என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்- முதலமைச்சருடன் ஜி.கே.மணி சந்திப்பு
Byமாலை மலர்3 Nov 2021 6:49 AM GMT (Updated: 3 Nov 2021 8:28 AM GMT)
10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
சென்னை:
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியாத நிலை உள்ளது. இந்த வருடம் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது என்றார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த விவகாரத்தை தமிழக அரசு முறையாக கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... தமிழகம் முழுவதும் பலத்த மழை- பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X