என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிக்காக ஏற்கனவே உள்ள 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்தது. புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், சுப்மன்கில் உள்ளிட்ட வீரர்களை எடுக்க புதிய அணிகள் ஆர்வத்துடன் உள்ளன. கடந்த சீசனில் ராகுல் பஞ்சாப் அணியிலும், அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணியிலும், ரெய்னா சென்னை அணியிலும், சுப்மன்கில் கொல்கத்தா அணியிலும் விளையாடினார்கள்.
ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் பிரிஸ்பேன் டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்தினார். டேவிட் மலான் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் 400-வது விக்கெட்டை தொட்டார்.
34 வயதான அவர் 101 டெஸ்டில் விளையாடி 403 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 50 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
வார்னே, மெக்ராத் ஆகியோருக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டை எடுத்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை லயன் பெற்றார். சர்வதேச அளவில் 16-வது வீரர் ஆவார்.
போபால்:
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பெற்ற 11 தங்கப் பதக்கங்களை பிபின் ராவத்துக்கு வீராங்கனை ஒருவர் அர்ப்பணித்துள்ளார். அவரது பெயர் பந்தாவி சிங். அவர் பிபின்ராவத்தின் உறவினர் ஆவார்.
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் பங்கேற்ற பந்தாவி சிங் 11 தங்கப் பதக்கங்களை பெற்றார். இந்த பதக்கங்களை அவர் பிபின் ராவத்துக்கு அர்ப்பணித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘பதக்கங்களை பெற்று உறவினரும், ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவருமான பிபின் ராவத்துக்கு அர்ப்பணிப்பதற்காகவே நான் இந்த போட்டியில் பங்கேற்றேன். அவர் எனது ஆலோசகர், வழிகாட்டி ஆவார்’ என்றார்.

20 வயதான பந்தாவி சிங் விபத்தில் பலியான பிபின் ராவத்தின் மனைவி மதுலிகாவின் சகோதரர் யாஸ்வரதன் சிங்கின் மகள் ஆவார்.
இதையும் படியுங்கள்...2 இலங்கை ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய தடை
மைதானத்தில் சர்பிரைஸ் ப்ரோபோசல் - ஆஷஸ் தொடரில் ருசிகரம்#AUSvENG#Ashes2021pic.twitter.com/KXc2EFzDOD
— Maalai Malar News (@maalaimalar) December 10, 2021
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து புதிய கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டு ரோகித்சர்மா நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும் போது, “20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன் ஒத்து வராது என்பதால் ஒருநாள் போட்டிக்கும் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் புதிய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
அணியில் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்த நான் விரும்புகிறேன். 10 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழக்கும் சூழ்நிலையில் எப்படி விளையாடவேண்டும் என்பதற்கு தயார்படுத்த விரும்புகிறேன்.
அணி தொடக்கத்தில் தடுமாறும்போது 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அடுத்து நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் உள்ளன. அதை சோதித்து பார்க்க வேண்டும். 10 ரன்னுக்கு 2 விக்கெட் விழுந்த பிறகு வீரர் ஒருவர் என்ன ஷாட் விளையாடுகிறார் என்று மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை.
வர்ணணையாளர்கள், இந்திய மக்கள், இது அணியின் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கேப்டன் விளையாடும் போது முன்னணியில் நிற்க வேண்டும். மற்ற எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்க வேண்டும். கேப்டன் பின்னால் நிற்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் அவர் அனைவரையும் சுற்றி இருப்பதை உறுதி செய்ய முடியும்.
ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியம். அவர் இன்னும் அணியின் தலைவர்தான். எனவே அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.






