search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இட ஒதுக்கீடு விவகாரம்... தி.மு.க., அ.தி.மு.க. வன்னியர்களின் வீடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டிய அன்புமணி ராமதாஸ்

    • கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார்.
    • இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வீ.பாரதிதாசனுக்கும் கடிதம் எழுத வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார். திருவிடந்ததையில் அனைத்து கட்சி வன்னியர்களையும் வீடுவீடாக சென்று சந்தித்து பேசி கடிதங்களை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், வரும் 2023-2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்குள் அதாவது வரும் மே.31 ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு தரவில்லை என்றால் 1987ல் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூகநீதி போராட்டம் போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு ஆகியும், தமிழக அரசு இன்னும் கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த இட ஒதுக்கீடு கேட்டு கடிதம் எழுதும் போராட்டம் மக்கள் மத்தியில் இன்று துவங்கி உள்ளது. இது அனைத்து கட்சி வன்னியர் சமுதாய மக்களின் அமைதியான புரட்சி போராட்டமாக வலுவடையும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    அப்போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தீனதயாளன், மகேஷ், ராஜா உள்ளிட்ட பா.ம.க பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×