என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் தொடரும் குழப்பம் - ராமதாஸ் பிடிவாதம்
- பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.
- செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கூட்டத்திற்கு முன்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
* அனைத்து தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன்.
* பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.
* செயல்தலைவர் அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்.
* செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* 50 தொகுதிகளில் இலகுவாக வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்க உள்ளேன்.
* 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட ஆலோசனை வழங்க உள்ளேன்.
* சிங்கத்தின் கால்கல் பழுதுபடவில்லை, சீற்றமும் குறையவில்லை.
* களைப்படைந்ததால் சிலர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.
* சித்திரை மாநாட்டு பணியால் சிலர் களைப்படைந்திருக்கலாம், அதனால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.
* கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
இவ்வாறு அவர் பேசினார்.






