என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய அரசு என்ஜினீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தோப்பு பட்டியை சேர்ந்தவர் பர மேஸ்வரன். பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகள் எழில்ராணி (வயது 31). இவருக்கும், ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் (37) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
தர்மலிங்கம் தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
ஊருக்கு வரும்போது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் எழில்ராணி புகார் செய்தார்.
போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மீண்டும் தர்மலிங்கம் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் எழுதி கொடுத்துள்ள னர்.
இதையடுத்து எழில்ராணி பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து ஊருக்கு வந்த தர்மலிங்கம் குழந்தைகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மலிங்கம் மனைவியை அடித்து உதைத்து மாமனாரின் பெட்டிக்கடையையும் சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் எழில்ராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதையொட்டி, சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று காலை தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மருந்து பொருட்கள் வெடித்து சிதறின.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாமாக இறந்தனர். அவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜமீன்நத்தம்பட்டியில் ஜெயா கல்வி குழும செயலர் விஜயகுமாரி உருவ படம் திறக்கப்பட்டது.
- ஜெயா கல்வி நிறுவனம் தழைத்தோங்கி பலருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது என்று சேர்மன் பேசினார்.
ராஜபாளையம்
சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு வரும் ஜெயா கல்வி குழுமங்களின் நிறு வன தலைவர் பேராசிரியர் கனகராஜின் துணைவியாரும், ஜெயா கல்விக்குழு மங்களின் செயலருமாகிய மறைந்த விஜயகுமாரியின் உருவபடம் திறப்பு விழா அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள ஜமீன்நத்தம்பட்டியில் நடைபெற்றது.
உருவபடத்தை அவரது கணவரும், ஜெயா கல்வி குழுமங்களின் சேர்மனுமான பேராசிரியர் கனகராஜ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ராஜபாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறிய ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் சென்னை திருநின்றவூரில் தொடங்கப்பட்ட ஜெயா கல்வி நிறுவனம் தழைத்தோங்கி பலருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு எனக்கு துணையாய் இருந்தது எனது துணைவியார் விஜயகுமாரி தான்.
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது என்பது உலக மரபு. அதனை எனது வாழ்க்கையில் கண்கூடாக காண முடியும்.. இன்று கண்ணாடிக்குள் நிழலாகவும் எங்களது கண்களுக்குள் நிஜமாகவும் குடிகொண்டிருக்கும் அவரை ஒவ்வொரு தருணங்களிலும் நினைவு கூற தவறமாட்டோம். அவரை பிரிந்து ரணங்களை தாங்கி நிற்கும் எங்களது விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிவர மறுக்கின்றன. காரணம் ஜெயா கல்வி குழுமங்களின் ஆணி வேர் மீது உப்புதுளிகள் பட்டுவிடக்கூடாது என்று தான்.
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் உற்றார், நகர் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவரை கடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
- ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் முகேஷ் (வயது 19). இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார். செல்லம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகேஷ். இவரும் முகேஷும் நண்பர்கள்.
முருகேசுக்கும், சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த கிடாய் என்ற ரஞ்சித்குமாருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இது தொடர்பான பிரச்சினையில் முகேஷ் தனது நண்பருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் முகேஷை தாக்க திட்டமிட்டார். நேற்று காலை முகேஷ் தென்றல் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷை கடத்தி அங்குள்ள ஹாக்கி மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரஞ்சித்குமார், அவரது நண்பர்கள் மணிசங்கர், துரைப்பாண்டி, முத்தையா, ராஜலிங்கம் ஆகிய 5 பேர் பீர் பாட்டிலால் முகேஷ் மண்டையை உடைத்தனர். மேலும் உருட்டு கட்டையால் சரமாரி யாக அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் உள்பட 5 பேரை தேடி வருகின்றார்.
- கொண்டனேரி கண்மாயில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே அமைந்துள்ள கொண்டனேரி கண்மாயில் கல் சிற்பங்கள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினித் தகவல் அளித்தார். அதன் அடிப்ப–டையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வர–லாற்றுத்துறை உதவிப்பேரா–சிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ.கந்தசாமி அப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள கண்மாயில் 2 நடுகல் சிற்பங்க–ளும், ஒரு சதிக்கல்லும் கல் மேடையமைத்து வரி–சையாக நிறுத்தி வைக்கப் பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கல் சிற்பங்கள் அனைத் தும் கி.பி. 17 ஆம் நூற்றாண் டைச் சார்ந்ததாக கருதப்ப–டுகிறது. வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்க–ளுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரன் இறந்தவுடன், மனை–வியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ் வுக்காக எடுக்கப்பட்ட சதிக் கல்லும் காணப்படுகிறது.
முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோ–வில் போன்று வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் சிற்பத்தில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையில் ஈட்டியை பிடித்துள்ளது போன்றும், வலது கையில் இடுப்பில் உள்ள வளைந்து நெளிந்த குறுவாளை கை வளை–யத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள் ளது.
வீரனின் வலது பக்க தலைக்கொண்டை அலங்கா–ரம், வீரனின் உருண்டு திரண்ட கண்களும், முறுக்கு மீசையுடனும், பனை ஓலை காதணிகளை அணிந்தவா–றும் சிற்பம் காணப்படுகிறது.
இரண்டு காதுகள் மற்றும் கைகளுக்கு இடையில் துவாரங்கள் கொண்டு புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது. கழுத்தணி–கலன்களும், கைகாப்பு, கைப்பட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், இரண்டு கால் மூட்டுகளின் பாதுகாப்புக்காக மூட்டுக் கவசமும், காற்சிலம்பு அணிந்துள்ளதையும் இச்சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது நடுகல் சிற்பத்தின் மேல் பகுதி இரண்டடுக்கு மாடகோபுர அமைப்பு போன்று வடிவ–மைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில் குத்தீட்டியின் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரை–யில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது.
வீரனின் இடது பக்க தலைக் கொண்டையலங்கா–ரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூ மாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு பெல்ட் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில், காற்சிலம்புடன் வீரனின் சிற்பம் வடிவமைக்கப்பட் டுள்ளது. மூன்றாவதாக, சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவ–மைக்கப்பட்டுள்ளது.
வலதுபுறத்தில் அமர்ந் துள்ள வீரன் வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி வைத்துள்ள நிலையில், வீரனின் வலது கையில் வாள் ஒன்றை கையில் உயர்த்திப் பிடித்து இருப்பதும், இடது கையை கீழே மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் அமர்ந் துள்ள வீரனின் மனைவியின் வலது கையில் அல்லி மலரை உயர்த்திக் காட்டி இருப்பதும், இடது கையில் மங்கலப் பொருள் ஒன்றை வைத்திருப்பது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள் ளது.
சிற்பத்தின் மேற்பகுதியில் மூன்று கர்ணக்கூடுகளில் சிங்கமுகங்கள் காட்டப் பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களையும் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாயில் நீர் நிரம்பி இருக்கும் பொழுது சிற்பங் கள் நீருக்குள் மூழ்கி இருந் துள்ளது. இங்கு காணப்படும் வீரக்கல் மற்றும் சதிக்கல் சிற்பங்களைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் வீர நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளதை அறிய முடி–கிறது.
ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நடுகற்கள், சதிச்சிற்பம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பல சதிக்கல் சிற்பங்கள் காணப்படுவதால் பழங்காலத்தில் மக்களின் வாழ்வியல் சார்ந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கந்தசாமி கூறினார்.
- நீண்ட நேரம் ஆகியும் மணிக்குமார் வெளியே வராததால் அவர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என எண்ணிய நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.
- மணிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குத்தாலக்கனி-சுமதி தம்பதியினர். இவர்களது மகன் மணிக்குமார் (வயது 26).
பி.ஏ. வரலாறு படித்து முடித்துள்ள மணிக்குமார் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அனைவரிடமும் எளிதில் பழகும் மணிக்குமாருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.
தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மாலை 5.30 அளவில் அந்த கிணற்றின் கரையில் சக நண்பர்களுடன் அமர்ந்து மணிக்குமார் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த தனது நண்பர்களிடம் விளையாட்டாக, இப்போது நான் பின்னால் தவறி கிணற்றில் விழுந்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டவாறு பின்னால் சாய்ந்தவாறு நண்பர்களிடம் நடித்து காட்டியுள்ளார்.
