search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் - வாலிபர் தற்கொலை

    திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் - வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (வயது 60). குடிப்பழக்கம் உடையஇவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதில் அவர் மனைவி கோபித்துக் கொண்டு செல்லவே, மனம் உடைந்த ராமசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலைகைப் பற்றிய செ‌ஷன்ஸ்கோர்ட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி திருவானைக் காவல் கீழகொண்டயம் பேட்டை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி லட்சுமி (32). கொரோனா காலகட்டம் காரணமாக அவருக்கு சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×