என் மலர்
புதுச்சேரி
காரைக்காலை அடுத்த விழிதியூர் தி.மு.க. பிரமுகர் சரவணன் பட திறப்பு விழா நடந்தது. இதில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற நாள் முதல், காரைக்கால் மாவட்டத்தை இதுவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதுதான் ஒரு முதல்-அமைச்சர் காரைக்கால் மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். ரங்கசாமி தனது பணிகளை செயல்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
புதுச்சேரியில் நல்லதோர் ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் இடையே உள்ள கருத்து வேறுபாட்டால், மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அலங்கோல ஆட்சி நடக்கிறது.
ரங்கசாமி தனது பணிகளை செய்ய விடாமல் கவர்னர் தடுக்கிறார். முதல்-அமைச்சரின் உத்தரவுகளை அவர் அறிவிக்கிறார்.
கவர்னரின் இந்த செயலை ரங்கசாமி தட்டிக்கேட்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. அவர் தனது அதிகாரத்தை கவர்னரிடம் விட்டுக் கொடுத்து விட்டாரா? அல்லது இந்த அமைச்சரவை, கவர்னரிடம் சரண் அடைந்துவிட்டதா? என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ரங்கசாமி தனது அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, சரணாகதி அடைந்திருப்பது கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி, காரைக்காலில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ கவலை கொள்வதாக தெரியவில்லை. தற்போது 3-வது அலையாக ஒமைக்ரான் வந்துள்ளது. இது டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த மாதம் (பிப்ரவரி) இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
புதுச்சேரியில் ஒமைக்ரான் அதிகரிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியது தான் முக்கிய காரணம். இனியாவது தீவிர பணியாற்றி மக்களை காக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, கண்ணன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுவிட்சர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்டவர் அந்திரே (வயது 32). இவரது பெற்றோர் குஜராத்தில் பல ஆண்டு காலம் வசித்து வந்தனர். பின்னர் ஆரோவில் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த அந்திரே புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கல்வி பயின்றார்.
தற்போது ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி-கருவடிகுப்பம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அந்திரே இ-காம் என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். ஆரோவில் வாசியாகவும் உள்ளார். அவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சித்துரு (38) காவலாளியாக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை அந்திரேயும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டும் என்று காவலாளி சித்துருவிடம் கேட்டனர்.
சித்துரு சிறிது யோசனைக்குப்பின் வீட்டிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை குடித்த வாலிபர்கள் மேலும் தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். அதற்காக கேட்டைத் திறக்கும்படியும் கூறினர்.
சந்தேகமடைந்த காவலாளி கேட்டை திறக்க மறுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வாலிபர் கேட்டின் மேல் ஏறி உள்ளே குதித்து கத்தியை காவலாளி கழுத்தில் வைத்து கேட்டை திறக்கும்படி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கேட்டை திறந்த உடனேயே மற்ற 2 பேரும் உள்ளே புகுந்தனர். அங்கு அறையில் இருந்த பையை தூக்கிச்சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அந்த பையில் 35 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்கள் இருந்தது.
இதுகுறித்து காவலாளி சித்துரு கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் கிடைத்த தகவலின்படி கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் தம்பதி நித்தீஸ்-ஆன்ஸின் ஜெனிஷா. இவர்களது மகள் லீயாண்ட்ரா (வயது 2½). இவள் சிறு வயதில் இருந்தே தமிழ், ஆங்கிலத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை ஒப்புவித்தல், இந்தி எழுத்துகள் மற்றும் எண்களை கூறுவது, உடல் உறுப்புகள், மருத்துவ உபகரணங்களின் பெயர்களை படங்கள் மூலம் சரியாக சுட்டிக்காட்டுவது, சிறுகதைகளை ஆர்வமுடன் சொல்வது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.