இதில் நிலைதடுமாறிய மணிக்குமார் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து சேரும் சகதியுமாக இருந்த கிணற்றுக்குள் விழுந்தார். மணிக்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதனால் அவர் எப்படியாவது வெளியே வந்து விடுவார் என அவரது நண்பர்கள் கரையில் காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மணிக்குமார் வெளியே வராததால் அவர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என எண்ணிய நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேத்தூர் போலீசார் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சேரும் சகதியும் நிறைந்த கிணற்றில் நேற்று மாலை முதல் இரவு வரை மணிக்குமார் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் உடலை மீட்க முடியவில்லை. இருள் சூழ்ந்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணியை தொடங்கிய தீயணைப்புத் துறையினர் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மணிக்குமாரின் உடலை மீட்டனர்.
அவரது உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறித்துடித்தனர். தொடர்ந்து மணிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டாக கிணற்றில் விழுவது போல் நடித்து காட்டிய வாலிபர், நண்பர்கள் கண் முன்னரே தவறி விழுந்து சேற்றில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நரிக்குடி வாரச்சந்தையில் நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் செயல்படுகிறது.
- சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள் மற்றும் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களின் நெடுங்கால கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் கடந்த மாதம் 29-ந் தேதியன்று வாரந்தோறும் வியாழக்கிழமை யன்று செயல்படும் வகையில் நரிக்குடியில் புதிய வாரச்சந்தை யை தொடங்கி வைத்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி சென்று பயனடைந்து வருகின்ற னர். இந்த நிலையில் நரிக்குடி வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான பண தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- திருச்சுழி மாலையம்மன் கோவில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட துணை மாலையம்மன்- திருமேனிநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி தபசு திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி தபசு திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக சுவாமி-அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
விழாவில் வருகிற 30-ந்தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 31-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. 1-ந்தேதி ஆற்றங்கரையில் தீர்த்த நிகழ்ச்சியும், அன்று மாலை திருமேனிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குண்டாற்றில் எழுந்தருளு வார். அங்கு துணை மாலை யம்மனுக்கு தபசு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடக்கும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கி றார்கள்.
- நரிக்குடி சேர்மனுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது.
- வளர்ச்சி திட்ட பணிகள் நேரில் சென்று கண்காணிக்கப்படுகிறது.
திருச்சுழி
தமிழகத்திலுள்ள அனைத்து ஒன்றிய சேர்மன்களுக்கும் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று கண்காணிக்கும் பொருட்டு புதிய ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு நரிக்குடி ஒன்றியங்களில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று கண்காணிக்கும் பொருட்டு புதியதாக ஸ்கார்பியோ கார் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் வழங்கப்பட்டது. நரிக்குடி ஒன்றிய சேர்மனுக்கு புதிய ஸ்கார் பியோ கார் கொடுத்த நிலையில் தற்போது பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பழைய டாடா சுமோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- ராஜபாளையத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சமந்தபுரம் காஜியார் மினி ஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் லீவா உதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் முகமது பிலால் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செய்யது அலி பாதுஷா வரவேற்று பேசினார். நகரத் தலைவர் முகமது ரபிக் மிஸ்பாகி, மாநில தொழில் நுட்ப இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மண்டல ஒருங்கிணைப்பாளர் அவ்தா காதர் வாழ்த்தி பேசினார்கள். மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லீவாவுதீன் மாவட்ட தலைவராகவும், சையது இப்ராஹிம் மாவட்ட செயலாளராகவும், முகமது பிலால் மாவட்ட பொருளாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜபாளையம் காதர் மைதீன், முகமது அபூபக்கர், பார்கவி தேர்ந்தெடுக்கப் பட்டனர். பொது சிவில் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காதர்மைதீன் நன்றி கூறினார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நோக்கங்களை மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மூத்த நிர்வாகி கணேசன், நகர செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சங்கரி, முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நடவடிக்கையை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் 80 நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- ஊக்கமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
- ஒருங்கிணைப்பாளர் யாஷ்மின் பீவி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் தலைசிறந்த படைப்பு என்ற தலைப்பில் முதலாமாண்டு இளங்கலை மற்றும் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஊக்க மளிக்கும் விரிவுரை நடைபெற்றது. கல்லூரி தலைவர் திலகவதி, ரவிந்தீரன் மற்றும் கல்லூரி செயலாளர் அருணா அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலையில் முதுகலை முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி ஹஜிரா பானு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரிச்சாட் ராஜ் கலந்து கொண்டு பேசினார். முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பிருந்தா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆளுமை வளர்ச்சி குழு ஒருங் கிணைப்பாளர் யாஷ்மின் பீவி செய்திருந்தார்.






