search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்ல்சென்"

    • உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2 சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடந்தது.
    • சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.91 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

    பாகு:

    பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் வீரர் உலக சாம்பியன் ஆகிவிடுவார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

    பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். சாதுர்யமாக காய்களை நகர்த்தி அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு எதிராளியிடம் இருந்து பெரிய அளவில் நெருக்கடி எதுவும் வரவில்லை. 11-வது நகர்த்தலுக்குள் ராணியையும், இரு குதிரையையும் இருவரும் பரஸ்பரமாக 'வெட்டு' கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு 'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.

    இந்நிலையில் டைபிரேக்கர் ஆட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதனை சுதாரித்து கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.

    இதன் மூலம் ரைபிரேக்கர் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.

    • ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
    • அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும்.

    பாகு:

    சென்னையை சேர்ந்த இளம்கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா- உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் மோதும் பீடே உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.

    இறுதிப்போட்டி 2 ஆட்டங்களை கொண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. 35-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. பிரக்ஞானந்தா-கார்ல் சென் மோதிய 2-வது கிளாசிக்கல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

    வெள்ளைநிற காய்களுடன் விளையாடுவது கார்ல்செனுக்கு சாதகமானது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது. 1 மணி நேரம் நடந்த இந்தப்போட்டி 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு 'டிரா' ஆனது.

    இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி நடக்கிறது. டைபிரேக்கர் 2 ஆட்டங்களை கொண்டது.

    ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும். அவ்வாறு 2 டைபிரேக்கர் ஆட்டங்களும் 'டிரா' ஆகும் பட்சத்தில் அடுத்து 2 ஆட்டங்கள் விளையாடப்படும்.

    இதில் இருவருக்கும் தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 வினாடிகள் கூடுதலாக கிடைக்கும்.

    தமிழக வீரர் பிரக்ஞானந்தா நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்செனை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பாரா? என்று இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு நுழைந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைப்பார்.

    • அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்தார்
    • இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங் லியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) ஜெர்மனியின் வின்சென்ட் நெய்மரை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இன்று கார்ல்சென்-அர்ஜூன் எரிகைசி மோதினர்.

    இறுதி போட்டியின் தொடக்க சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் கார்ல்சென் வெற்றி பெற்றார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் கார்ல்சென் 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளார்.

    இறுதி போட்டியை டை பிரேக்கருக்கு கொண்டு செல்ல இந்திய வீரர் அர்ஜூன் இறுதி போட்டியின் 2-வது சுற்றில் ( 4 ஆட்டம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது
    • உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது சென்னை திகழ்கிறது.

    உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கிறார். அவர் தலைமையிலான நார்வே அணி 3-வது தரவரிசையில் இருக்கிறது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது. வியக்கத்தக்க வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் இரண்டு அணிகளும் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது தமிழ்நாடு அல்லது சென்னை திகழ்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம். இதனால் தான் நானும் இங்கு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×