search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக பேட்மிண்டன் போட்டி"

    • உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
    • ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்செட்டை தன்வசப்படுத்தி பிரமாதமான தொடக்கம் கண்ட பிரனாய் அடுத்த 2 செட்களில் எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.

    1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்த பிரனாய் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அவர் முந்தைய நாளில் நடந்த கால் இறுதியில் நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியனான விக்டர் ஆக்சல்சென்னுக்கு(டென்மார்க்) அதிர்ச்சி அளித்து இருந்தார். உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 23-21, 21-13 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' வீரர் அன் சே யங் (தென்கொரியா) 21-19, 21-15 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீரரான சென் யு பெய்யை (சீனா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    • சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும்.
    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும்.

    கவுகாத்தி:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கடந்த பல போட்டிகளில் நான் விளையாடிய விதம் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலக போட்டிக்காக நன்றாக தயாராகி இருக்கிறேன். கடந்த பல்வேறு போட்டிகளில் எனது ஆட்ட 'பார்ம்' நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்வதுடன் முன்னேற்றமும் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டிக்கு தயாராக விளையாடிய பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அது எனக்கு நிறையை தன்னம்பிக்கையை கொடுக்கும். வரும் வாரத்திலும் நல்ல பயிற்சியை எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

    சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். ஆனால் தற்போது எனது முதல் முன்னுரிமை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான். அது முடிந்த பிறகு தான் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கவனம் செலுத்துவேன். நான் விரைவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் ஒலிம்பிக் தகுதி சுற்று முடிவைடையும் போது 'டாப்-5' இடங்களுக்குள் வருவதே எனது நோக்கமாகும். அதேநேரத்தில் நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே வரும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்ஷயா சென் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    • உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது.
    • உலக பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.

    இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.

    • உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.
    • சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்-துருவ் கபிலா ஜோடி இந்தோனேசியாவின் முகமது ஹசன்-ஹந்திரா செடியவான் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 8-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மற்றொரு கால் இறுதியில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி ஜப்பான் ஜோடியான கோபயாஷி-ஹோக்கியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

    இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 24-22 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-வது செட்டை ஜப்பான் ஜோடி தனதாக்கியது.

    இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை கைப்பற்ற இரு ஜோடிகளும் போராடினர். இதில் இந்திய ஜோடியின் கை ஓங்கியது.

    அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் மூலம் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.

    அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் இந்திய ஜோடி பதக்கத்தை உறுதி செய்தது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி உறுதிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார்.

    இதில் பிரனோய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    • காலிறுக்கு முந்தைய சுற்றில் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார்.
    • புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 23-ம் தேதி நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    2-ம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவுடன் சாய்னா நேவால் ஆடவிருந்தார். எனினும் காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து இன்று நடைபெற்ற காலிறுக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார். இந்த போட்டியில் புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது.
    • மற்றொரு பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது. எனினும், அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி 18-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.

    • நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் பிவி சிந்து ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார். இந்த தடையை சிந்து கடந்தால் 3-வது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி- யங்குடன் (தென்கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி- யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த். நிகாத் நிகயேனையும் (அயர்லாந்து) லக்‌ஷயா சென், டென்மார்க்கின் விட்டிங்ஹசையும் , எச்.எஸ்.பிரனாய், ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) முதல் சுற்றில் சந்திக்கிறார்கள்.

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் சாய்னா , பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளனர். #WorldBadminton #saina #sindhu
    நன்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளனர். 

    இருவருக்கும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினால் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சுங் ஜி ஹூனை (தென்கொரியா) சந்திக்க நேரிடலாம். அவர் கால்இறுதிக்கு தகுதி பெற்றால் நடப்பு சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்ள வேண்டியது வரலாம்.

    இதேபோல் சாய்னா 3-வது சுற்றுக்குள் நுழைந்தால் 4-ம் நிலை வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) எதிர்கொள்ள வேண்டியது வரலாம். அதில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்க வேண்டிய நிலை வரக்கூடும். #WorldBadminton #saina #sindhu
    ×