என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கனூர் அருகே காரை வழிமறித்து சாராயக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்3 Jan 2022 1:50 PM GMT (Updated: 3 Jan 2022 1:50 PM GMT)
திருக்கனூர் அருகே காரை வழிமறித்து சாராயக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே வாதானூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் சுத்துக்கேணியில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பன்னீர் காரில் சாராயக்கடையை பார்வையிட சென்றார். கொடாத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்ற போது கொடாத்தூர் காலனியை சேர்ந்த கார்த்திக் உள்பட 4 பேர் குடிபோதையில் காரை வழிமறித்தனர்.
பன்னீர் காரை நிறுத்தியதும் கார்த்திக் உள்பட 4 பேரும் காரை விட்டு இறங்குமாறு பன்னீரை தகாத வார்த்தைகளால் திட்டினர். காரை விட்டு இறங்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன பன்னீர் அங்கிருந்து காரை விரைவாக ஓட்டி சென்று விட்டார்.
பின்னர் இதுகுறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X