search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Badminton Championship"

    • 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி நேரடியாக 2-வது சுற்றில் களம் புகுந்தது.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் புகுந்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-9 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் ஆஸ்திரேலியாவின் கென்னத் ஸி ஹூய் - மிங் சூயன் லிம் இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியது.

    காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன்களான சாத்விக்- சிராக் ஷெட்டி கூட்டணி அடுத்து இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் ஜோடியுடன் மோதுகிறது.

    பெண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட்டில் சாங் சிங் ஹய் - யாங் சிங் டுன் (சீனதைபே) இணையை விரட்டியடித்தது.

    • சிந்து நேரடியாக 2-வது சுற்றில் களம் காணுகிறார்.
    • சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன. சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர்.

    2019-ம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டு வரலாறு படைத்த பி.வி.சிந்துவின் ஆட்டத்திறனில் சமீபகாலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக எந்த பட்டத்தையும் வெல்லாத அவர் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும் அந்த மோசமான நிலைமையை மாற்றுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தன்னை தயார்படுத்தி வருகிறார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் சிந்து, அடுத்தடுத்து ரவுண்டுகளில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து), நம்பர் ஒன் புயல் அன் சே யங் (தென்கொரியா) ஆகிய பலம்வாய்ந்த எதிராளிகளை சந்திக்க வேண்டி வரும்.

    இந்த தடைகளை வெற்றிகரமாக அவர் கடந்தால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா) முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    ஆண்கள் பிரிவில் அண்மை காலமாக சிறப்பாக விளையாடி வரும் 9-ம் நிலை வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனையும் (பின்லாந்து), லக்ஷயா சென், மொரீசியசின் ஜார்ஜெஸ் ஜூலியன் காலையும், இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவையும் சந்திக்கிறார்கள்.

    சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    1977-ம் ஆண்டு முதல் நடக்கும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. அந்த எண்ணிக்கை மேலும் உயருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும்.
    • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும்.

    கவுகாத்தி:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கடந்த பல போட்டிகளில் நான் விளையாடிய விதம் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உலக போட்டிக்காக நன்றாக தயாராகி இருக்கிறேன். கடந்த பல்வேறு போட்டிகளில் எனது ஆட்ட 'பார்ம்' நன்றாக இருந்தது. ஆனாலும் இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்வதுடன் முன்னேற்றமும் காண வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டிக்கு தயாராக விளையாடிய பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அது எனக்கு நிறையை தன்னம்பிக்கையை கொடுக்கும். வரும் வாரத்திலும் நல்ல பயிற்சியை எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலக போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

    சீனாவில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு பிகப்பெரிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். ஆனால் தற்போது எனது முதல் முன்னுரிமை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தான். அது முடிந்த பிறகு தான் ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கவனம் செலுத்துவேன். நான் விரைவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் ஒலிம்பிக் தகுதி சுற்று முடிவைடையும் போது 'டாப்-5' இடங்களுக்குள் வருவதே எனது நோக்கமாகும். அதேநேரத்தில் நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே வரும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். வெற்றி பெற்றால் தானாகவே தரவரிசையில் ஏற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். உத்தரகாண்டை சேர்ந்த 21 வயதான லக்ஷயா சென் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.

    • பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் ‘பை சலுகை’ வழங்கப்பட்டுள்ளது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடைபெறுகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் ஒரே இந்தியரான பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் 'பை சலுகை' வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அடுத்தடுத்து சுற்றுகள் சிந்துவுக்கு கடினமாக அமைந்துள்ளது. அவர் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்திக்க வாய்ப்புள்ளது. அந்த தடையை வெற்றிகரமாக கடந்தால் பலம் வாய்ந்த தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோன், 'நம்பர் ஒன்' புயல் அன்சே யங்கை (தென்கொரியா) ஆகியோரை எதிர்கொள்ள நேரிடலாம்.

    கடந்த ஓராண்டாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் திண்டாடும் சிந்து தொடர்ச்சியான தோல்விகளால் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2019-ம் ஆண்டில் வென்று வரலாறு படைத்த சிந்து மீண்டும் அதே போல் அசத்துவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரங்கள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள். சமீபகாலமாக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 9-ம் நிலை வீரரான பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனெனை (பின்லாந்து) சந்திக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவுடன் சவாலை தொடங்குகிறார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் ரவுண்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலுடன் (மொரீசியஸ்) களம் காணுகிறார். ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதல் சுற்றில் 36-ம் நிலை வீரர் நேட் நுயேனுடன் (அயர்லாந்து) மோதுகிறார்.

    இரட்டையரில் 5 இந்திய ஜோடிகள் ஆடுகிறது. இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ள சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகிய ஜோடிகள் நேரடியாக 2-வது ரவுண்டில் கால்பதிக்கின்றன. அஸ்வினி பாத்- ஷிகா கவுதம், ரோகன் கபூர்- சிக்கிரெட்டி, வெங்கட் பிரசாத்- ஜூஹி தேவாங்கன் ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்.

    • உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது.
    • உலக பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.

    இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார்.

    இதில் பிரனோய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    • காலிறுக்கு முந்தைய சுற்றில் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார்.
    • புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 23-ம் தேதி நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    2-ம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவுடன் சாய்னா நேவால் ஆடவிருந்தார். எனினும் காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து இன்று நடைபெற்ற காலிறுக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார். இந்த போட்டியில் புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது.
    • மற்றொரு பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது. எனினும், அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி 18-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்கியது.
    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நட் குயெனுடன் மோதினார்.

    இதில் கிதாம்பி 22-10, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு வீரரான ஹெச்.எஸ்.பிரனோய், ஆஸ்திரியா வீரர் லூகா விராபருடன் மோதினார். இதில் பிரனோய் 21-12, 21-11

    என்ற செட் கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது.
    • நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொண்டார்.

    இதில் லக்‌ஷயா சென் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி டோக்கியோவில் நடக்கிறது.
    • கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் பி.வி.சிந்து போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.வி.சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் பிவி சிந்து ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார். இந்த தடையை சிந்து கடந்தால் 3-வது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி- யங்குடன் (தென்கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி- யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த். நிகாத் நிகயேனையும் (அயர்லாந்து) லக்‌ஷயா சென், டென்மார்க்கின் விட்டிங்ஹசையும் , எச்.எஸ்.பிரனாய், ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) முதல் சுற்றில் சந்திக்கிறார்கள்.

    ×