என் மலர்
விளையாட்டு
- ரோகித் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார்.
- ரோகித்தை கிண்டல் செய்தவர்களை அரையிறுதி போட்டியின் நேரலையில் ஹர்ஷா போக்லே பதிலடி கொடுத்தார்.
மும்பை:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. நாக் அடுட் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் தொடக்க முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. ரோகித் அதிரடியான தொடக்கம் அளித்தார். அவர் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோகித் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.
ரோகித்தை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.
இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
HARSHA BHOGLE :- Hold my vadapav?????? pic.twitter.com/6MaQY5mDhp
— Priya (@PriyaViratian18) November 15, 2023
- இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது கடைசி வரை போராடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:-
முதலில் நான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உண்மையிலேயே இந்த போட்டியிலும் அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
உண்மையில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடிய விதமே அவர்களது வெற்றிக்கு காரணம். இருந்த போதும் நாங்கள் இன்றைய போட்டியில் போராடிய விதத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாக்அவுட் போட்டியில் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம்.
இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் மிகச்சிறப்பாக ஆதரவளித்தனர். ஆனாலும் ரசிகர்கள் இந்திய அணிக்காக மட்டுமே ஒருதலை பட்சமாக இருந்ததாக நினைக்கிறேன். இருந்தாலும் இங்கு இவ்வளவு பேர் மத்தியில் விளையாடியதையும் இந்தியா இந்த தொடரையும் நடத்தியதும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு அணியாக நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாகவே விளையாடி வந்தோம். இந்த தொடரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெஷல் பிளேயர்களாக திகழ்ந்தனர். பவுலர்களும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டனர். ஒரு அணியாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர காத்திருக்கிறோம்.
இவ்வாறு கேன் வில்லியம்சன் கூறினார்.
- உலகக் கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்.
- உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 398 ரன் இலக்கை நோக்கி சென்ற நியூசிலாந்து 327 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தார்.
அவரது சாதனைகள்....
1. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தது இந்திய பந்து வீச்சாளரின் சாதனையாக இருந்தது.
2. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளராகியுள்ளார். சமி தற்போது வரை இந்த தொடரில் 23 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஜாகீர் கான் (2011) 21 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
3. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் (2019) 27 விக்கெட்டுகள் உடன் முதல் இடத்தில் உள்ளார். மெக்ராத் (2007) 26 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
4. உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மெக்ராத் (7/15), பிக்கெல் (7/20), டிம் சவுத்தி (7/33), வின்ஸ்டன் டேவிஸ் (7/51) ஆகியோர் ரன் குறைவாக கொடுத்த அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றனர்.
5. உலகக் கோப்பையில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக ஸ்டார்க் உடன் 3 முறை வீழ்த்தி சமன் நிலையில் இருந்தார்.
6. உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். நான் அதிக அளவில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர், ஸ்லோவர் பந்துகள் பற்றி பேசும்போது, இது என்னுடைய மனதில் இருந்தது.
புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த நான் முயற்சி செய்தேன். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சி செய்தேன். கேன் வில்லியம்சன் கேட்ச்-ஐ தவறவிட்டேன். அதை மோசமாக உணர்ந்தேன். நான் என்னுடைய முழு வேகத்தில் பந்து வீச முயற்சி செய்தேன். அவர்கள் அவர்களுடைய முறைப்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆகவே, வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டேன். விக்கெட் நன்றாக இருந்தது. பனி இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. புற்கள் நன்றாக நறுக்கப்பட்டிருந்தது. பனி இறங்கியிருந்தால், நிலைமை மோசமாக இருந்திருக்கும.
நான் இதை ஆச்சர்யமாக உணர்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய மேடை. நாங்கள் 2015, 2019 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்தோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை, சிறப்பாக மாற்ற பார்க்கிறேன். இனி எப்பொழுது நம் அனைவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை." என்றார்.
- லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது.
- ஆஸ்திரேலியா கடைசி ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.
தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியா, நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஏழு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் டி காக், மார்கிராம், வான் டெர் டுசன், கிளாசன், மில்லர் வலு சேர்க்கின்றனர். டி காக் களத்தில் நின்று விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற இருப்பதால் அணிக்கு எதாவது செய்து விட்டு செல்ல வேண்டும் என நினைப்பார். டி காக் 4 சதங்களும், வான் டெர் டுசன் 2 சதமும், மார்கிராம், கிளாசன் தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ரபாடா, யான்சன், நிகிடி என முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மகாராஜா, ஷாம்சி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையுடன் களம் காண்பார்கள்.
ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த பின், ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். லாபஸ்சேன், சுமித் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினால் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது கடினம். வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 சதங்களும், டிராவிஸ் ஹெட் ஒரு சதமும் அடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் வேகப்பந்து வீச்சில் அசத்துவார்கள். புதுப்பந்தில் ஸ்டார் மாயாஜாலம் காட்டுவார். அதில் தென்ஆப்பிரிக்கா சிக்கினால் அவ்வளவுதான். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜாம்பாதான். இவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்வார்கள்.
