என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பிரிஸ்பேன் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 220 ரன்கள் குவிப்பு
Byமாலை மலர்10 Dec 2021 11:02 AM GMT (Updated: 10 Dec 2021 11:02 AM GMT)
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணியில் இரண்டு வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் களம் புகுந்தனர். ஹாரிஸ் (3 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற டேவிட் மலானிடம் பிடிபட்டார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன், வார்னருடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.இறுதியில் 94 ரன்களிலும் , லபுஸ்சேன் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மிடில் வரிசையில் களம் கண்டு நிலைத்து நின்று ஆடிய டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். ஒருநாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடி ரன்களை சேகரித்த அவர் 85 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். ஆஷஸ் வரலாற்றில் இது 3-வது அதிவேக சதமாகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு வீரரின் மின்னல்வேக சதமாக அமைந்தது.
2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்த நிலையில் 3- வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் உட் பந்தில் போல்டானார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 104.3 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.
மலன் 80 ரன்களிலும் , ஜோ ரூட் 86 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி , ஆஸ்திரேலிய அணியை விட 58 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X