search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maize cultivation"

      மடத்துக்குளம் :

      உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்றுப்பாசனத்துக்கும் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, 60 ஆயிரம் ஏக்கர் வரையிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதன் சாகுபடிக்கு தேவையான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

      மண்டல பாசனத்துக்கு பிரதானமாக மேற்கொள்ளப்படும் மக்காச்சோள சாகுபடியில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து படைப்புழு தாக்குதலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வளர்ச்சி தருணத்தில் உள்ள இப்பயிரின் நடுப்பகுதியில் தங்கும் படைப்புழுக்கள், வேகமாக செடியின் ஒட்டுமொத்த பாகங்களையும் சேதப்படுத்துகிறது. குறுகிய நாட்களில் தண்டுப்பகுதி பாதித்து செடிகள் சாய்கிறது.இலைகளையும் துளையிட்டு வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கிறது.புழுக்களை கட்டுப்படுத்த 3 முறை மருந்து தெளித்தும் பலன் இருப்பதில்லை. கதிரிலும் இப்புழுக்கள் சேதம் ஏற்படுத்துகின்றன.ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டை வரை சராசரியாக விளைச்சல் முன்பு இருந்தது. படைப்புழு தாக்குதலுக்குப்பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு 10 மூட்டை வரை விளைச்சல் குறைந்து பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இத்தாக்குதல் குறையாமல் தொடர்கிறது.

      நடப்பு சீசனில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி பொருளாதார சேதத்தை தவிர்க்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளைநிலங்களில், நடவுப்பணிகள் துவங்கும் முன்பே இதற்கான விழிப்புணர்வை துவங்கினால் மட்டுமே திட்டம் பலனை தரும். எனவே வட்டார வாரியாக படைப்புழு தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகளை வேளாண்துறையினர் துவக்க வேண்டும்.உழவு முறை, விதைத்தேர்வு, நடவு முறை, வரப்பு பயிர் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த சீசனிலும் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு பாதிப்பு அளிப்பதாகவே இருக்கும்.

      விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தில் மக்காச்சோள பயிர் காட்டு்பன்றிகளால் சேதம் அடைந்துள்ளது.
      விருதுநகர்:

      விருதுநகர் அருகே வீர செல்லையாபுரம் பகுதியில் விவசாயிகள் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போதுள்ள நிலையில் மக்காச்சோள சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் விவசாயிகள் பெரும் சிரமத்தில் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். மக்காச்சோளம் பயிரும் கதிர்விடும் நிலையில் உள்ளன.

      இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நிலங்களில் மக்காச் சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

      எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளால் பயிர்ச்சேதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையிலும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

      இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் பெற்று சாகுபடி செய்துள்ளோம்.

      தற்போது காட்டுப்பன்றிகள் பயிரை சேதப்படுத்தி விட்ட நிலையில் எங்களுக்கு வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் சேதப்படுத்தப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அவர்கள் கூறினர்.
      ×