என் மலர்
விழுப்புரம்
- பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
- 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் கூட்டினார்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் நேற்றுமுன்தினம் நடந்த வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர். மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை பங்கேற்றதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார்.
3 நாட்கள் நடைபெற்ற கூட்டங்களையும் அன்புமணி புறக்கணித்தார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்த நிலையில் வன்னியர் சங்கம் ராமதாசுக்கு ஆதரவாக நின்றதால் பா.ம.க.வை முழுமையாக தன் வசமாக்கும் அன்புமணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்று டாக்டர் ராமதாஸ் எந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டாமல் தோட்டத்தில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று பா.ம.க. சமூக நீதிப் பேரவையின் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. டாக்டர் அன்புமணி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும்போது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திப்பார்கள். 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இருவரும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றார்.
அவரிடம் ஏற்கனவே நடைபெற்ற 3 கூட்டங்களிலும் மாநில பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனரே என கேட்ட போது அவர்களும் வருகிற கூட்டத்திற்கு வருவார்கள், வருவார்கள் என 2 முறை அழுத்தமாக தெரிவித்தார்.
- 3-வது நாள் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை.
- பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம்:
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக் கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அண்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.
கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.
மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் பங்கேற்கவில்லை.
2-வது நாளாக பா.ம.க. மகளிரணி, இளைஞர் அணி, மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓரளவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 3-வது நாளாக பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
3-வது நாள் கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்தை புறக்கணித்தார். மேலும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., பா.ம.க.பொருளாளர் திலகபாமா, சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோரும் 3 நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் அன்புமணியின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும்போது,
டாக்டர் ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். சுமூக முடிவு ஏற்படும். இந்த சலசலப்பு விரைவில் தீரும் என்றார்.
மேலும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் அன்புமணி சமரசம் ஆவார் என பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே பா.ம.க. சமூக ஊடக பேரவை, மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பாரா? என பா.ம.க. நிர்வாகிகள் தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராமதாசும் அன்புமணியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்பதே பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே பந்தமங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாலையன் (வயது 50) அரசு பஸ் டிரைவர்.இவர் திருவக்கரையிலிருந்து திண்டிவனம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் திடீரென்று நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார்.
அப்போது கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த கூட்டேரிப்பட்டை சேர்ந்த முனுசாமி மனைவி கவுரி( 42) உட்பட 32 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது.
- எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
திண்டிவனம்:
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது என்று வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வதந்தி வேண்டாம். எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.
- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் கூட்டத்திற்கு வந்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பா.மக. மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸ் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவது எப்படி என பா.ம.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன் என்றார். இந்த கூட்டத்தில் பா.மக. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.மக. எம்.எல்ஏ. சேலம் அருள், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் போன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து டாக்டர் ராமதாசிடம் கேட்ட போது, அவருக்கு அழைப்பு கொடுத்துள்ளோம். வரலாம். வந்து கொண்டிருக்கலாம் என பதில் அளித்தார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பா.ம.க. மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இக்கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் வந்தனர். மேலும் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் நின்ற மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 2026 சட்ட மன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
- வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவ-மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுவரை இப்படிப்பட்ட தேர்ச்சி கிடைத்தது இல்லை. அதுவும் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 167 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பியடிக்க ஆசிரியர்கள் உதவி செய்திருக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த முறைகேடுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் எழுந்துள்ளது.
இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-
செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளை சேர்ந்த 414 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என மொத்தம் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மாதந்தோறும் பள்ளி அளவில் குறுந்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். இதனால் கடந்த அரையாண்டு தேர்விலும் அம்மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் 3,181 மாணவ-மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும்படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆகவே தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,
தேர்வின்போது காப்பியடித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை, மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர் என்று கூறி உள்ளனர்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,
அந்தப் பள்ளியில் மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்போம் என கூறி உள்ளார்.
- பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும்.
- பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,
இந்த கூட்டத்துக்கு கட்சியின் செயல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்சனை ஏதுமில்லை. சட்டசபை தேர்தலில் நிச்சயமாக கூட்டணி உண்டு. 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு கடுமையான போராட்டம் நடத்துவோம்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபடவும் இல்லை, சீற்றம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அதிகமாகி கொண்டுதான் உள்ளது என்று கூறினார்.
இதையடுத்து பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் முற்றுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தந்தை - மகனிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.
* பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும்.
* நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக முழு முயற்சி எடுத்து வருகிறேன்.
* பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.
* விரைவில் ராமதாஸ் - அன்புமணி இருவரும் சந்திப்பார்கள்.
* நேற்று இரவு முழுவதும் ராமதாசுடன் பேசி கொண்டிருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என ஜி.கே.மணி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
- பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.
- செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கூட்டத்திற்கு முன்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
* அனைத்து தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன்.
* பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.
* செயல்தலைவர் அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்.
* செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* 50 தொகுதிகளில் இலகுவாக வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்க உள்ளேன்.
* 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட ஆலோசனை வழங்க உள்ளேன்.
* சிங்கத்தின் கால்கல் பழுதுபடவில்லை, சீற்றமும் குறையவில்லை.
* களைப்படைந்ததால் சிலர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.
* சித்திரை மாநாட்டு பணியால் சிலர் களைப்படைந்திருக்கலாம், அதனால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.
* கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும்.
- கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
திண்டிவனம்:
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.
கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.
மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளத்தில் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்தார்.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் தற்போது வரை கூட்டத்திற்கு வரவில்லை.
இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசும் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே நாளை மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 7 நாட்களுக்கு பா.ம.க. அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை முதலே பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் வந்து சேர்ந்தனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
- மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மரக்காணம்:
மரக்காணம் சால்ட் ரோட்டில் வசிப்பவர் அஸ்கர் அலி (51). இவர் மரக்காணம் புதுவை சாலையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு அஸ்கர் அலி வழக்கம் போல் தனது பாத்திரக் கடையை மூடிவிட்டு தனக்கு சொந்தமான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்க சென்றார்.
இந்நிலையில் இன்று காலையில் எழுந்து அஸ்கர் அலி வெளியில் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை பார்த்து உள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
இதனைப்பார்த்து அஸ்கர் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அஸ்கர் அலி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மர்ம நபரை கண்டுபிடிக்க அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை:
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
புகழ் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவார்கள்.
அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி சாகை வார்த்தடன் தொடங்கியது. இதையொட்டி கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
மேலும் சாகை வார்த்தலையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பாரத பிரசங்க முறை நிகழ்வுகள் கடந்த 8-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு உற்சவர் கூத்தாண்டவர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கூத்தாண்டவர் சுவாமிக்கு கண் திறத்தலும், அதனை தொடர்ந்து திருநங்கைள் அரவானை தங்களது கணவராக ஏற்றுக் கொண்டு திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும் மாலை நடைபெற உள்ளது.
அப்போது கோவில் பூசாரிகளிடம் திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொண்டு கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்து வழிபடுவர்.
கூவாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்வார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல், தேரோட்ட நிகழ்ச்சியில் திருநங்கைகள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.






