என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcyle"

    • மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மரக்காணம்:

    மரக்காணம் சால்ட் ரோட்டில் வசிப்பவர் அஸ்கர் அலி (51). இவர் மரக்காணம் புதுவை சாலையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு அஸ்கர் அலி வழக்கம் போல் தனது பாத்திரக் கடையை மூடிவிட்டு தனக்கு சொந்தமான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்க சென்றார்.

    இந்நிலையில் இன்று காலையில் எழுந்து அஸ்கர் அலி வெளியில் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை பார்த்து உள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.

    இதனைப்பார்த்து அஸ்கர் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அஸ்கர் அலி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மர்ம நபரை கண்டுபிடிக்க அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

    டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     டி.வி.எஸ். ஐகியூப்

    உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

    டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

    ×