இதனால் இரு பெரிய அணிகள் மோத இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
- 398 ரன் இலக்கை நியூசிலாந்து எட்டி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு நிலவியது.
- டேரில் மிட்செல்- வில்லியம்சன் ஜோடி அச்சுறுத்தும் வகையில் விளையாடியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
398 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து பயணித்தபோது, கேன் வில்லியம்சன் (69)- டேரில் மிட்செல் (134) ஜோடி சிறப்பாக விளையாடியது. அப்போது இந்தியாவுக்கு சற்று நெருக்கடி இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், முகமது சமி சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் சாய்த்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
வெற்றி பெற்றபின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன். இங்கே நீங்கள் "ரிலாக்ஸ்" ஆக இருக்க முடியாது. முடிந்த வரை எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும். எங்கள் மீது நெருக்கடி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். பீல்டிங் சற்று சொதப்பிய நிலையில், நாங்கள் பொறுமையாக இருந்தோம். இதுபோன்ற விசயம் விளையாட்டில் நடக்கத்தான் செய்யும. இருந்தபோதிலும், நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
ரன்ரேட் 9-க்கு மேல் இருக்கும்போது, வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். நாங்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை. டேரில் மிட்செல், வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.
நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. ரசிகர்களும் அமைதியான நிலைக்கு சென்றார்கள். இது போட்டியில் நடக்கக் கூடியதுதான். ஆனால் போட்டியை எங்கள் பக்கம் திருப்புவோம் என்ற எங்களுக்கு தெரியும். நாங்கள் அனைத்து வகையிலும் முயிற்சித்தோம். முகமது சமி அபாரமாக செயல்பட்டார். நியூசிலாந்து அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் வீழ்த்தினார். இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கில் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவரால் மீண்டும் களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கோலி வழக்கம்போல் அவரது ஆட்டத்தை வெளிப்படுத்தினா். அனைத்து வீரர்களின் பேட்டிங் சூப்பர். நாங்கள் முன்னோக்கி செல்ல விரும்பும் டெம்ப்லேட் இதுதான்.
இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் 230 ரன்கள்தான் இலக்கு நிர்ணயம் செய்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். 9 போட்டிகளில் என்ன செய்தமோ, அதை செய்ய விரும்பினோம். அவை சிறப்பாக அமைந்தது." என்றார்.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.
இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார்.
முன்னதாக, லதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
45.2 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 28 பந்துக்கு 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் நியூலாந்து அணி இருந்தது.
மிட்செல் சான்ட்னர் மற்றும் சௌதீ ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, சௌதீயுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.
- பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.
தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.
- நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து முடிவு.
- டி20 போட்டி, டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்களை அறிவித்தது பாகிஸ்தான்.
கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இன்று மாலை பாபர் ஆசாம் அறிவித்திருந்தார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார்.
"இது கடினமான முடிவு, ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன்" என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்களை அதன் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்ததில் மகிழ்ச்சி.
- சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, இன்று (நவம்பர் 15) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விளாசி சரித்தர சாதனை படைத்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.

இது குறித்த எக்ஸ் பதிவில், "முதல் முறை இந்திய டிரெசிங் ரூமில் உன்னை பார்த்தேன், நீ என் காலில் விழுந்ததை சக வீரர்கள் நக்கலடித்தனர். அன்று என்னால் எனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், உனது திறமை மற்றும் ஆர்வத்தால் நீ விரைவிலேயே என் மனதை தொட்டுவிட்டாய். ஒரு இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்."
"ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் தான், அதுவும் இத்தனை பெரிய போட்டி- உலகக் கோப்பை அரையிறுதியில்- எனது ஹோம் கிரவுண்டில் முறியடித்தது கேக் மீது ஐஸ் வைத்ததை போன்று இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
- விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
- நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.
இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
- சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார்.
- ரோகித் சர்மா 31 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன் இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்தார்.
இன்று நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
- ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை.
- ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து சாதனை.
உலகக் கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 50 ரன்களை கடப்பது இது 8-வது முறையாகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003-ல் 7 முறை அடித்திருந்தது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.
ஷாகில் அல் ஹசன் 2019-ல் 7 முறையும், ரோகிர் சர்மா மற்றும டேவிட் வார்னர் ஆகியோர் 2019-ல் தலா 6 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
மேலும், 80 ரன்களை தொட்டபோது இந்த தொடரில் 674 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் இதற்கு முன் 2003-ல் 673 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஹெய்டன் 2007-ல் 659 ரன்களும், ரோகித் சர்மா 2019-ல் 648 ரன்களும், டேவிட் வார்னர் 2019-ல் 647 ரன்களும் எடுத்துள்ளனர்.






