என் மலர்
விளையாட்டு
- போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது.
- எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி 10-ம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
அதன்பின்னர் மீண்டும் மழை நிற்காததால் அன்றைய நாளில் போட்டி கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.
357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் நன்றி தெரிவித்துள்ளது ரசிகர்ளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாம் இந்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஏனெனில் மைதானம் முழுவதும் இருக்கும் கவரை அகற்றி போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவது என்பது சாதாரண விசயம் கிடையாது. எங்களுடைய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த போட்டியில் மீண்டும் நாங்கள் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதும் மழையின் தாக்கம் இருந்ததால், மைதானத்தின் தன்மையை கணித்து விளையாடுவது சற்று சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனை சமாளித்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.
அதே போன்று பும்ரா கடந்த 8 முதல் 10 மாதங்களாக சரியான முறையில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவரது பந்துவீச்சும் அசத்தலாக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்துமே பாசிட்டிவாக இருந்தது.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
- இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கொழும்பு:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லாவின் சாதனை ஒன்றை கோலி சமன் செய்துள்ளார். அதாவது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் கோலி தொடர்ச்சியாக 4-வது சதம் விளாசியுள்ளார். ஏற்கனவே இங்கு கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் சதம் ( 128 ரன், 131 ரன் மற்றும் 110 ரன்) அடித்திருந்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இதே மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்து இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லாவின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
- சில நாட்களுக்கு முன்னதாக டோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவதைக் காண முடிந்தது.
- ஆட்டோகிராப் போட்ட டோனி ரசிகர் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி. இவர் சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார். நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையேயான ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தை டோனி நேரில் பார்த்து ரசித்தார். இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானது.
டோனி ரசிகர்களிடம் ஜாலியாக பேசுவது விளையாடுவது போன்று இருப்பதால் அவர் தொடர்பான வீடியோ அதிக அளவில் வைரலாகும்.
இந்நிலையில் தற்போது அது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டோனி ஒரு ரசிகர்கருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆட்டோகிராப் போட்ட டோனி ரசிகர் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கினார். இது எனக்கு தானே எடுத்து வந்தாய் என வேடிக்கையாக பேசினார். உடனே அவரும் சாக்லேட்டை கொடுத்து சிரித்து கொண்டே நகர்ந்தார்.
முன்னதாக டோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவதைக் காண முடிந்தது. இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார்.
- அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி, லோகேஷ் ராகுல் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தனர்.
122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 47-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெண்டுல்கரை அவர் நெருங்கியுள்ளார். டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 3 செஞ்சூரி தேவை.
மேலும் விராட்கோலி 13 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கோலி 267 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்னை தொட்டார். டெண்டுல்கர் 321 இன்னிங்சில்தான் இந்த ரன்னை எடுத்தார்.
சர்வதேச போட்டிகளில் விராட்கோலி 77 செஞ்சூரி அடித்து (டெஸ்ட் 29 + ஒருநாள் போட்டி 47 + 20 ஓவர் 1) 2-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் விராட்கோலி ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களை அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாக்கர் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட்கோலிக்கும், மற்ற வீரர்களுக்கு இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்கையை முடிக்கும் போது ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து இருந்தார். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு நீண்ட காலம் இருக்கிறது. அவர் டெண்டுல்கரின் சாதனையை எளிதில் கடப்பார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர் 100 சதங்கள் அடிப்பார்.
விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.
இவ்வாறு வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.
- இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
- இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன.
மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது. சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
இதே போல் சூப்பர்4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கு இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பாகிஸ்தானின் 3-வது மிக மோசமான குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்
- பாகிஸ்தானின் 2-வது மிகப்பெரிய ரன் வித்தியாச தோல்வியாகும்
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் பல்வேறு மோசமான சாதனைகளில் இடம் பிடித்துள்ளது.
1. இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் நான்காவது ஆகும். 2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பெர்முடாவிற்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும், 2008-ல் ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
2. பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திய 2-வது அணி இந்தியா ஆகும். 2009-ல் இலங்கை 234 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. 2002-ல் ஆஸ்திரேலியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 1992ல் இங்கிலாந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
3. ஆசிய கோப்பையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இது நான்காவது வெற்றியாகும். 2009-ல் இந்தியா ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2023-ல் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2000-ல் வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
4. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் 3-வது குறைந்த பட்சம் இதுவாகும். 1985-ல் 87 ரன்னில் சுருண்டு உள்ளது. 1997-ல் 116 ரன்னில் சுருண்டுள்ளது. தற்போது 128 ரன்னில் சுருண்டுள்ளது. 1984-ல் சார்ஜாவில் 134 ரன்னில் சுருண்டுள்ளது.
5. பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2008-ல் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 2017-ல் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
6. பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த சுழற்பந்து வீச்சு. 1988-ல் அர்சத் ஆயுப் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். 2005-ல் சச்சின் டெண்டுல்கர் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். தற்போது குல்தீப் யாதவ் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்துள்ளார். 1996-ல் அனில் கும்ப்ளே 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்துள்ளார்.
7. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்- தற்போது விராட் கோலி- ராகுல் 233 ரன்கள் எடுத்துள்ளனர். அதன்பின் 1996-ல் சித்து-டெண்டுல்கர் 231 ரன்கள் எடுத்துள்ளனர். 2018-ல் தவான்- ரோகித் சர்மா ஜோடி 210 ரன்கள் எடுத்துள்ளது. 2005-ல் ராகுல் டிராவிட்- சேவாக் ஜோடி 201 ரன்கள் எடுத்துள்ளது.
