என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,933 ஆக அதிகரித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு
    நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,677 பேர் அடங்குவர். மொத்தபாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,933 ஆக அதிகரித்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து 10,967 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 1,07,019 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 541 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

    தடுப்பூசி


    நாடு முழுவதும் இதுவரை 121 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 73,58,017 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.

    நாடு முழுவதும் இதுவரை 63.82 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று 9,69,354 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


    தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
    தாயில்பட்டி:

    தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. மேலும் சாத்தூரில் இருந்து தாயில்பட்டி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள துணை மின் நிலைய தரைப்பாலம், குகன்பாறையிலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் உள்ள 2 தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
    திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் - வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (வயது 60). குடிப்பழக்கம் உடையஇவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதில் அவர் மனைவி கோபித்துக் கொண்டு செல்லவே, மனம் உடைந்த ராமசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலைகைப் பற்றிய செ‌ஷன்ஸ்கோர்ட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி திருவானைக் காவல் கீழகொண்டயம் பேட்டை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி லட்சுமி (32). கொரோனா காலகட்டம் காரணமாக அவருக்கு சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் பெரமசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 41). வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நாகை மாவட்டம் பொறையாருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் கோட்டுச்சேரி பூவம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார்.

    அப்போது அவர் தனது செல்போனை ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு பொறையார் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், செல்போன் இல்லாததை அறிந்து, அவர் மீண்டும் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது அங்கு செல்போன் இல்லை.

    இது குறித்த சிவகுருநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாரின் இரவு ரோந்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர், பூவம் ஓட்டலில் சிவகுருநாதன் தவறவிட்ட செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தில் மக்காச்சோள பயிர் காட்டு்பன்றிகளால் சேதம் அடைந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே வீர செல்லையாபுரம் பகுதியில் விவசாயிகள் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போதுள்ள நிலையில் மக்காச்சோள சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் விவசாயிகள் பெரும் சிரமத்தில் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். மக்காச்சோளம் பயிரும் கதிர்விடும் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நிலங்களில் மக்காச் சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளால் பயிர்ச்சேதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையிலும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் பெற்று சாகுபடி செய்துள்ளோம்.

    தற்போது காட்டுப்பன்றிகள் பயிரை சேதப்படுத்தி விட்ட நிலையில் எங்களுக்கு வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் சேதப்படுத்தப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    திருப்பூர் மாநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
    திருப்பூர்’:

    தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. திருப்பூரில் நேற்றிரவு முதல் லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இன்று காலை வரை நீடித்தது.

    திருப்பூர் மாநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. இதே போல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இன்று காலை 7 மணி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:

    திருப்பூர் வடக்கு-9, அவினாசி -14, பல்லடம்-12, ஊத்துக்குளி-18, காங்கேயம்-28, தாராபுரம்-60, மூலனூர்-34, குண்டடம்-40, திருமூர்த்தி அணை-55, அமராவதி அணை-60, உடுமலை-54, மடத்துக்குளம்-46, கலெக்டரேட்-8, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்-14.20, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -57.20, திருப்பூர் தெற்கு 6, கலெக்டரேட் முகாம் அலுவலகம் -25.50.மாவட்டத்தில் மொத்தம் 540.90 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி மற்றும் இறவை பாசனங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதிகளில் நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியவை பருவ மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்படுகிறது. 

    தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை  ஒரு மணி நேரம் பெய்து வருகிறது. இதனால் மானாவாரி சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் உடுமலை அமராவதி அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.  

    4,388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 5ஆயிரம் கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை குளிப்பாட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ஆலங்குளம் அருகே பஸ் இயக்க நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே மேலாண்மறைநாடு கிராமம் உள்ளது. இங்கிருந்து தினமும் காலை 8.45 மணிக்கு ஆலங்குளம் வழியாக ராஜபாளையம் வரை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் மேலாண்மறைநாடு, கோவில் செந்தட்டியாபுரம், செல்லம்பட்டி, கோட்டைபட்டி, வலையபட்டி, பெத்லேகம், கோவிலூர், கண்மாய் பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சென்று வந்தனர்.

    அதேபோல வேலைக்கு செல்பவர்களும், விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த பஸ்சை பயன்படுத்தி வந்தனர்.

