என் மலர்
விருதுநகர்
- லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
- போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
- பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது. கன்னி சேரி புதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இனாம் ரெட்டிய பட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (18), தம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த சரவண குமார் (25) ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார், மேலாளர் கருப்பசாமி(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்ப சாமி கைது செய்யப்பட்டார்.
- சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார்.
- இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தபோதிலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் விலையில்லா உயிர்கள் பறிபோவது தடுக்க முடியாததாகி வருகிறது. அதேபோல் இன்று காலை நடந்த வெடிவிபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விபரம் வருமாறு:-
சாத்தூரை அடுத்த சின்ன கொல்லப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தற்போது விவசாயம் எதுவும் செய்யப்படாத நிலையில் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார். அங்கு ரகசியமாக விவசாய வேலை பார்ப்பதற்கு ஆட்களை அழைத்து வருவது போன்று சிலரை அழைத்து வந்து இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறை முழுவதுமாக இடிந்துவிழுந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
மேலும் இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி பலியானது சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 27) என்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜ கோபாலை தேடி வருகிறார்கள்.
- வெடி விபத்து ஏற்பட்ட அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
- பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த கையோடு பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்டவைகளுக்காக மீண்டும் இந்த ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தொடங்கின.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்திருந்த ஆர்டர்களின் பேரில் பட்டாசு உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியது. இதற்காக அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே ஊழியர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள மருந்து சேமிக்கும் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறையில் 'திடீர்' வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட அந்த அறையில் பற்றிய தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதில் மற்ற 3 அறைகள் உள்பட 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இருந்தபோதிலும் அங்கு பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் உடனடியாக தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை.
இந்த பயங்கர விபத்தில் கன்னிசேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய இருவரும் தரைமட்டமான அறைகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (25) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானோர் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
- காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர் ணமி தினங்களை யொட்டி தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்களும் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்ததின் காரணமாக பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதோடு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது மட்டும் கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.
இதில் மார்கழி 1-ந்தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மழை காரணமாக அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.
வருகிற 23-ந்தேதி தை மாத பிரதோஷ விழா நடைபெற உள்ளது. எனவே அன்று மாலையில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
25-ந்தேதி தை மாத பவுர்ணமி தினத்துடன், அன்றைய தினம் தைப்பூசம் என்பதால் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 26-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது.
தைப் பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அதோடு பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகவனம்(வயது56). இவரது மனைவி முல்லை கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரதாப் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
தற்போது அவர் சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முருகவனம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவருடன் சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.
மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகவனம், பிச்சை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூமாபட்டி இமானுவேல் கீழத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகியோர் கீழே விழுந்தனர்.
இதில் முருகவனம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகவனம் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
- பாறைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், மகா ராஜபுரம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று பகலில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் நள்ளிரவில் பலத்த மழையாக கொட்டியது. தொடர்ந்து விடிய, விடிய நீடித்த மழை இன்று காலை வரை தொடர்ந்தது. நகர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடியது. ராஜபாளையம் பகுதியில் பெய்த மழையால் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியது.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனார்கோவில் ஆற்றில் வழக்கத்தைவிட தண்ணீர் வரத்து சற்று அதிகமாக இருந்தது. இதனால் ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6-வது மைல் குடிநீர் தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது.
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், லாரி, பேருந்து, சிற்றுந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கூட தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், நதிக்குடி, சுப்பிரமணியபுரம், மம்சாபுரம், இடையன்குளம், ரெங்கசமுத்திரப்பட்டி, புலிப்பாறைபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் வெள்ளம் வருவது தெரியாமல் அந்த வழியாக வந்த பெரும்பாலானோர் ஆற்றின் கரையில் கடந்து செல்ல முடியாமல் நின்றனர். தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால், வேறு வழியின்றி மாற்றுப் பாதை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மழை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காயல்குடி ஆறு வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றுடன் இணைகிறது. இதனால் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வெம்பக்கோட்டை அணை நிரம்பிய நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெம்பக்கோட்டை அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெம்பக்கோட்டை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வெள்ளம் சென்றதால் சுற்றுவட்டார பகுதியிலிருந்து மழையே பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-
ராஜபாளையம்-38, ஸ்ரீவில்லிபுத்தூர்-50, சிவ காசி-105, பிளவக்கல்-58, வத்திராயிருப்பு-26.80, கோவிலாங்குளம்-9.20, வெம்பக்கோட்டை-52.40. மாவட்டம் முழுவதும் 343.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
ராஜபாளையம்:
தமிழகத்தில் கடந்த மாதம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள கண் மாய்கள், ஏரிகள் நிரம்பின. சில கிராமங்களில் மழைநீர் புகுந்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 5 மணிக்கு தூரலுடன் தொடங்கிய மழை நேரம் ஆக ஆக கனமழையாக பெய்தது.
இன்று காலை வரை விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ராஜபாளையத்தில் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் குளம் போல் தேங்கியிருந்தது. மழையால் மரங்களும் முறிந்து விழுந்தன. இரவு மின் தடையும் ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, வாகைக்குளம்பட்டியிலும் கனமழை பெய்தது. வாகைக் குளம்பட்டியில் உள்ள வாகைக்குளம் கண்மாய் ஏற்கனவே பெய்த மழை காரணமாக நிரம்பியிருந்தது. நேற்று பெய்த மழையால் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் செல்லும் கால்வாய்களில் அடைப்புகள் எடுக்கப்படாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் புகுந்தது.
வாகைக்குளம்பட்டியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கிராம மக்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகின. இன்று காலை வரை தண்ணீர் வடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணிக்கு லேசான சாரலுடன் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இன்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
குறிப்பாக மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு படிக்கும் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மழை நீரை கடந்து பள்ளி வகுப்பறைக்குள் செல்ல பெரிதும் சிரமப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் சிலர் மழையால் காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்துள்ளதால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
வராக சேத்திரமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாகும்.
இக்கோவிலானது பெருமாளை நினைத்து திருமொழி பாடிய பெரியாழ்வாரும், திருப்பாவை பாடிய ஆண்டாளும் பிறந்து பெருமைக்குரிய தலமாகும். கண்ணனை கரம் பற்ற நினைத்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருப்பாவை பாடி கண்ணனை கரம் பிடித்தார் என்பது ஐதீகம்.
அனைத்து பெருமாள் கோவில்களிலும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை தான் பாடப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மார்கழி நீராட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்கழி நீராட்ட விழாவில் நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரை வெல்லும் சீர் வைபவம் ஆகிய உற்சவங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.
அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் கடந்த 13-ந் தேதி பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தில் வடபத்ர சயனர் சன்னதியில் உள்ள கோபால விலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் தினசரி பலவிதமான அலங்காரங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளி ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. 'கோவிந்தா' 'கோபாலா' கோஷம் முழங்க பெரிய பெருமாளும், அதன்பின் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். அவர்களை பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் வரவேற்றனர். பின்னர் மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவண்ணாமலை சீனிவாசபெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் கோவில், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டன் இடர்தவிர்த்த பெருமாள், சேத்தூர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட பெரு மாள் கோவில்களில் காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
- கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
- வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று இரண்டாவது நாளாக அடை மழை பெய்து வரும் நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சங்கிலியூர் என்ற 80 வயது மூதாட்டி வீட்டில் திடீரென மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அதே பகுதியில் 2 வீடுகளும் இடிந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகளுக்கும், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






