என் மலர்
விருதுநகர்
- திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி
வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சுழி, உடையனாம்பட்டி, கிருஷ்ணாபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றில் பல ஆண்டு களுக்கு பின்னர் மழை நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் உடையனாம்பட்டி தரைப் பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ள அபாயத்தை உணராத பொதுமக்கள் தரைப்பாலத்தின் மேல் நடந்தும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்தும் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாலத்தை கடந்தும் வேறு வழியின்றி தங்களது ஊருக்கு செல்கின்றனர்.
மேலும் தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் வழியாக உடையனாம்பட்டி, சென்னி லைக்குடி, தாமரைக்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் குண்டாற்றில் வெள்ளம் செல்வதால் அதனை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் தற்போது வைகை அணை 69 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் விவசாயத்திற்காக விரை வில் தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் தரைப் பாலங்களில் தண்ணீரின் வேகம் அதிகரிக்க கூடும்.இதனால் தரைப்பா லங்களில் ஆற்றை கடக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ள தாகவும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளை சுற்றியுள்ள தரைப்பாலங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Heading
Content Area
- முதியோர் இல்லத்திலும் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் புத்தாடைகளை வாங்கி கொடுத்தார்.
- ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். தனது சட்டமன்ற ஊதியத்தின் மூலம் கொரோனா நிவாரண நிதி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார்.
அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஊதியம் மூலம் புத்தாடைகளை வாங்கி தந்து வருகிறார்.
இந்த ஆண்டு 7-வது முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கண்ட 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கித் தந்தார். இதற்காக அவர் அந்த குழந்தைகளை ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைகள் விரும்பி தேர்வு செய்த புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது 3 மாத ஊதியமான ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்தை செலவு செய்து வாங்கி கொடுத்தார். புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தந்தார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.
ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன் என்றார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.
இதே போல் தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகளை வழங்கினார். அங்குள்ள முதியோர் இல்லத்திலும் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் புத்தாடைகளை வாங்கி கொடுத்தார்.
- விருதுநகரில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.
- மொத்த பலசரக்கு கடைகள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.
விருதுநகர்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் விருதுநகரில் இறுதிகட்ட தீபாவளி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக்கடை களில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.மேலும் நூற்றுக்கணக் கானோர் மெயின்பஜாரை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு கடைகளை அமைத்து வியா பாரம் செய்து வருகின்றனர்.
விருதுநகரில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்ததால் தீபாவளி வியா பாரம் பாதித்தது. இதனால் பொதுமக்கள் காலை நேரங்களில் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர். நேற்று மாலை மழை இல்லை. இதன் காரணமாக மெயின்பஜாரில் தீபாவளி கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள், பெண்கள் என குடும்பத்தோடு வந்து பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதேபோல் பாத்திரக் கடைகள், ரோட்டோர கடைகள், மொத்த பலசரக்கு கடை கள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.
- ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்
- விருதுநகர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை
விருதுநகர்
விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி மற்றும் போலீசார் விருது நகர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில், ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். பயணிகள் எடுத்து வந்த பைகளில் பட்டாசுகள் உள்ளதா? என தீவிர சோதனை செய்து பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது பயணிகள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் பட்டாசுகள் கொண்டு சென்ற மதுரையை சேர்ந்த மோகன்குமார், பிரவீன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வடிவேலு, ஆகியோர் கைது செய்யப் பட்டனர். தொடர்ந்து சிவகாசி, விருதுநகர் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர். ரெயில்களி லும் பயணிகள் யாரும் பட்டாசு எடுத்து வந்துள்ளனரா? என சோதனை செய்தனர்.
பொதுமக்கள் யாரும் ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. விதிகளை மீறி பட்டாசுகளை கொண்டு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் எச்சரித்துள்ளார்.
- பொது நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
- விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் ஷத்ரியா வித்யாசாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு பொது சட்ட நுழைவுத்தேர்விற்கு விண் ணப்பித்துள்ள மாணவர்க ளுக்கான சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, மாதிரி வினாக்க ளுக்கு தீர்வு அளித்து, மாண வர்களுக்கு விளக்கி பாடம் கற்பித்தார்.
பின்னர், அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணு கும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவு ரைகளை வழங்கினார்.
