என் மலர்
நீங்கள் தேடியது "Vanniyar Reservation"
- பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.
- நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான தி.மு.க. அரசு, இன்னும் இரு மைல்கற்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாட்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
2-ஆவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடம் இருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது.
தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் ஓர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஓர் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வது இது தான் முதல் முறையாகும். இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 14.7.2006-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து 15.9.2007-ம் நாள் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 25.3.2008-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் 243 நாள்களில் அதே ஆண்டு நவம்பர் 22-ம் நாள் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பின் 2009 பிப்ரவரி 26-ம் நாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதைவிட பல மடங்கு, அதாவது 915 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருகிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் முதன்முதலில் அதற்கு வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து, அதனடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் வன்னிய மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 600 எம்.பி.பி.எஸ் இடங்களும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் கிடைத்திருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும் கிடைத்திருக்கும். மேலும் அரசுத்துறைகளில் வன்னியர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகள் கிடைத்திருக்கும். இயல்பாக கிடைக்க வேண்டிய இந்த உரிமைகளை பறித்து தி.மு.க. அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.
தி.மு.க. அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், டா்கடர் அய்யா வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20-ம் நாள், இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம்.
நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.
இதை மனதில் கொண்டு பா.ம.க. வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளித் தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், தி.மு.க.வின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூக நீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன்.
இ்வவாறு அவர் கூறியுள்ளார்.
- கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது.
- எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
திண்டிவனம்:
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது என்று வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வதந்தி வேண்டாம். எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.
+2
- கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார்.
- இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மாமல்லபுரம்:
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வீ.பாரதிதாசனுக்கும் கடிதம் எழுத வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார். திருவிடந்ததையில் அனைத்து கட்சி வன்னியர்களையும் வீடுவீடாக சென்று சந்தித்து பேசி கடிதங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், வரும் 2023-2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்குள் அதாவது வரும் மே.31 ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு தரவில்லை என்றால் 1987ல் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூகநீதி போராட்டம் போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு ஆகியும், தமிழக அரசு இன்னும் கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த இட ஒதுக்கீடு கேட்டு கடிதம் எழுதும் போராட்டம் மக்கள் மத்தியில் இன்று துவங்கி உள்ளது. இது அனைத்து கட்சி வன்னியர் சமுதாய மக்களின் அமைதியான புரட்சி போராட்டமாக வலுவடையும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
அப்போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தீனதயாளன், மகேஷ், ராஜா உள்ளிட்ட பா.ம.க பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
சென்னை:
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு குறித்தும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது.
2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது பின்னர் அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவசர சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறியிருந்தனர்.
இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுகுறித்து அண்மையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அதேபோல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சிலவற்றை நிலுவையில் வைத்திருப்பதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு வழக்கு தொடுத்திருந்த நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், கோர்ட்டில் முன் வைக்க வேண்டிய விவாதங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வில்சன் எம்.பி, சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
- ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
- வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.3.2022 அன்று சுப்ரீம் போர்ட்டில் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ந்தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.1.2023-ந்தேதி வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
- ஆணையத்தின் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடது புறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலதுபுறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.
வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும்.
- 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் முதலமைச்சர்.
சேலம்:
சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
* மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும்.
* வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
* வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இருந்தது.
* மருத்துவர் ராமதாஸ் எடுத்து கூறிய போது எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார்.
* எம்.ஜி.ஆர். ஆட்சியில் வன்னியருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின.
* கலைஞர் கூட வன்னியர்களுக்கு ஏதோ கொஞ்சம் செய்தார்.
* கலைஞர் MBC வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார்.
* ஜெயலலிதா வன்னியர்களுக்கு நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை.
* எடப்பாடி பழனிசாமி காலத்தில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
* நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தால் உள் ஒதுக்கீடு ரத்தானது.
* எங்களிடம் செய்து தருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
* 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் முதலமைச்சர்.
* வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
* நானும் ராமதாசும் பலமுறை முதலமைச்சர் சந்தித்து விட்டோம் என்றார்.






