என் மலர்
விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி 3-வது வெற்றி பெறுமா? மோகன் பகான் அணியுடன் நாளை மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி நாளை தனது 4-வது ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது.
கோவா:
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித்தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்று உள்ள இப்போட்டியில் சென்னையின் எப்.சி. அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த அணி 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி. அணி நாளை தனது 4-வது ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் சென்னையின் எப்.சி. அணி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. சென்னையின் எப்.சி. அணியில் கோமன், தாபா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
ஏ.டி.கே. மோகன் பகான் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் 3-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
இரு அணிகளுமே பலம் வாய்ந்தது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா-நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தியது. இதன்மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
Next Story