8. ஆசிய கோப்பையில் இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
- காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் ராகுல்
- விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருந்த போதிலும் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா இமாலய வெற்றியை ருசித்தது. இந்தியா 356 ரன்கள் குவித்த போதிலும், பாகிஸ்தான் 128 ரன்னிலேயே சுருண்டது.
228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் (groundsmen) முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.
நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.
பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தோல்வி குறித்து கூறுகையில் "காலநிலை (Weather) நமது கையில் இல்லை. இருந்த போதிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பந்து வீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் எங்களது சிறந்ததை கொடுக்க முடியவில்லை.
எங்களது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக திட்டம் தீட்டி, ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி, கே.எல். ராகுல் தொடர்ந்து அதை எடுத்துச் சென்றனர். முதல் 10 ஓவர்களில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். இருந்த போதிலும் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை'' என்றார்.
- சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்
- விராட் கோலி 267 இன்னிங்சில் கடந்து சாதனை
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
94 பந்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் சதம் அடித்து 122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
அவர் 98 ரன்களை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் விரைவாக 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார். தற்போது விராட் கோலி 267 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்சிலும், குமார் சங்கக்காரா 363 இன்னிங்சிலும், சனத் ஜெயசூர்யா 416 இன்னிங்சிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
மேலும், 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டியவர் என்ற சாதனையும் இவரது கைவசமே உள்ளது.
மேலும், 47 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- இந்திய அணி 50 ஓவர் முடிவிங் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தனர்.
- பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களா விளையாடிய ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் முறையே 56 மற்றும் 58 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இவர்களை அடுத்து விராட் கோலியும், கே.எல்.ராகுலும் சதம் அடித்து விளாசினர். இதன்மூலம் இந்திய அணி 50ஓவர் முடிவிங் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தனர்.
இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.
பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில் பிசிசிஐ பாராட்டியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், " இன்று (நேற்று) விராட் கோலியும், கே.எல் ராகுலும் 2 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்து அசத்தினர். இந்தியா அபாரமாக ஸ்கோர் செய்தது மக்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அவர்கள் வெளிப்படுத்திய விதம்... இது மிகப்பெரிய சாதனை. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்திய அணிக்கு பல வாழ்த்துக்கள்" என்றார்.
- இந்திய அணியின் சார்பில் விராட் கோலி, கே.எல்.ராகுல் இருவரும் சதம் அடித்த அசத்தினர்.
- 32 ஓவர்களின் 128 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.
சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர்.
அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது.
இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது.
இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.
இதில், பக்கார் ஜமான் 27 ரன்கள், அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்களும், பாபர் அசாம் 10 ரன்களும், இமாம் உல் ஹாக் 9 ரன்களும், ஷாஹீன் ஷாஹ் அஃப்ரிதி 7 ரன்களும், ஷாதாப் கான் 6 ரன்களும், ஃபஹீம் அஷ்ரப் 4 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
- இந்திய அணியின் விராட் கோலி, கே.எல். ராகுல் சதம் அடித்து அசத்தல்.
- பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்த வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது.
இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது. இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- எத்தனை கிராண்ட்ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என மனது சிந்திக்கவில்லை.
- முக்கியமான போட்டி தொடர்களில் சிறந்த டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே சிந்திக்கிறேன்.
போட்டிக்கு பின் ஓய்வு குறித்து ஜோகோவிச் கூறியதாவது:-
முடிந்தவரை விளையாட திட்டமிட்டுள்ளேன். இப்போது எனது உடல் நன்றாக ஒத்துழைப்பதாக உணர்கிறேன். மேலும் எனது குடும்பம் உட்பட என்னை சுற்றியுள்ளவர்களின் ஆதரவும் இருக்கிறது. டென்னிசில் தொடர்ந்து பெரிய தொடர்களில் வெற்றிபெற்று வருகிறேன்.
இந்த விளையாட்டில் இன்னும் என்னால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் இப்போதைக்கு ஓய்வுபெற விரும்பவில்லை. தரவரிசையில் நான் இன்னும் முதலிடத்தில் இருப்பதால், எனது விளையாட்டு பாணியை தொடரவே திட்டமிட்டபட்டுள்ளேன். எனவே டென்னிஸை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளே என்னுடைய மிக உயர்ந்த இலக்காகவும் முன்னுரிமையாகவும் இருந்து வருகிறது. போட்டிகளின் அடிப்படையில் நான் அதிகம் விளையாடுவதில்லை. அதனால்தான் நான் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கான பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறேன்.
ஓய்வு பெறுவதற்கு விருப்பமில்லை என்றாலும், தனது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிய நேரங்களும் தமது வாழ்க்கையில் இருந்ததாக ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.
பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன். டென்னிஸில் உச்சம் தொட்ட பின்பும் எனக்கு என்ன தேவை உள்ளது? இன்னும் எவ்வளவு காலம் விளையாட முடியும்? போன்ற கேள்விகளை என்னை நானே கேட்கிறேன். எத்தனை கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என மனது சிந்திக்கவில்லை. மாறாக, முக்கியமான போட்டி தொடர்களில் சிறந்த டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே சிந்திக்கிறேன்.
என்று ஜோகோவிச் தெரிவித்தார்.






