என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று தென்கொரியாவை எதிர்கொள்கிறது.
    டாங்கே:

    6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

    இந்த போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அணியான இந்தியா, நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அணியான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. தென்கொரியா அணி 2 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி (தாய்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ஜப்பானிடம்) கண்டுள்ளது.

    இரு அணிகளும் 2-வது வெற்றியை ருசிக்க மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
    கொரோனா பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் உடல் ரீதியாகவும், மனதளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டதாக கனடா வீராங்கனை பியான்கா கூறியுள்ளார்.
    டோராண்டோ:

    ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 46-வது இடத்தில் இருப்பவருமான 21 வயது கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகி இருக்கிறார்.

    ‘கொரோனா பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் உடல் ரீதியாகவும், மனதளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். இதனால் என்னால் போதிய அளவு பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அடுத்த சீசனுக்கு தயாராக எனக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த விலகல் முடிவை எடுத்து இருக்கிறேன்’ என்று பியான்கா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அஸ்வின் கபில்தேவின் சாதனையை முறியடித்து 2-வது இடத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி தொடரில் 14 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

    இந்த தொடரில் அஸ்வின் பல சாதனைகளை புரிந்தார். டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 3-வது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்கை முந்தினார். சொந்த மண்ணில் 300 விக்கெட்டை தொட்டார். ஒரு ஆண்டில் அதிக முறை 50 விக்கெட்டுக்கு மேல் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 9-வது தடவையாக தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் கும்ப்ளே. சுழற்பந்து வீரரான அவர் 132 போட்டியில் 619 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அதற்கு அடுத்த படியாக வேகப்பந்து வீச்சாளரான கபில்தேவ் 434 விக்கெட் (131 டெஸ்ட் ) கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார்.

    தற்போது கபில்தேவின் சாதனையை நோக்கி அஸ்வின் செல்கிறார். அதற்கு அவருக்கு இன்னும் 8 விக்கெட் தான் தேவை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அவர் கபில் தேவின் சாதனையை முறியடித்து 2-வது இடத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அஸ்வின் 81 டெஸ்டில் 427 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார்.

    ஒரு இன்னிங்சில் 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதும் , டெஸ்டில் 140 ரன் கொடுத்து 13 விக்கெட் கைப்பற்றியதும் அவரது சிறந்த பந்து வீச்சாகும். 30 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் அவர் வீழ்த்தியுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அஸ்வினுக்கு ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
    அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் பீஜிங் நகரில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளது.
    ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. சீனாவின் பீஜிங் நகரில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்ககேற்க போவதில்லை என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்காது. குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து ஆஸ்திரேலியா விலகுகிறது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
    ஆஷஸ் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ், ஹசிப் ஹமீத் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஆட்டத்தின் முதல் பந்தில் ரோரி பர்ன்ஸ் மிட்செல் ஸ்டார்க்கிடம் போல்டாகினார். அடுத்து இறங்கிய டேவிட் மலானை 6 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட்டை டக் அவுட்டாக்கினார் ஹேசில்வுட். பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் அவுட்டானார்.

    இதனால் இங்கிலாந்து அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஹமீதுடன், ஆலி போப் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதன்படி ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தொடங்க உள்ளது. 

    இங்கிலாந்து அணி வீரர்கள்:

    ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஹசீப் ஹமீது, ஜாக் லீச், டேவிட் மலான், ஆலி போப், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், மார்க்வுட்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: 

    டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபஸ்சேங், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்  (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஜோஷ் ஹேசல்வுட்.

    ஆஷஸ் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சஜித் கான் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார்.
    டாக்கா:

    வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    முதல் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 57 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளிலும் மழையால் ஆட்டம் கடுமையாக பாதிப்பு அடைந்தது. பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 52 ரன்னுடனும், பாபர் அசாம் 71 ரன்னிடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அசார் அலி 56 ரன்னிலும், பாபர் அசாம் 76 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய பவாத் ஆலம், ரிஸ்வான் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர். இந்த ஜோடி 103 ரன்கள் சேர்த்தது.

    பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஆலம் 50 ரன்னும், ரிஸ்வான் 53 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை ஆடியது. பாகிஸ்தான் அணியின் சஜித் கான் துல்லியமாக பந்துவீசினார். இவரது பந்து வீச்சில் நிலைகுலைந்த வங்காளதேசம் விரைவில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    நான்காம் நாள் முடிவில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ஷகிப் அல் ஹசன் 23 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    நியூசிலாந்து தொடரில் அபாரமாக பந்துவீசிய அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேப்டன் விராட் கோலி, அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் வலியுறுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அவர் 14 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    அஸ்வின் 81 டெஸ்டில் விளையாடி 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு இங்கிலாந்து பயணத்தின்போது ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்திய அணி கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டியில் வெற்றிபெற்றது. ஒரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்திய அணி விளையாடிய 4 டெஸ்டிலும் அஸ்வின் ஆடவில்லை.

    அஷ்வின்

    நியூசிலாந்து தொடரில் அபாரமாக பந்துவீசிய அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேப்டன் விராட் கோலி, அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்காததை இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர். அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்பது பற்றி அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்.

    அணிக்கு மீண்டும் திரும்பிய அஷ்வின் தனது திறமையை நிரூபித்தார். தனது முக்கியத்துவத்தை அவர் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.

    இந்திய அணி வருகிற 16-ந்தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடுகிறது. அந்நாட்டுக்கு சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இதற்கான போட்டி அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான போட்டி அட்டவணையில் மாறுதல் செய்யப்பட்டது.

    வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்த டெஸ்ட் தொடர் 26-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்திய அணி வருகிற 16-ந்தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ரோகித் சர்மா, ரி‌ஷப்பண்ட் அணிக்கு திரும்புகிறார்கள். இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த லோகேஷ் ராகுலும் தேர்வு பெறுகிறார்.

    அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ரகானேயின் பேட்டிங் கடந்த காலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்க தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால், சுப்மன்கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், சீனியர் வீரரான ரகானேயின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. அணியின் துணை கேப்டனான அவர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாகவும் பணியாற்றினார். ரகானே நீக்கப்படும் பட்சத்தில் துணை கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைக்கும்.

    நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட வேகப்பந்து வீரர்கள் முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். வீரர்கள் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் விவரம் வருமாறு:-

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன்கில், புஜாரா, ரகானே அல்லது விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ‌ஷர்துல் தாகூர், ரி‌ஷப்பண்ட், விர்த்திமான் சகா, பும்ரா, முகமது ‌ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா அல்லது இஷாந்த் சர்மா.
    சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் அஷ்வின் இரண்டாம் இடம்பிடித்தார்.
    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி வெறும் 43 நிமிடங்களிலேயே இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது.

    நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.

    14 விக்கெட்களை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பு அளித்த ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஷ்வின் தென் ஆப்பிரிக்கா வீரர் காலிசுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் 50 வெற்றிகள் பெற்றதற்கு பி.சி.சி.ஐ. விராட் கோலிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று 1-0 எனும் கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

    ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று 20 ஓவர் போட்டி , 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில்20 ஓவர்  தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்நிலையில், போட்டி முடிந்தபின், இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல் , ஜடேஜா ஆகியோரும், நியூசிலாந்து வீரர்கள் ரசின் ரவீந்திரா , அஜாஸ் படேல் ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது. 

    இதில் ஒற்றுமை என்னவென்றால் ஒருவரது பெயரின் இரண்டாம் பாதியில் இன்னொருவரின் பெயர் தொடங்குவதால் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை அஷ்வின் எடுக்க பிசிசிஐ தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

    நியூசிலாந்து அணிகளுக்காக விளையாடும் ரசின் ரவீந்திரா, அஜாஸ் படேல் ஆகியோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×