இந்த குழந்தையின் அதீத ஞாபக திறனை கண்டு வியந்த அப்துல் கலாம் உலக சாதனை நிறுவனம், லீயாண்ட்ராவை பாராட்டும் விதமாக அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்தது. சென்னையில் நடந்த அந்த நிறுவனத்தின் விழாவில் இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அந்த குழந்தையை விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 30) மீனவர். இவரது மனைவி சந்திரா (28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 31-ந் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அன்பரசன், தனது மனைவியுடன் புதுவைக்கு வந்தார். குழந்தைகளை அன்பரசனின் தாயார் அஞ்சலாட்சி பொறுப்பில் விட்டிருந்தனர்.
கணவன், மனைவி இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது, சந்திரா கடற்கரை அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் அன்பரசன் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சந்திராவை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.அதன்படி புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் (ஒப்பந்த ஊழியர்கள் உள்பட) அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்க வேண்டும். இதில் எந்த விதிவிலக்குமின்றி செயல்படுத்தலாம்.
புதுவை அரசு துறைகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்க அரசு செயலர்கள், துறைத்தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.
இதுகுறித்த அறிக்கையை வருகிற 7-ந் தேதிக்குள் தலைமை செயலகத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா எனும் கொடிய நோய் தொற்றின் மறு உருவமாக ஓமைக்ரான் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இதேபோல் புதுவையிலும் ஓமைக்ரான் தலை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் ஓமைக்ரான் தொற்றை தடுக்கும் விதமாக சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் படி புதுவை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு மறைமலை அடிகள் சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
புதுவை பஸ் நிலையம் அருகே இரவு நேர ஊரடங்கை மீறி ஓட்டலில் ஒருவர் டிபன் விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
எனவே ஓட்டல் உரிமையாளரான முத்தரையர் பாளையத்தை சேர்ந்த முரளி (வயது33) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் முத்தியால்பேட்டை போலீசார் டி.வி.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்த வித அத்தியாவசிய தேவையுமின்றி முகக்கவசம் அணியாமல் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (23)என்பவர் சுற்றிக்கொண்டிருந்தார்.அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுவை பிரியதர்ஷினி நகர் பகுதியில் ஓதியஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளியே கடைபிடிக்காமலும்,முகக்கவசம் அணியாமலும், கொரோனா தொற்றை பரப்பும் விதமாகவும் நின்று கொண்டிருந்த கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த பிரதாப் (24) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் சேதராப்பட்டு போலீசார் மயிலம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஓட்டலில் சமூக இடைவெளியே கடைபிடிக்காமலும்,முக கவசம் அணியாமலும் உணவு பரிமாறிக்கொண்டிருந்த மயிலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் (38) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாகூர் போலீசார் சோரி யாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடலூரை சேர்ந்த பிரவீன் ராஜ் (31), ரவிக்குமார் (21)ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் முகக்கவசம் அணிமாமல் தொற்று பரப்பும் வகையில் சுற்றிக்கொண்டிருந்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் கோரிமேடு மகாத்மா நகர் பகுதியில் சிக்கன் கடையில் சமூக இடைவெளியே கடைப்பிடிக்காமல் கூட்டம் அதிகமாக நின்றது.
இதனால் கடை உரிமையாளரான கோட்டக்குப்பத்தை சேர்ந்த யாசின் (30)என்பவர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் திருக்கனூர் பகுதியில் கே.ஆர்.பாளையம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவர் நடத்தி கொண்டிருந்த சிக்கன் பக்கோடா கடையில் சமூக இடைவெளியே கடை பிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து கடை உரிமையாளர் மீது திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே வாதானூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் சுத்துக்கேணியில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பன்னீர் காரில் சாராயக்கடையை பார்வையிட சென்றார். கொடாத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்ற போது கொடாத்தூர் காலனியை சேர்ந்த கார்த்திக் உள்பட 4 பேர் குடிபோதையில் காரை வழிமறித்தனர்.
பன்னீர் காரை நிறுத்தியதும் கார்த்திக் உள்பட 4 பேரும் காரை விட்டு இறங்குமாறு பன்னீரை தகாத வார்த்தைகளால் திட்டினர். காரை விட்டு இறங்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன பன்னீர் அங்கிருந்து காரை விரைவாக ஓட்டி சென்று விட்டார்.
பின்னர் இதுகுறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






