search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்
    X

    டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்

    • டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்.
    • திருச்சுழி அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதி–களவில் கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய இன்ஸ்பெக் டர் மணிகண்டன் தலைமை–யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சத்திர புளி–யங்குளம் பகுதியில் ரோந்து வந்தபோது அங்கு சந்தேகிக் கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசா–ரணை மேற்கொண்ட–னர். இதில் அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் திருச்சுழி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசா–ரித்தனர்.

    இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நாகமுகுந்தங்குடி பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் ரஞ்சித் (23) மற்றும் சிவகங்கை மாவட் டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் சிலம்பரசன் (17) என்பதும், இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக அப்பகு–தியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மேலும் அவர்களை சோதனை மேற்கொண்டதில் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருவரும் திருச்சுழி பள்ளி–மடம் அரசு டாஸ்மாக் கடை–யில் ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×