என் மலர்
வேலூர்
குடியாத்தம் நடுப்பேட்டையில் நகர தே.மு.தி.க. அலுவலகத்தையும், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூரில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தையும் தே.மு.தி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
தற்போது வரை தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வார்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் பங்கேற்கிறதோ, அந்த கூட்டணி தான் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில் தகுதியை நிர்ணயிக்கும் வகையிலான திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 536 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொய்கை, சேர்க்காடு, கே.வி.குப்பம், கணியம்பாடி, அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. தேர்வு காலை 10 முதல் 12 மணி வரை நடந்தது.
தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் காலை 9 மணி முதல் வரத் தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 9.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து மாணவ-மாணவிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். ஊரக திறனாய்வு தேர்வை 497 மாணவ-மாணவிகள் எழுதினர். 39 பேர் பங்கேற்கவில்லை.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார். தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களாக தினமும் 20-க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடந்தது. சென்னை மண்டல அலுவலர் பவன்குமார் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் (கிருஷ்ணகிரி) பகவத்சிங் முன்னிலை வகித்தார். எல்.அன்.டி இணை பொதுமேலாளர் துரைராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில், தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் புதுமைகளை புகுத்தி வருகிறது.
அதன்படி இந்தாண்டு e-EPIC (இ-எபிக்) என்ற புதிய சேவையை வழங்க உள்ளது. அதன்படி வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவருடைய செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தச் சேவையின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை வேகமாக பதிவிறக்கம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடத்திலும் செல்லத்தக்கதாகும். வாக்காளர் பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானலும் அச்சிட்டுக் கொள்ளலாம். இ-எபிக் கியூ.ஆர்.கோடு மூலம் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம்.
https://nvsp.in/ மற்றும் https://voterportal.eci.gov.in/ ஆகிய இணையதள முகவரி மூலமும், voter Helpline என்ற செல்போன் செயலி மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் சொர்ணலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன் (வயது45). முன்னாள் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக பதவியில் இருந்தவர்.
கட்சிக்கு எதிராக நடந்ததாக கூறி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு தி.மு.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் குடியாத்தம் குமரன் அ.தி.மு.க. கட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் சந்தப்பேட்டை ஆலந்தூர் முனுசாமி தெருவை சேர்ந்த அ.தி.மு.க. 35-வது வட்ட பிரதிநிதி கோல்ட் குமரன் (43). குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இன்று காலை குடியாத்தம் குமரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