    இ்ந்தநிலையில் இந்த பஸ் தொம்ப குளம் வழியாக சுற்றி ராஜபாளையம் சென்றது. இதனால் காலை 8.45 மணிக்கு மேலாண்மறைநாடு கிராமத்தில் இருந்து புறப்படவேண்டிய பஸ் காலை 8.45 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்கிறது.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே மீண்டும் 8.45 மணிக்கு பஸ் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டெப்போ மேலாளர் ஜீவா மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.
    கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
    உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி என்ற மரங்களை உரசி, அதன் மூலம் யாகத் தீயை உருவாக்கினார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெருவெடிப்பில், பூமியில் இருந்து நீர் வெளிப்பட்டு, பெருக்கெடுத்து ஓடியது. அதுவே ‘ஆரணி நதி’ ஆகும். இந்த நதிக்கரை ஓரத்தில், சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களை குறிக்கும் வகையில் 5 ஆலயங்கள் தோன்றின. இவை ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.

    கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. நாம் ஆரணிக் கரையோரம் உள்ள பஞ்ச பிரம்ம தலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    அரியத்துறை

    சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது, கவரப்பேட்டை. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை இருக்கிறது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் - வரமூர்த்தீஸ்வரர், அம்பாள் - மரகதவல்லி. உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது.

    ஆரணி பெரியபாளையம்

    சென்னையில் இருந்து வடக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆரணி. இங்குள்ள பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘வாமதேவபுரம்’ ஆகும். பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரிய ஆலயம் இதுவாகும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலின் மூலவர், சுயம்பு மூர்த்தி ஆவார். மூலவர் பெயர்- பிச்சாலேஸ்வரர், அம்பாள் பெயர் - மரகதவல்லி. இங்குள்ள சிவலிங்கத்தின் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருப்பது விசேஷம்.

    ராமகிாி

    சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுருட்டப்பள்ளி. இந்த ஊரைத் தாண்டியதும் ராமகிரி உள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருக்காரிக்கரை’ என்பதாகும். மூலவர் பெயர் வாலீஸ்வரர். மரகதாம்பாள் என்பது அம்பாள் திருநாமம். சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய ஆலயம் இது. மூலவர் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருக்கிறாா்.

    கருங்காலி

    சென்னை அருகே உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்தான் கருங்காலி திருத்தலம் இருக்கிறது. இது பழங்காலத்தில் ‘நைமிசான்யம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய கோவில் இங்கு உள்ளது. ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம், சிந்தாமணீஸ்வரர். அம்பாள் பெயர் சிவகாமவல்லி. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால், இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடலோடு நதி கலக்கும் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது.

    சுருட்டப்பள்ளி

    சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 112 மி.மீ. மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக காரியாபட்டியில் 37.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் நேற்று கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று மதியம் முதல் மழை பெய்தது. இரவு வரை நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 112 மி.மீ. மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக காரியாபட்டியில் 37.4 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 833.7 மி.மீ. மழை இன்று காலை வரை பெய்துள்ளது.

    மழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் சாத்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த பஸ்களை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    கனமழையின் காரணமாக மாவட்டத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. விருதுநகர் வட மலைக்குறிச்சி கண்மாய் நிரம்பி விட்டதால் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்மாய் திறக்கப்பட்டால் கவுசிகமாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனால் அங்கு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
    தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ளது, பால தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வருவதுண்டு. அப்படி சென்று வர பல நாட்கள் ஆகிவிடும். இதனால் அங்கிருப்பது போலவே இங்கும் ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர்.

    முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்றுதான் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    கோவில் இருக்கும் பகுதி, மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
    ராஜபாளையம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தீபாவளியில் இருந்து ஒரு வாரமாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது.

    பின்பு 2 நாட்கள் நல்ல வெயில் அடித்தது. இந்தநிலையில் மீண்டும் ராஜபாளையம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. 1 மணிநேரம் பெய்த மழை பின்பு நள்ளிரவு வரை சாரல் மழையாக பெய்தது.

    இதனால் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மகப்பேறு மருத்துவமனை, சங்கரன்கோவில் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 6-வது மைல் குடிநீர்த் தேக்கம் நிரம்பியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ராஜபாளையம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீர்த்தேக்கம் நிரம்பியதால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    ×