மேலும், இந்த போட்டித் தேர்வில் பெரும்பாலும் வரும் கேள்விகளுக்கு குறைந்தபட்ச புரிதலும், தொடர் பயிற்சியும், கடந் தாண்டு வினாத்தாள்களை ஆராய்ந்தும் தங்களை தயார்படுத்திக் கொண்டால், தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் 15 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடியவில்லை.
- சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.
அப்போது விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்பட வில்லை. தற்போது பல இடங்களில் சாக்கடை நிரம்பி கழிவுகள் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு கமிஷனர் லீனாசைமன் பதிலளித்து பேசுகையில், விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு 12 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வீடு களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டுமென்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலானோர் டெபாசிட் தொகை செலுத்தவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அண்மை யில் விருதுநகரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான நட டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கவுன்சிலர் ராமச்சந்திரன் பேசுகையில், எனது வார்டில் 73 வீட்டின் உரிமைதாரர்கள் டெபாசிட் தொகை கட்டி உள்ளனர். ஆனால் தற்போது வரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவில்லை. எனவே டெபாசிட் பணத்தை திருப்பி தரவேண்டும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தற்காலிகமாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலையில் லட்சுமியாபுரம் -நுர்சாகிபுரம் இடையே ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
இந்த வழியாக நுர்சா கிபுரம், இடைய பொட்டல்பட்டி, அழகு தேவேந்திரபுரம், பாலசுப்பிரமணிய புரம், துலக்கன்குளம், கங்காகுளம், கண்ணார்பட்டி ஆகிய ஊர்களுக்கு பஸ், வாகனங்கள் சென்று வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக லட்சுமியாபுரம் ெரயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் உள்ளது.இதனால் வாகனங்கள், பொதுமக்கள் சுரங்க பாதையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படு கின்றனர். இதனால் அங்கு தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற கோரி அந்த பகுதி பொதுமக்கள் நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் 6 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தண்ணீரில் சிக்கி அரசு பஸ் பழுதடைந்ததால், தண்ணீர் தேங்கி நிற்கும்போது பஸ்கள் இயக்கப்படு வதில்லை. இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.
வட்டாட்சியர் செந்தில் குமார், இன்ஸ் பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் இங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனை கேட்டுக்கொண்ட அதிகாரி கள் தற்காலிகமாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தப் படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மழையால் வாழைக்குளம் கண்மாய் மறுகால் பாய்கிறது.
- கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் மலையடி வாரத்தில் உள்ள கண் மாய்கள், நீர் நிலைகள் நிரம்ப தொடங்கின. வாழை குளம், ரெங்கப்ப நாயக்கன் குளம், வேப்பங்குளம் ஆகிய கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.
இதனால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதையடுத்து வாழைக்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும்அந்த நீரானது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாய்க்கு சென்று சேருவதால் மாவட்டத்தின் பெரிய கண்மாய்களில் ஒன்றான பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விருதுநகர் அருகே 2-வது முறையாக மனைவி மாயமானார்.
- இது தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி பி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ண வேணி கோவில்பட்டி யில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாரிக்கனி என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கணவர் கொ டுத்த புகாரின் அடிப் படையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணி, மாரிக் கனி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் எச்சரித்து கிருஷ்ண வேணியை அவரது கணவருடன் அனுப்பி வைத்த னர். இந்த நிலையில் கிருஷ்ண வேணி மீண்டும் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து ராஜ்குமார் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தேஜஸ்-வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
- மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
விருதுநகர்
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்காவிட்டால் விருதுநகர் வரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டு வேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 14 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. விருதுநகர் மாவட் டத்திற்கு மட்டும் ரூ.87 கோடி வழங்கப்பட வேண்டி உள் ளது. தமிழகத்திற்கு ரூ.2,250 கோடி வர வேண்டி உள்ள தாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அர சுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அடுத்த வாரம் விருதுநகர் வருகை தரும் மத்திய நிதி மந் திரி 100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவை வழங்காவிட்டால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவேன். தீபாவளிக்கு முன்பு இந்த பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.
கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இணைவதை வரவேற்கிறேன். அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இதற்கு நாங்கள் ஆதரவு தருவோம். ஜி.எஸ்.டி.யை பொருத்தமட்டில் ராகுல் காந்தி பிரதமரானால் மாற்றி அமைக்கப்படும். மத்திய அரசு ஏழை மக்க ளுக்கான ரெயில்களுக்கு கட்டணத்தை அதிகரித்துள் ளது வருத்தம் அளிக்கிறது. தேஜஸ் போன்று வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். தேஜஸ்ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்.
ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு வசதியாக கூடுதல் ரெயில் பெட்டி களை இணைப்பதுடன் கட்டணத்தையும் மத்திய அரசு குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர்- மதுரை ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்ககோரி மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அருப்புக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
மதுரை ராமகிருஷ்ணா புரம் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்த் (வயது 36). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில் அவரது நண்பர்கள் மூலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நெடுங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பவர் அறிமுகமானார்.
அவர் ஜெயகாந்த்திடம் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஜெயகாந்த் 2018-ம் ஆண்டு ரூ.6 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. அப்போது ஜான் தேவ பிரியம் சுகாதா ரத்துறையில் அரசு வே லைக்கான ஆணை வீடு தேடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்ற மும் இல்லை.
இதுகுறித்து ஜெயகாந்த் கேட்டபோது, கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் வேண்டுமென தெரி வித்துள்ளார்.
அதையும் நம்பிய ஜெய காந்த் ஜான் தேவபிரிய னின் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரி கிறது. மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகாந்த் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பண த்தை தராமல் மோசடி செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து அவர் பந்தல்குடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ரூ.9 லட்சம் மோ சடி செய்த ஜான் தேவப்பிரியம், அவரது தந்தை பால்துரை சிங், தாயார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மொத்தம் 17 அடி கொள்ளளவு கொண்டதாகும்.
- தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கிருஷ்ணன் கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, சேத்தூர், முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் தமிழகத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவானது. இந்த நிலையில் நேற்று காலையில் மழை சற்று குறைந்து வெயில் முகம் காட்டியது. இதற்கிடையே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் அடிவாரத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவிலுக்கு முன்பாக செல்லும் ஆற்றில் பாறை, மரங்கள் அடித்து வரப்பட்டன. இந்த தண்ணீர் ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு சென்றது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் இரவு அங்கேயே முகாமிட்டு குடிநீரை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத மழையால் முள்ளியாறு, பேயனாறு ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புதுக்குளம், செங்குளம், கருங்குளம், பிரண்டைக்குளம் உள்ளிட்ட ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள 108 கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும், ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மொத்தம் 17 அடி கொள்ளளவு கொண்டதாகும். இங்கு 15 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போது நீர்மட்டம் 13 அடியை எட்டியுள்ளது. தொடர்மழை காரணமாக ராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் பள்ளங்களாக மாறி, போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமானோர் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வத்திராயிருப்பு-99.6, விருதுநகர், ராஜபாளையம்-88, திருச்சுழி-23, காரியாபட்டி-46, ஸ்ரீவில்லிபுத்தூர்-64, சாத்தூர்-25, சிவகாசி-24.4, பிளவக்கல்-41.2, வத்திராயிருப்பு-93.6, கோவிலாங்குளம்-63.9, வெம்பக்கோட்டை-16.2, அருப்புகோட்டை-36. மாவட்டம் முழுவதும் மொத்தம் 610 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் நேற்று காலை முதலே கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. ராமநாதபுரம், பெரியபட்டினம், பனைக்குளம், என்மனங்கொண்டான், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம் உள்ளிட்ட பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-74.60, மண்டபம்-12.40, ராமேசுவரம்-11.50, பாம்பன்-11.90, தங்கச்சிமடம்-23.40, பள்ளமோர்க்குளம்-18, திருவாடானை-10.60, தொண்டி-8.80, ஆர்.எஸ்.மங்கலம்-9.80, பரமக்குடி-58.60, முதுகுளத்தூர்-45, கமுதி-53.60, கடலாடி-65, வாலிநோக்கம்-15.20, தீர்த்தாண்ட தனம்-23.40, வட்டாணம்-21.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 479 மி.மீ. மழை பெய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் கண்மாய், குளங்கள் நிரம்பியுள்ளன. மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், நெற்குப்பை உள்ளிட்ட ஊர்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய, விடிய அடை மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.






