என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
50-வது சதம்.. அன்று என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.. இன்று..? சச்சின் நெகிழ்ச்சி
- இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்ததில் மகிழ்ச்சி.
- சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி, இன்று (நவம்பர் 15) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விளாசி சரித்தர சாதனை படைத்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
இது குறித்த எக்ஸ் பதிவில், "முதல் முறை இந்திய டிரெசிங் ரூமில் உன்னை பார்த்தேன், நீ என் காலில் விழுந்ததை சக வீரர்கள் நக்கலடித்தனர். அன்று என்னால் எனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், உனது திறமை மற்றும் ஆர்வத்தால் நீ விரைவிலேயே என் மனதை தொட்டுவிட்டாய். ஒரு இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்."
"ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் தான், அதுவும் இத்தனை பெரிய போட்டி- உலகக் கோப்பை அரையிறுதியில்- எனது ஹோம் கிரவுண்டில் முறியடித்தது கேக் மீது ஐஸ் வைத்ததை போன்று இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn't stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a 'Virat' player. I… pic.twitter.com/KcdoPwgzkX
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்