலையை தக்கவைத்துள்ளார். விர்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்க  சுற்றுப்பயணத்தின்போது இந்தியா ஏ அணியில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விகாரிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதன்மூலம், லிமிடெட் ஓவர் போட்டிகளில் விராட் கோலியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. 

    இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்),  அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

    காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்சான் நக்வாஸ்வல்லா.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது.
    ஹர்பஜன் சிங் ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஐ.பி.எல். போட்டியில் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடினார்.

    தற்போது ஐ.பி.எல்.லில் விளையாடுவதில் இருந்தும் அவர் ஓய்வு பெற்று உள்ளார். 41 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் ஒருஅணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எந்த அணிக்கு ஆலோசகராக இருப்பார் என்பது தெரியவில்லை.

    ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் 85 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி ஸ்டார்க் சாதனை புரிந்து உள்ளார்.

    ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் ஆட்டத்தின் முதல் பந்தில் இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்சை அவுட் செய்தார்.

    ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் 85 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி ஸ்டார்க் சாதனை புரிந்து உள்ளார்.

    1936-ம் ஆண்டு ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மெக்ரோமிக், இங்கிலாந்து வீரர் வொர்த்திக்டெனை பிரிஸ்பேனில் முதல் பந்தில் அவுட் செய்தார்.

    ×