search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக பேட்மிண்டன் போட்டி - காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய்
    X

    எச்.எஸ்.பிரனோய்

    உலக பேட்மிண்டன் போட்டி - காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய்

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார்.

    இதில் பிரனோய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.

    Next Story
    ×